Saint Anthony of Padua. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்புகழ் பெற்ற போர்த்துகீசிய புனிதர். நம்மூரில் புனித அந்தோனியார் என்கிறோமே, அவர்தான்.  Patron Saint of lost things. ஏன் இந்தப் பெயரென்றால் எதாவது காணாமல் போயிருந்தால் இவரை நினைத்து ஜெபித்தால் அந்தப்பொருள் கிடைத்துவிடும். பொருள் - உயர்திணை, அஃறிணை எல்லாமும் இவ்வார்த்தைக்குள் அடங்கும். புயலில் மாட்டிக்கொண்ட, காணாமல்போன மாலுமிகள், மீனவர்கள் அனைவரும் சரணாகதியடையுமிடம் புனிதர் அந்தோனி. 

சுமார் 400 ஆண்டுகளுக்கு கன்னியாகுமரி கடலோரம் போர்த்துகீசிய கப்பல் ஒன்றில் காலரா நோய் கடுமையாகப் பரவி அதிலிருந்த ஏராளமானோர் இறந்துவிட, கப்பலிலிருந்த ஒரு சிற்பி புனித அந்தோனியாரை வேண்டிக்கொண்டு அவரின் சிலை வடிக்கிறார். கொஞ்சநாட்களில் காலரா பாதிப்பு நின்றுவிட மீதியிருந்த அனைவரும் உயிர் பிழைக்கின்றனர். அதற்கு நன்றிக்கடனாக கன்னியாகுமரியின் கடலோரம் அச்சிலையை வைத்து ஒரு சின்ன ஆலயத்தை  ஏற்படுத்துகின்றனர். அந்த ஆலயம் - திருநெல்வேலி உவரியிலிருக்கும் புனித அந்தோனியார் ஆலயம் (கொற்கை நாவல் உவரியை அடிப்படையாக் கொண்டதாக நினைவு). அந்தோனியாருக்கு இன்னுமொரு சிறப்பு உண்டு. பறவைகள், மீன்களுக்கெல்லாம் போதனை செய்தவர். அவர் இயற்பெயரை சொல்ல மறந்துவிட்டேனே...Fernando.
Whoever approaches the Spirit will feel its warmth, hence his heart will be lifted up to new heights
- St. Anthony of Padua
திண்டுக்கல் ஆத்தூர் டேம். செப்டெம்பர் மாதம். காலை சுமார் ஏழு மணி. சங்குவளை நாரைகள் (Painted Storks). ஒரு பெரிய நாரைக்கூட்டம் (இந்நாரைகள் ரெகுலர் விசிட்டர்ஸ்) டேம் மதகருகே உலாத்திக்கொண்டிருக்க, நாலைந்து நாரைகள் மட்டும் சற்று தள்ளி குட்டை போல் தேங்கியிருந்த தண்ணீரில் மீன்களையும் நத்தைகளையும் (பெரிதாக ஒன்றும் இருந்தாக தெரியவில்லை) துரத்திப் பிடித்துக்கொண்டிருந்தன. இந்த நாலைந்து நாரைகளை தூரத்திலேயே கவனித்துவிட்டபடியால் வெகு ஜாக்கிரதையாக, அடிமைப்பெண் எம்ஜிஆர் போல புதர்களுக்கு நடுவில் ஒருமார்க்கமாக குனிந்து குனிந்து குட்டையை நெருங்கிவிட்டேன். சத்தமில்லாமல் அப்படியே உட்கார்ந்தும் விட்டேன். பறவைகளின் புலன்கள் படு ஷார்ப். நாம் கொஞ்சம் சொதப்பினாலும், சுதாரித்துக்கொண்டு படக்கென்று பறந்துவிடும். இரையை தேடிக்கொண்டிருக்கும் பறவைகளை இப்படி பயப்படுத்தி பறக்கச் செய்வது பெரும்பாவம். அந்த ஜாக்கிரதை உணர்வு எப்பொழுதுமே நமக்குத்தேவை.

ஃபோட்டோ எடுப்பதைவிட அப்செர்வ் செய்வதில்தான் ஆர்வம் என்பதால் ஏறக்குறைய கால் மணி நேரம் பைனாகுலர்வழியாக திருப்தியாக அப்செர்வ் செய்தேன். சேறும் சகதியுமான தண்ணீரிலிருந்து அலேக்காக மீன்களை பிடித்து ஜாலியாக உண்டுகொண்டிருந்தன. அலகின் நுனியிலிருந்து  நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. சூரியன் வேறு நேர் எதிர்திசையில் இருந்தபடியால் அட்டகாசமாக அனைத்தையும் கவனிக்க முடிந்தது. எதற்கும் ஃபோட்டோ எடுத்து வைப்போமெயென்று ரெடியாகி...கச்சிதமாக focus செய்வதற்குள் எப்படியோ அனைத்து நாரைகளும் ஒருசில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டு பறக்கத்தொடங்கின. இடது பக்கத்திலிருந்து முதல் நாரை. Zoom செய்து பாருங்களேன். இன்றுவரை இந்த imagery படுதுல்லியமாக நினைவில் உள்ளது. நான்கும் கிளம்பி, அரை வட்டமடித்து, சற்று தொலைவில் எதிர்த்தாற்போலிருந்த திட்டில் போய் இறங்கின. அந்த ஒரு நாரை மட்டும் அத்திட்டிற்கு போய் இறங்கும்வரையில் தலையை என் பக்கமாகவே திருப்பியிருந்தது. பார்வை முழுக்க என்னை நோக்கியே இருந்தது. கோபமா ? எரிச்சலா ? அசூயையா ? எல்லாம் கலந்த கலவையா ?. இதுபோல ஏகப்பட்ட அனுபவங்கள் (எனக்கு மட்டுமல்ல எல்லா birdersகளுக்கும் நிச்சயமாக இருக்கும்) உண்டென்றாலும் இதைப்பற்றி சொல்ல ஒரு ட்ரைலரே காரணம்.
 

அந்த ட்ரைலர் - இதுதான். ட்ரைலர், அதிலிருக்கும் சில ஷாட்ஸ், படத்தைப்பற்றி எதாவது brief - இதைவைத்துதான் படங்கள் பார்ப்பது வழக்கம். Of course, The Ornithologist என்று பெயரிருந்தாலும் ட்ரைலர் பார்க்கும்போதே இது typical bird watching வகை படமில்லை என்று புரிந்துவிட்டது. ஆனாலும் முதல் பதினைந்து நிமிடங்கள் முழுக்க முழுக்க பறவை நோக்குதலைப் பற்றியது. பறவை நோக்குதலின் mood, rhythm, ambience - மூன்றையும் படுதுல்லியமாக அந்த ஆரம்ப பதினைந்து நிமிடங்களில் காணலாம். திரைப்படங்களில் இது வெகு அரிதாகவே நிகழும்.


இந்தப்படம், Stranger by the lakeகை ஞாபகப்படுத்தியது. அந்தப்படமும் இதுபோன்றே ஏன், எதற்கு, எங்கு போன்ற கேள்விகளை தாண்டிய படம். டிபிகல் சர்ரியல் படங்களுண்டு. இது சர்ரியல் படமென்று ஒவ்வொரு காட்சியும் அதனை ஊர்ஜிதப்படுத்துவதுபோல சர்ரியல்நெஸ் முகத்திலடிக்கும். சிலவகை படங்களுண்டு. கொஞ்சகொஞ்சமாக நம்மை உள்ளிழுத்து படம் முடிந்த பிறகும் அந்த trippiness நம்மை விடாது. ஆர்னிதாலஜிஸ்ட் அப்படியான படம். Cinematography அவ்வளவு பிடித்தது.   

Fernando, ஒரு ஆர்னிதாலஜிஸ்ட். ஆற்றின் கரையில் டெண்டமைத்து பறவைகளை  வெகு தீவிரமாக அவன் கண்காணித்துக் கொண்டிருப்பதிலிருந்து படம் ஆரம்பிக்கும். கடுமையான குளிர். பனி மூட்டம். ஆனாலும் ஆனந்தமாக பனிக்கு ஊடே அவ்வளவு குளிர்ந்த நீரில் லயிப்புடன் நீந்திக்கொண்டிருப்பான். பின்பு Kayak எனப்படும் சின்னப் படகை எடுத்துக்கொண்டு ஆற்றில் செல்லத்தொடங்குவான். சற்றென்று Black Stork பறவை கண்ணில்படும். அல்லது பறவையின் கண்ணில் இவன் படுவான். Transfix என்போமே அதுபோல மெய்மறந்து பைனாகுலர் வழியாக அப்பறவையை பார்த்துக்கொண்டிருப்பான் (ஏன் மேலே அந்த ஒரு நாரையைப் பற்றி சொன்னேனென்று இந்தக்காட்சியை காணும்போது புரியும்). சுவாரஸ்யத்தில் ஆற்றின் போக்கை கவனிக்கத்தவற, வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு படகு கவிழ்ந்துவிடும்.

இரண்டு சீன யாத்ரீகர்கள். யார், என்னவென்று ஒன்றுமே தெரியாது. எப்படி அந்தக்காட்டிற்குள் வந்தார்கள்...அதுவும் தெரியாது. அவர்கள், Fernando மயக்கமான நிலையில் கரையொதுங்கி இருப்பதைக்கண்டு, முதலுதவி எல்லாம் செய்து அவனை காப்பாற்றுவார்கள். பயணக்களைப்பில் அவர்கள் ஒரு பக்கமும் இவன் ஒரு பக்கமுமாக தூங்க, மறுநாள் Fernando எழும்போது முழுவதுமாக கட்டப்பட்டுக் கிடப்பான். எல்லாம் அந்த சீனர்களின் வேலை. என்ன காரணம் ?. ம்ஹும். வழக்கம்போல்  ஒன்றும் தெரியாது. அவனை என்ன செய்வதென்று திட்டம் தீட்டுவார்கள் பாருங்கள். அதைக்கேட்டு பேஸ்தடித்து கஷ்டபட்டு அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துவிடுவான். அடுத்தநாள் இரவில் இன்னொரு கூட்டத்தை காண நேரிடுகிறது. அக்கூட்டத்தை எப்படி விவரிப்பது ?. "ஒரு மார்க்கமான" கூட்டம் ?. இத்தனை விஷயங்கள் நடந்தாலும் அவன் முகத்தில் ஒருவித அமைதி இருந்துகொண்டேயிருக்கும். அவ்வளவு களோபரத்திற்கிடையேயும் பறவைகளை கவனிப்பதை விடமாட்டான். அடுத்தநாள் காலை. நாயின் குறைப்பு சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தால், அந்தக் காட்டில் ஒரு ஆட்டுக் கூட்டம். அக்கூட்டத்தின் மேய்ப்பன் பெயர்... என்னவென்று யூகித்திருப்பீர்கள். ஜீசஸ். காது கேட்காத, வாய் பேச முடியாத மேய்ப்பன். அந்த நாயும் அவனுமாக சேர்ந்து ஆட்டுக்கூட்டத்தை மேய்த்துக்கொண்டிருப்பார்கள். அதன் பிறகு நடக்கும் கதையை விவரிப்பது கடினம். பார்த்தாலொழிய புரியாது. படம் முடியும்போது இன்னொரு கதாபாத்திரம் உள்ளே வரும். Anthony. Fernando --> Jesus <-- Anthony, இதுதான் கதை.

Joao Pedro Rodrigues. எப்படி இந்தாள் இவ்வளவு துல்லியமாக பறவை நோக்குதலை கையாள முடிந்தது என்று தேடினால்.."I wanted to be an ornithologist when I was a kid. That was the main desire behind making the film. It’s always been present in me. My parents were both physicists, so I was raised with a scientific and rational way of looking at the world. Before studying cinema, I studied biology. Cinema interrupted this, and in a way I replaced this love of watching and observing birds in the wild and being alone, although I never felt alone because I felt surrounded by nature and living creatures.

I’m a very rational person who’s not religious at all. But I’m very attracted to the idea of how religion is told. What made religion interesting for me was art. I’ve always found it really interesting to work with myths, and not only Portuguese myths. During the Portuguese dictatorship, which ended in 1974, religion was one of the symbols, one of the pillars of the regime. This is why I thought it would be interesting to focus on an essential Catholic symbol for Portugal, Saint Anthony; a saint in a constant state of transformation. In religion itself, sacred paintings are an attempt to give faces and bodies to the saints; beings who are both transcendental and physically powerful. The persons depicted are so physically powerful that they become almost blasphemous. I find this contradiction in religion itself fascinating, the idea of translating something transcendental into images".

ஏன் இந்தப் படம் என்னை ஈர்த்தது ? நானொரு birder என்பதாலா ? நிச்சயமாக இல்லை. போஸ்டின் ஆரம்பத்திலிருக்கும் quote தான் காரணம். படம் அந்த மாதிரி. இன்னொரு காரணம், I never felt alone because I felt surrounded by nature and living creatures...இதை படித்துவிட்டு உணர்ச்சிமிகுதியால் கத்தாத குறை. அந்த மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.  "காடு ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது". இப்படியெல்லாம் சொல்வது படு க்ளீஷேவாகிவிட்டது. ஆனாலும் எனக்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. பறவைகளை பெர்னாண்டோ நோக்குவதுபோல, காடும் அதிலிருக்கும் பறவைகளும் இன்னபிற உயிரினங்களும் அவனை அப்செர்வ் செய்யும். காடுகளின் தனித்துவமே அதுதான். நமக்குத் தெரியாமல் ஆயிரம் கண்கள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கும்; ஆயிரம் நாசிகள் நம்மை மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கும். காடுகளை கண்டபடி romanticize செய்தே பழகிவிட்டோம். காடு, எந்தளவிற்கு கருணைமிக்கதோ அந்தளவிற்கு கொடூரமானதும் கூட. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று எதுவும் கிடையாது. எதுவும் சாத்தியம். அச்சாத்தியங்களின் ருசியை மிகமிக கொஞ்சமேனும் அறிவேன்.
Stargazing \ Skywatching - இவற்றின் மீது பெரிய ப்ரேமை உண்டு. நிமிர்ந்து பார்க்கும்பொழுதுகளில் (அப்போது மட்டுமல்ல, ஆல்மோஸ்ட் எப்போதுமே - மணி பார்க்கும்போதுகூட - reflexive thoughtடாக) முதலில் நினைவுக்கு வருவது இதுதான். We are observing the past.

நிற்க: Arrow of Time தெரியுமில்லையா ?. காலம் - unidirectional. ----> . (நமது) கடந்த காலமென்பது - irreversible; முடிந்தது முடிந்ததுதான். ஒன்றுமே செய்ய முடியாது. அப்பறம் Theory of relativity வந்தது. காலம் - relative term என்றானது. காலம் நம்மை கடந்து (flow) செல்வதில்லை. நாம்தாம் காலத்தை கடக்கிறோம். இதற்கு முன்னரும் இப்படித்தான் இருந்தது, இப்பொழுதும் அப்படியே இருக்கிறது, இனியும் அப்படிதான் இருக்கும். அதற்கு direction என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. நாம் "observe" செய்வதாலேயே காலத்திற்கு பல அர்த்தங்களை கொடுக்கிறோம். Time is an illusion. மற்றபடி மனித ஜந்துக்கள் பற்றியெல்லாம் காலத்திற்கு ஒரு எழவு அக்கறையும் கிடையாது. அதுபாட்டுக்கு இருந்துகொண்டேயிருக்கும்.

ஆனால், ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்றாக வேண்டுமே. அதற்கு நேரம்/காலம் பிடிக்குமல்லவா. வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்க கூடியது. நிலாவிலிருந்து ஒளி பூமிக்கு வர 1.3 விநாடிகளாகும். ஆக நாம் பார்க்கும் நிலா, 1.3 விநாடிகள் முந்தைய நிலா. நிலாவில் எதாவது நடந்திருந்தால் 1.3 வினாடிகள் கழித்தே அந்நிகழ்வை நாம் அப்செர்வ் செய்கிறோம். மார்ஸ் - பூமியிலிருந்து 14 light minutes தொலைவில் உள்ளது. நாம் அப்செர்வ் செய்யும் மார்ஸ், 14 நிமிடங்கள் முந்தைய மார்ஸ். நமது அண்டைய கேலக்ஸி, Canis Major Dwarf - 25000 ஒளியாண்டுகள் தள்ளியிருக்கிறது. நாம் பூமியிலிருந்து எடுக்கும் Canis Major Dwarfன் இமேஜஸ் அனைத்தும் 25000 ஆண்டுகள் முந்தையது. இரவில் நாம் பார்க்கும் பல நட்சத்திரங்கள், பால்வீதிகள்...அனைத்தும் பல நூறு, ஆயிரம், மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளவைகள். மிகமிக பவர்ஃபுல்லான ஹபிள் டெலஸ்கோப் போன்றவைகள் கொண்டு நாம் observe, record செய்யும் அனைத்து வானியல் நிகழ்வுகளும் "past tense"இல் நடந்தவைகள். நமக்கு வந்துசேர இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அவ்வளவே. இவ்வளவு ஏன் நாம் தினசரி பார்க்கும் எல்லாமுமே nanoseconds வித்தியாசத்தில் "முந்தையது". ஒரு ட்விஸ்ட். நாம் எப்படி பல நட்சத்திரங்களின் மில்லியன் வருடத்திற்கு முந்தைய காலத்தை நோக்குகிறோமோ, அதுபோல 13.8 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் எதாவது ஒரு கோளிலிருந்து ஆர்வக்கோளாறு ஜந்துக்கள் நமது பூமியின் big bangகை observe செய்து கொண்டிருந்தால், இல்லை சில ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் இன்னொரு கோளிலிருந்து பூமியின் பரப்பை யாராவது ஆராய்ந்து கொண்டிருந்தால் ? What if the observer is the observed ? இப்படி பலவற்றையும் யோசித்து யோசித்து....மனித மூளை எப்பேர்ப்பட்ட விஷயங்களை எல்லாம் ஒருநொடிப்பொழுதில் contemplate செய்கிறது, தினமும் நம்மையறியாமல் எத்தனை கோள்களின் கடந்த காலங்கள் நம் தலைக்கு மேலே மின்னிக்கொண்டிருக்கிறது போன்ற பலவாறான மிதப்பில் திரிந்து கொண்டிருந்தேன். Wait. Dung Beetle என்றொரு (எனக்குப் பிடித்த) வகை வண்டுகள் உண்டு. கொச்சைத்தமிழில் "சாணி வண்டு". தூய தமிழில், ஊர்ப்பக்கம் சொல்வது - பீயுருட்டி வண்டு. முதலில் லாவகமாக சாணியை உருட்டியாக வேண்டும். அப்பறம் சரியான வேகத்தில், சரியான திசையில் - அதுவும் தன்னைவிட 1000 மடங்கு எடைகொண்ட - உருண்டைகளை உருட்டிக்கொண்டு செல்ல வேண்டும். . இருக்கும் சின்ன கண்களை உருண்டை சுத்தமாக மறைத்துவிடும். பின் எப்படி சரியான திசையில் அவ்வண்டுகள் செல்கின்றன ? அட முதலில் எப்படி திசைகளை கண்டுபிடிக்கின்றன ? நட்சத்திரங்கள், பால்வீதியை பயன்படுத்தி (Dung beetle is a master of celestial navigation). ஒரு snapshot போல நட்சத்திரங்களை மூளையில் பதிய வைத்துக்கொண்டு - பல மில்லியன் வருடங்களாக - இந்த வேலையை செய்கின்றன. Fucking ridiculous. இது தெரிய வந்தபோது, i was personally offended.


எனக்குப் பிடித்த, என்னை பாதித்த சில கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை எவ்வித வடிவத்திற்குள்ளும் அடைக்க முடியாது. Formless, shapeless...like water. Genreless. அப்படியான ஒரு ஆள். Sun Ra. லிட்ரலாக, தன்னை Saturnனிலிருந்து - இசையின் மூலம் மக்களை விடுவிக்க, குறிப்பாக கறுப்பின மக்களை - வந்த ஆள் என்று உறுதியாக நம்பியவர். Eccentric. ஆரம்ப காலங்களில் வழமையான ஜாஸ் கலைஞராகத்தான் இருந்தார் (ஜாஸ் இசைக்குள் electric keyboards, synthesizers போன்றவைகளை கொண்டவந்த பெருமை இவரையே சாரும்). 1950களில் ஜாஸ் இசை பெரிய மாற்றத்தை சந்தித்தது. வெள்ளையர்கள் வழக்கம்போல ஜாஸ் இசையையும் appropriate செய்ய ஆரம்பிக்க அதற்கு பதிலடியாக Free Jazz movement தொடங்கியது. இன்னொரு பக்கம், USSR - US Space explorations. இதெல்லாம் சேர்ந்து Sun Ra போன்ற ஆட்களை பெரிதும் பாதிக்க - அப்படிப் பிறந்ததுதான் cosmic jazz. 1960களில் ஒரு பக்கம் மூன் லேண்டிங் மற்றொரு பக்கம் சைக்கடெலிக் இசை..எல்லாம் சேர்ந்து cosmic jazz - Afrofuturismமாக மாறுகிறது. அதன் இன்னொரு நீட்சி ராக் இசையில் - Pink Flyod போன்ற ஆட்களால் - நடந்தது. Space Rock (thus entered David Bowie). 

Sun Ra. அவரைப்பற்றி மினி தொடரே எழுத வேண்டும். அப்பேர்ப்பட்ட மனிதர். இப்படி ஒரு பத்திக்குள் அவரைப்பற்றி சுருக்கமாக எழுதியதே எனக்கு உறுத்தலாக உள்ளது. Pink Flyodடிலிருந்து Sonic Youth வரை அவர் வசீகரித்த ஆட்கள் பலருண்டு. Interstellar Overdrive, Sun Raவின் தாக்கம் பலமாக இருக்கும். காரணம் - Syd Barrett, சன் ராவின் ரசிகர். சன் ரா பற்றி நல்ல அறிமுகத்திற்கு - Space is the place.


ஐந்து வருடங்கள் முன்பு தற்செயலாக - In the castle of my skin - கேட்டேன். இதுபோல பல African jazz இசையை கேட்டிருந்தபடியால், இசையைவிட நடனம் ரொம்பவே ஈர்ப்பை ஏற்படுத்தியது. இவ்வகை நடனத்தின் பெயர் - Pantsula.1950களில் தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராக தோன்றிய நடன வகை. Political statement (Pantsulaவிற்கென்றே பிரத்தியேக dress code கூட உண்டு). வீடியோவைப் பார்த்தால்....இசையும் நடனமும் ஒன்றுக்கொன்று நேரெதிராக இருப்பதைக் காணலாம். இசை - கச்சிதம், நடனம் - ஒழுங்கற்ற ஒழுங்கு. பாடலின் பெயரோடு சேர்த்துப்பார்க்கும்போது அம்முரண்பாட்டின் தன்மையை புரிந்துகொள்ள முடிகிறது.

அப்படியாக Sons of Kemetல் ஆரம்பித்து, The Comet is coming அங்கிருந்து Melt Yourself Down கடைசியாக Shabaka and the Ancestors வரை கேட்டாயிற்று. அனைத்திற்குமான மையப்புள்ளி - Shabaka Hutchings. மேற்கூறிய அனைத்து bandகளின் லீடர்/அசெம்ப்ளர். African history, cosmology, afrofuturism, politics - இப்படி எல்லாவற்றையும் இசையில் வெளிப்படுத்துவதென்பது எளிதான விஷயமல்ல. எப்படி Kevin Parker ஒரு ஆர்டிஸ்ட்டாக என்னை ஈர்த்தாரோ அப்படித்தான் ஷபாகா ஹட்சிங்க்ஸும். ஷபாகா, பிறந்தது இங்க்லாந்தில் என்றாலும் ஆறு வயதில் பார்பெடஸ்க்கு இடம்பெயர நேரிடுகிறது. ஒன்பது வயதில் கிளாரினெட், பத்து வயதில் சாக்ஸஃபோன் என்று சிறுவயதிலிருந்தே - மிகமிக ஏதேச்சையாக நடந்ததாக சொல்கிறார் -   இசைக்கருவிகளைக் கற்க ஆரம்பிக்கிறார். அதுவும் சுய கற்றலாக. இசைக்கருவிகளா முக்கியம். கலிப்சோ, ரெகே போன்ற கரீபியன் இசை அவரைச் சுற்றி சுழட்டியடிக்க தொடங்கியதும் அங்கிருந்துதான். கூடவே Fela Kuti, Miles Davis, Sun Ra, Jimi Hendrix என்று பல ஆளுமைகளால் ஈர்க்கப்படுகிறார். ஷபாகாவை பெரிதும் அசைத்த இன்னொரு முக்கிய இசை வடிவம் - ஹிப்-ஹாப். Notorious Bigன் flow தன்னை பெரிதும் பாதித்ததாகவும் அந்த flowவை தனது சாக்ஸஃபோனில் கேட்கலாமென்று ஒரு இன்டர்வியுவில் கூறியுள்ளார். 2010களில் இங்க்லாந்திற்குத் திரும்பி, Sons of Kemet குழுவை 2011ல் ஆரம்பிக்கிறார். Kemet என்பது பண்டைய எகிப்தின் பெயர். "Black land" என்று அர்த்தம். நைல் நதியின் தயவால் வளம்பெற்ற கரிசல் மண்ணின் காரணமாக அந்தப்பெயர். முக்கிய விஷயம் - Sun Ra Arkestraவிலும் பங்கேற்று இசைத்திருக்கிறார் (சன் ராவின் இறப்புக்கு பின்னரும் அவரது குழுவினரால் இன்றும் நடத்தப்படுகிறது). 2011 - Sons of Kemet; 2013 - The Comet is coming; 2018 - Shabaka and the Ancestors. எட்டு வருடங்களில் மூன்று இசைக்குழுக்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு வகை. ஆனால் அந்த இசைகளின் ஆன்மா ஒன்றே ஒன்றுதான். விடுதலை. கறுப்பினத்தவர்கள் மீதான வரலாற்று கட்டமைப்பிலிருந்து விடுதலை; பூமியிலிருந்தும், பூமியின் கால - நேரத்திலிருந்தும் விடுதலை; ஜாஸ் இசையின் கட்டமைப்பிலிருந்து விடுதலை.


ஏனென்று தெரியவில்லை. எனக்கு சாக்ஸஃபோன் கேட்கும்போதெல்லாம் யானைகள்தான் ஞாபகத்திற்கு வரும். கம்பீரம்; மிடுக்கு; தான் பலசாலி என்பதை காட்ட வேண்டிய அவசியமில்லாதது; எத்துனை விலங்குகள் கூட்டமாகயிருந்தாலும் யானையை மறைக்க முடியுமா ? இப்படி எனக்குத்தோன்றிய குழந்தைத்தனமான ஒப்பீடுகளைத்தாண்டி - யானைகளின் பிளிறல்களுக்கு கோபம், எரிச்சல், மகிழ்ச்சி, அழுத்தம் - போன்ற அடிப்படை உணர்வுகளைத்தாண்டி பல காரணங்கள் உண்டு; பலவகைகள் உண்டு. What Elephant Calls Mean. அதுபோலவே தேர்ந்த சாக்ஸஃபோன் கலைஞனின் இசை - அழும்; சிணுங்கும்; கதறும்; சீறும்; இரக்கம் காட்டும்; சிரிப்பு காட்டும்; சாந்தப்படுத்தும்; தன்னிலை மறக்கச் செய்யும்; காலம் கடத்தும். மிகைப்படுத்தலோ வெற்றுவிவரிப்புகளோ கிடையாது. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு ஜாஸ் ஆல்பமை உதாரணம் சொல்ல முடியும். (ஆனால் - typical, "கேட்க சந்தோசமா இருக்கு...ரொமான்டிக்கா இருக்கு..." டைப் -  lounge/liftகுள் போட லாயக்கான - ஜாஸ்/சாக்ஸஃபோன் இசையென்றால் எனக்கு அலர்ஜி).  

Sons of Kemet: Your Queen Is A Reptile


Sons of Kemetன் கோபம் அவர்களின் முதல் ஆல்பத்தின் முதல் இசைக்கோர்ப்பிலிருந்தே தொடங்கிவிட்டது. Your Queen Is A Reptile இக்குழுவின் மூன்றாவது ஆல்பம். இந்த ஆல்பத்திலிருக்கும் "க்வீன்கள்" யாரும் பிறப்பால் வந்த க்வீன்களல்ல. ஆல்பத்தின் ஆரம்பபுள்ளியாக ஷபாகா குறிப்பிடுவது "It’s like what Sun Ra said: People who are oppressed have the power to create their own mythological structures. I started thinking of the myths in our society, the royalty that dominates our thinking so that we don’t even think of them as myths". குறிப்பாக feminine spirit தான் இதற்கு மிகப்பொருத்தமானதாக இருக்குமென்று முடிவு செய்து - சோஷியல் மீடியாவில் எந்தெந்த ஆப்ரிக்க பெண்களைப்பற்றி பேசுவதென்ற கேள்வியின் மூலமாக ஒன்பது பெண்மணிகளை தேர்வு செய்கிறார். கூடவே பத்தாவது ஆளாக - 103 வயதான தனது பாட்டியையும். ஒன்பது பேரில் Harriet Tubman, Angela Davis இருவரைப்பற்றி ஓரளவு தெரியும். மற்ற யாரைப்பற்றியும் ஒன்றுமே தெரியாததால் - அவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள பல விஷயங்களைப் படித்தபின் - இன்னும் அதிகமாக ஆல்பத்தை ரசிக்க முடிந்தது. Nanny of the maroons பற்றி படிக்கும்போதே...Nannyயின் நிஜப்பெயர் கூட யாருக்கும் தெரியாது - மீட்பர் என்போமே - அதுமாதிரியான கதை. Harriet Tubman கதை தெரியும்தானே ? அப்படியானால் ஏன் My Queen is Harriet Tubman இசைக்கோர்ப்பு franticக்காக இருக்கிறது என்பது புரிந்துவிடும். My Queen is Doreen Lawrenceயில் தெறிக்கும் கோபம் எங்கிருந்து வந்தது ? அதன் காரணமென்ன ? Stephen Lawrence - 1993ல் லண்டனில் இனவெறியினால் படுகொலை செய்யப்பட்டவர். அவரது தாயார் - Doreen Lawrence. மகனை இனவெறியால் கொல்லப்பட்டபோதிலும் துவண்டு விழுந்துவிடாமல் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பவர். My Queen Is Yaa Asantewaa, "முன்னொரு காலத்துல..." என்று ஆரம்பிக்கும் folklore கதைக்கு ஒப்பானது. ஒரு தேர்ந்த கதைசொல்லி போல் சாக்ஸஃபோன் எசப்பாட்டு பாடுவதைக் கேட்கலாம். இந்த எசப்பாட்டு அம்சம் - call and response - ப்ளூஸ் முதற்கொண்டு பல இசைவடிவில் உண்டு. கரீபியனில் வளர்ந்தவர். ரெகே இல்லாமலா...My Queen Is Mamie Phipps Clark, ரெகெ வடிவில் கிதாருக்கு பதில் சாக்ஸஃபோன். Mamie Phipps Clark ஒரு சைக்காலஜிஸ்ட் என்பதால் - இசையும் சைக்கடெலிக்காக இருக்கிறதோ ?. இந்த ஆல்பத்தை பற்றிய ஷபாகாவின் ஒரு இன்டர்வியூவில் படித்தது "Charlie Parker (jazz saxophonist) - இசையில் ஒரு பாக்ஸரின் நேர்த்தியிருக்கும். அப்பர் கட்ஸ், லோயர் கட்ஸ் போல அவ்வளவு கச்சிதம். அதை இந்த ஆல்பத்தில் கொண்டுவர நினைத்தேன்". My Queen Is Albertina Sisulu கேட்கும்போது இதனர்த்தம் புரியும். 


ஆல்பத்தின் liner notesல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது "First the system must burn, its values set alight, its hierarchies toppled, yet within the heat of the flames we must never forget what we came here to do - form new myths, crown new queens, see new horizons....I concern myself with 'queens' not just in response to the queen of England but to expand the limited scope patriarchy allows us in seeing the worth of women throughout history. The lives of every woman I have named as a track title resounds with me. My hope is that every reader of the album title takes a moment to consider who they see as their queen then uses this as a springboard to problematising preexisting societal myths surrounding power". Get it ?. ஆல்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு "அரசியும்" எவ்வாறு இருந்திருப்பார்கள், அவர்களது "ஆட்சி" எப்படியானதாக இருந்திருக்கும், எப்படி நம்மை வழிநடத்தியிருப்பார்கள் போன்ற - alt history என்றுகூட வைத்துக்கொள்ளலாம் - கேள்விகளுக்கான பதில் தான் முழு ஆல்பமும். திருவிழா போல முழுக்க முழுக்க கொண்டாட்டம் மட்டுமே. Sons of Kemet - quartet band. நால்வரில் இருவர் ட்ரம்மர்கள். ஒரு ஜாஸ் குழுவில் இரண்டு ட்ரம்மர்கள் இருப்பதெல்லாம் அரிது. தவிர, Tuba என்றொரு இசைக்கருவி இருக்கிறதாமே...அதை வாசிக்கும் Theon Crossக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

The Comet is Coming:



மூவர் குழு. Sons of Kemetடிலிருந்து நேரெதிராக Afrofuturism வகை இசை. கூடவே ஏகப்பட்ட ஸின்தசைசர்ஸ், ஹிப்-ஹாப்தனமான பீட்ஸ். எந்தவொரு ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும் transition/metamorphosis phaseசென்று ஒன்று இருந்தே தீரும். அந்தசமயத்தில் அக்கலைஞர்களின் படைப்பை ரசிக்க முடிவது அலாதியானது. நம்மையும் அவர்களுடன் கூட்டிச்செல்வார்கள். இம்மூவர் குழுவின் முதல் ஆல்பம் - Channel the Spirits, தொடர்ச்சியாக கேட்டுகொண்டே இருந்தேன். Heavily hip-hop influenced என்பதால் இருக்கும். Super Mario - asteroidகளில் குதித்து குதித்து விளையாண்டால் எப்படியிருக்கும் ? அப்படியான இசைதான் Journey Through the Asteroid Belt. ஆஃபிஸில் Space Carnival கேட்டுக்கொண்டு என்னையறியாமல் ஓவராக bopping செய்து...அவமானப்படத் தெரிந்தேன்.



மேற்சொன்ன அந்த transition phase நடந்தது,Trust in the Lifeforce of the Deep Mystery மற்றும் The Afterlife ஆல்பம்களில். Space Jazzன் முக்கிய கூறுகளில் ஒன்று - கட்டற்ற சுதந்திரம். Meaning, ஸ்பேஸில் இசை எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும் ? அதற்கு வரைமுறைகளே கிடையாதல்லவா. அதன் முழுஅர்த்தத்தை இந்த இரண்டு ஆல்பம்களில் உணரலாம். ஆனாலும் ஆப்ரிக்க வரலாற்றின் கூறுகள் இல்லாமலில்லை. அப்படி சொல்ல முடியாது/கூடாது. மனித வரலாற்றின் கூறுகள்...அதுவும் தவறு, present continuous tenseல் ஒரு social commentary என்பதே சரி. அந்தவகையில் இந்த ஆல்பம்களை space jazz என்பதைவிட Afrofuturism என்பதே சரி. Blood of the past. Kate Tempest பற்றி முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். Spoken word poet. இந்த Spoken word poetry அல்லது slam poetryயின் காரணகர்த்தாக்களும் அமெரிக்க-ஆப்ரிக்கர்களே. அதற்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. Kanye West கூட Def Poetry Jamகளில் - தனது ஆரம்ப காலங்களில் - அடிக்கடி கலந்துகொண்ட ஒரு ஆள் (Kanyeவின் rapping style/flowவிற்கான விதை இங்கிருந்துதான் தொடங்கியது). Blood of the past, ferocious yet intoxicatingகான Jazz rock. இந்தக் கோபத்தை சற்று மட்டுபடுத்தி, மினிமலிஸ்ட்டாக space exploration ஆல்பம் தான் இதன் தொடர்ச்சியான The Afterlife. ஜாஸில் மரபுகளை மீறுவதைப்பற்றி...Timewave Zero.

Shabaka and the Ancestors: We are Sent Here by History


இதை எப்படி விளக்குவது ? ஒருவேளை Sons of Kemetலிருக்கும் பெண்கள் அனைவரும் வேற்றுலகம் சென்று அங்கிருப்பவர்களிடம் தங்கள் கதைகளைச் சொன்னால் ? அத்தகைய soundscape தான் இந்த ஆல்பம். மற்ற ஆல்பம்களைப் பற்றி கொஞ்சமாவது சொல்லத் தெரிந்த எனக்கு, இந்த ஆல்பம் பற்றி ஒன்றுமே சொல்லத் தெரியவில்லை. "பூமி அதிர ஆப்ரிக்க யானை ஓடி வருகிறது" என்று படிப்பதிற்கும்\வீடியோவில் பார்ப்பதிற்க்கும் நேரடியாக அந்த அதிர்வை உணர்வதிற்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டோ அதுபோல இந்த ஆல்பத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டாலன்றி நான் சொல்ல நினைக்கும் ecstasy புரியாது. மற்ற இரண்டு குழுக்கள் போலன்றி - இந்த முறை ஷபாகா கைகோர்த்திருப்பது தென்னாப்ரிக்க ஜாஸ் பட்டாளத்துடன். கூடவே ஒரு அற்புதமான pianistம். Zulu chantsகளில் ஆரம்பித்து bassist, pianist வரை மிகத்தேர்ந்த கலைஞர்களின் culmination of ideas இப்படியல்லவா இருக்க வேண்டும். Run, the darkness will pass - ஒரு Bumblebee பறப்பதை வேடிக்கை பாரத்தைபோல அவ்வளவு பரவசத்தை கொடுத்தது. We Will Work, On Redefining Manhood -  இத்தனைக்கும் முதல் 1:30 நிமிடங்களுக்கு Zulu chants மட்டுமே. அதன்பிறகு bass ஆரம்பிக்க கூடவே ஷபாகாவும் ஒன்றுசேர - இதில் Manhood எங்கிருந்து வருகிறது ?. ஆல்பத்தின் ஒவ்வொரு இசைக்கோர்ப்பின் பெயரையும் கவனித்தால் ஒரு flow தென்படும். They Who Must Die --> You’ve Been Called --> Run, The Darkness Will Pass- -> The Coming of the Strange Ones -> Beasts Too Spoke of Suffering --> Finally, The Man Cried --> Teach Me How to Be Vulnerable. How to be vulnerableக்கும் They who must dieக்கும் இடைப்பட்ட மனநிலைதான் இந்த ஆல்பம். இதன் liner notesல் "continuous sonic poem"மாக இதை அணுகினோம் என்று குழுவினரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

African Savanna. அதிகாலைக்கும் கொஞ்சம் முந்தி. கிட்டத்தட்ட 6300 கிலோ எடைகொண்ட, அழுக்கேறிய, கூர்மையான தந்தங்களைக் கொண்ட ( ஆப்ரிக்க யானைகளில் ஆண் - பெண் இரண்டிற்கும் தந்தங்கள் இருக்கும். ஆசிய யானைகளில், பாதிக்கும் மேலான பெண் யானைகளுக்கும் ஒருசில ஆண் யானைகளுக்கும் மட்டும் தந்தங்கள் உண்டு) மூத்த பெண் யானை தன் கூட்டத்தை வழிநடத்திக்கொண்டு செல்கிறது. எருதுகொத்திகளும், கொக்குகளும் யானைகளின் மீதேறி ஓசிச் சவாரி செய்துகொண்டிருக்க, யானைகள் தோண்டி வைத்த நீர் குழிகளில் பிற விலங்குகள் குடித்துக்கொண்டிருக்க...எல்லாவற்றிக்கும் கீழே, சாணி வண்டுகள் - பழ விதைகள் கொண்ட யானை லத்தியை உருட்டிக்கொண்டிருக்க (இரவிலிருந்தே இதே வேலையாக இருந்திருக்கக்கூடும்)... 150 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்து, 8 நிமிடங்கள் 20 நொடிகள் - asteroids, cosmic dust, satellite junks, ஏழு கடல், ஏழு மலை - எல்லாவற்றையும் கடந்து stream of photons அப்புல்வெளிகளை அடைகிறது. அதோடு அதன் பயணம் முடியுமா என்றால்...ம்ஹும். எல்லையில்லாத வெளியில் அது போகும் போகும் போகும் போய்கொண்டேயிருக்கும். And that's how the Universe should wake - with an elephant's trumpet and dance of the dung beetles. 
  

ஜூலை 1936. ஸ்பானிஷ் சிவில் வாரின் ஆரம்பம். ஸ்பெயினின் தலையெழுத்தையே மாற்றிய உள்நாட்டு போர். ஒருபக்கம், சோஷியலிஸ்ட்கள் + கம்யூனிஸ்ட்டுகள் + விவசாயிகள் + தொழிலாளிகள் (Republicans), மற்றொருபக்கம், கத்தோலிக் அமைப்புகள் + நிலச்சுவான்தார்கள் + முதலாளிகள் + அரச குடும்பத்தவர்கள் + ஏன் ராணுவமும் கூட (Nationalists). இந்த நேஷனலிஸ்ட்களுக்கு ஹிட்லரும் முசொலினியும் ஆதரவு.

டிசம்பர் 1936. 33 வயதான, சோஷியலிஸத்தின்பால் ஈர்ப்புகொண்ட ஒரு ப்ரிடீஷ் பத்திரிகையாளர்/எழுத்தாளர் பார்சிலோனாவுக்கு வருகிறார். வந்து சேர்ந்த கொஞ்சநாளில் ரிபப்ளிகன்ஸ்களுடன் சேர்ந்து போராட்டக்களத்தில் இறங்குகிறார். அதே சமயத்தில்தான் ரஷ்யாவில் "புகழ்பெற்ற" Moscow Trails நடந்துகொண்டிருந்தது. ஸ்டாலின், அசைக்கமுடியாத சக்தியாக ஐரோப்பா முழுமைக்கும் மாறத்தொடங்கிய காலகட்டம். ஸ்டாலினின் போக்கு, ஸ்பெயினில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நடவடிக்கைகள், கம்யூனிஸ்ட்டுகளால் செய்யப்பட்ட படுகொலைகள் இப்படி பலதும் அந்த எழுத்தாளரைப் பெரிதும் பாதிக்கிறது. அக்காலகட்டத்தில் அவர் பெற்ற பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடு - Homage to Catalonia என்ற புத்தகம். வெளியிடப்பட்டு பல ஆண்டுகளாகியும் புத்தகத்தை சீந்துவாரில்லை. 1939க்கு பிறகு அந்த ப்ரிடீஷ்காரர் இரண்டாம் உலகப்போரில், இந்தமுறை தனது தாய்நாடான இங்கிலாந்து சார்பாக யுத்தகளத்தில் இறங்குகிறார். அங்கும் கம்யூனிஸ்ட்களுடனான சந்திப்புகள், அனுபவங்கள் மூலம் ஸ்டாலினின் சர்வாதிகாரம் பற்றிய அவரது பார்வை வலுப்பெறுகிறது. தனது உள்ளக்குடைச்சல் எல்லாவற்றையும் சேர்த்து satirical நாவலொன்றை 1944ல் எழுதுகிறார். ஆனால் வெளியிட யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஒருவழியாக 1945ல் அந்தப் புத்தகம் வெளியாகிறது. அப்புத்தகம் - Animal Farm. ஆனாலும் ஆள் அந்த ஒரு புத்தகத்துடன் அடங்குவதாகயில்லை. ஹிட்லரிடமிருந்து உலகம் தப்பித்து ஸ்டாலின் போன்ற totalitarian ஆளிடம் சிக்கினால் என்னவாகும், அப்படியான authoritarian regime எப்படியிருக்குமென்ற அவரின் பயம்தான் 1984.

1984. லண்டன், Oceania superstate. English Socialist Party (IngSoc) தான் அங்கு எல்லாம். அவர்களது தலைவர் "Big Brother". Omnipresent. பிக் பிரதருக்கும் அரசுக்கும் தெரியாமல் யாரும் எதுவும் செய்ய முடியாது. கடுமையான கண்காணிப்புகள். தனிமனித சிந்தனையிலிருந்து மொழி/வார்த்தைகள் வரையில் அனைத்திற்கும் தடைகள், கட்டுபாடுகள். அவ்வளவு ஏன் thoughtcrimeற்க்குகூட அங்கு வாய்ப்பில்லை. அப்படியான ஊரில் "Ministry of Truth" துறையில் வரலாற்று திரிப்பாளானாக வேலை பார்ப்பவன், வின்ஸ்டன் ஸ்மித். அரசுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக டயரி எழுதும் பழக்கம் உள்ளவன். Individualityயே இருக்கக்கூடாதென்று நினைக்கும் அரசாங்கம், டயரி எல்லாம் எழுத விடுவார்களா. ஆனாலும் அதையும் மீறி பிக் பிரதருக்கு தெரியாமல் பல கஷ்டங்களுக்கிடையே டயரி எழுதிக்கொண்டிருப்பான். கூடவே காதலும் ஒட்டிக் கொள்ளும். இதற்கிடையில் புரட்சி இயக்கமான revolutionary brotherhood பற்றி தெரியவர, அப்படியே தோழர் ஓ ப்ரைனின் பழக்கமும் ஏற்படும். மாபெரும் புரட்சிக் கனவோடு, சர்வாதிகாரத்திலிருந்து தாம் விடுபடப்போகிறோமென்று ஸ்மித் உணர்ச்சிப்பெருக்கில் இயங்கிக்கொண்டிருப்பான். கடைசியில் பார்த்தால், revolutionary brotherhoodடிலிருந்து ஓ ப்ரைன் வரை அனைத்துமே பிக் ப்ரதரின் வேலையாகயிருக்கும். Surveillance, thought police, newspeak - மொழியின் பயன்பாட்டை முற்றிலுமாக மாற்றுவது (Don't you see that the whole aim of Newspeak is to narrow the range of thought? In the end we shall make thought-crime literally impossible, because there will be no words in which to express it), doublespeak என்று நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் பலவற்றையும் துல்லியமாக கணித்த பெருமை ஆர்வெல்லுக்கு உண்டு. And, it has one of the greatest opening lines of all time - It was a bright cold day in April and the clocks were striking thirteen.

1984ரை படித்திராதவர்கள்கூட "Orwellian" என்ற டெர்மை நிச்சயமாக கடந்து வந்திருப்பார்கள். நான் அந்தப்புத்தகத்தைப் படித்து ஆல்மோஸ்ட் 12/13 வருடங்களிருக்கும். அந்த சமயத்தில்தான் அரேப் ஸ்ப்ரிங், சீனாவின் அடாவடித்தனங்கள், Post 9/11 US mass surveillance போன்ற போஸ்ட்-2000ன் பல முக்கிய நிகழ்வுகள் இன்டர்நெட்டின் புண்ணியத்தால் மேலதிகமாக தெரிய வரத்தொடங்கின. "Big brother is watching you" என்ற வாசகம் - pop culture ரெஃபரன்ஸாகிப் போனது. நானும் நரம்புகள் முறுக்கேற, அரசாங்கம் நம்மை கண்டபடி கட்டுப்படுத்துகிறது - பல விஷயங்களை நம்மிடமிருந்து மூடி முறைக்கிறது - அதைப்பற்றியெல்லாம் பேசுவாரில்லையே என்பது மாதிரியான பல புரட்சி அங்கலாய்ப்புகளுடன் வெகுகாலமாகவே சுற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே - என்னதான் அரசாங்கமும், சிலபல அமைப்புகளும் நம்மிடமிருந்து பல விஷயங்களை மறைக்க\மறக்கடிக்க\குறைத்து மதிப்பிட பழக்கப்படுத்தினாலும் - எனது ஒத்துழைப்பின்றி அது சாத்தியமில்லை என்று புரிய ஆரம்பித்தது. Meaning, i must be willfully ignorant.

Brave New World, ஒரு க்ளாசிக். அதனால்தான் அதுவரையில் அதனை படிக்காமலிருந்தேன். Greatest books என்று போடப்படும் லிஸ்ட்கள் அனைத்திலும் Brave New World இடம்பெற்றிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனாலும் ஏனோ அதனை வாசிக்க வேண்டுமென்று தோன்றியதேயில்லை. முற்றிலும் எதிர்பாராதவிதமாக எங்கிருந்தோ நூல்பிடித்து வந்து Amusing Ourselves to Death படிக்க ஆரம்பித்து, புத்தகத்தின் Foreword படித்துவிட்டு ஸ்தம்பித்துவிட்டேன் (Foreword பற்றிய நல்ல illustrations இங்கே).

We were keeping our eye on 1984. But we had forgotten that alongside Orwell's dark vision, there was another - slightly older, slightly less well known, equally chilling: Aldous Huxley's Brave New World. Orwell warns that we will be overcome by an externally imposed oppression. But in Huxley's vision, no Big Brother is required to deprive people of their autonomy, maturity and history. As he saw it, people will come to love their oppression, to adore the technologies that undo their capacities to think. 

What Orwell feared were those who would ban books. What Huxley feared was that there would be no reason to ban a book, for there would be no one who wanted to read one. Orwell feared those who would deprive us of information. Huxley feared those who would give us so much that we would be reduced to passivity and egoism. Orwell feared that the truth would be concealed from us. Huxley feared the truth would be drowned in a sea of irrelevance. Orwell feared we would become a captive culture. Huxley feared we would become a trivial culture, preoccupied with some equivalent of the feelies, the orgy porgy, and the centrifugal bumblepuppy. 

As Huxley remarked in Brave New World Revisited, the civil libertarians and rationalists who are ever on the alert to oppose tyranny "failed to take into account man's almost infinite appetite for distractions." In 1984, Huxley added, people are controlled by inflicting pain. In Brave New World, they are controlled by inflicting pleasure. In short, Orwell feared that what we hate will ruin us. Huxley feared that what we love will ruin us. This book is about the possibility that Huxley, not Orwell, was right.

இதைமட்டும் படித்துவிட்டு Brave New World படித்து முடித்தபின்தான் Amusing Ourselves to Deathதை படிக்க ஆரம்பித்தேன்.

Brave New World. dystopian நாவல் கிடையாது. ஒரு anti-utopian நாவல். இரண்டிற்கும் வேறுபாடுண்டு. கதை ஆரம்பிப்பதே conditioning centerல்தான். Central London Hatchery and Conditioning Centre. மனித உற்பத்திக் கூடம். 5 வகையான மனிதர்கள் உற்பத்தி செய்யப்படுவார்கள். ஒவ்வொரு வகைக்கும் ஒரு கலருண்டு. கீழ்நிலை மனிதரென்றால் - கருப்பு; மேல்நிலை, சுப்பீரியர் பீயிங் - க்ரே கலர்.


பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அந்தந்த "ஜாதி"க்கேற்ப condition செய்யப்படுவார்கள். உதாரணத்திற்கு, Delta குழந்தைகளின் அருகில் பூக்கள், புத்தகங்கள் - இரண்டும் வைக்கப்படும். குழந்தைகள் ஆர்வத்துடன் இரண்டையும் தொடும்போது மெல்லிய எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படும். இதுபோல ஏறத்தாழ 200 முறை ஷாக் கொடுக்கப்படும். இதற்குப்பிறகு எந்த குழந்தைக்காவது புத்தகத்தையும் பூக்களையும் தொடுமுணர்வு எழுமா ?. Instinctive hatred தான் ஏற்படும், சாரி - ஏற்படுத்தப்படும். என்ன காரணத்திற்காக இந்த வெறுப்பு விதைக்கப்படுகிறது ? இவர்களெல்லாம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டால் வேலைகளை யார் செய்வது ? அதைவிட முக்கியமாக "சுயம்" வளர்ந்துவிடக்கூடுமல்லவா. தவிர இயற்கையின்பால் ஈர்ப்பிருந்தால் இயந்திரத்தனமான வாழ்கையின் மீதிருக்கும் பிடிப்பு போய்விட்டால்.  

Epsilon ஜாதியின் நிலைமையோ படுமோசம். Hatchery centreல் உருவாக்கப்படும்போதே ஆக்ஸிஜன் அளவை சற்று குறைவாகக்கொடுத்து மந்த புத்தி ஆட்களாகவே பிறக்க வைக்கப்படுவார்கள். ஆனால் உடல்ரீதியாக படுவலுவானவர்கள். உள்ளதிலேயே மோசமான வேலைகள், மற்ற நான்கு ஜாதிகளுக்கு defaultடாக இன்முகத்துடன்பணிசெய்து கிடப்பது - இதுமட்டுமே இவர்களது வேலை. அவ்வாறே conditionனும் செய்யப்பட்டிருப்பார்கள்.

அச்சமூகத்தின் கடவுள் - Henry Ford (லிட்ரலாக, Oh my Ford என்றுதான் விளிக்கப்படுவார்) . காலங்கள் கூட Before Ford - After Ford என்றே வகுக்கப்பட்டிருக்கும். Consumerismமே அங்கு எல்லாவற்றிற்குமான அடிப்படை "Ending is better than mending" என்பதுமாதிரியான வாசகங்களே அரசின் அதிகாரப்பூர்வ செய்திகள். யாரும் யாருக்கும் சொந்தம் கிடையாது. Everyone belongs to everyone else. Individuality...அப்படியென்றால் ?. முதுமை கிடையாது. நோய்கள் கிடையாது. "அம்மா" என்ற வார்த்தையே கெட்ட வார்த்தை. கவலை..ம்ஹும். மருந்துக்கும் கிடையாது. காதல், குடும்பம், அன்பு, மதம், கடவுள் - இதற்கெல்லாம் தடையாயென்றால் அதுதான் இல்லை. Simple. அதற்கெல்லாம் அவசியமில்லை. Everyone is happy. அதற்கு முக்கிய காரணம் - Soma. Hypnopaedia என்ற முறையில் - தூக்கத்தின்போதே அரசாங்கம் சோமா குறித்தான தனது போதனையை ஆரம்பித்துவிடும். “A gram is better than a damn.” சற்று சோர்வாக இருந்தால் சில மில்லிகிராம்கள் சோமா. கவலையின் கீற்று தென்பட ஆரம்பித்தால், கொஞ்சம் கூடுதல் டோஸ் சோமா. பெருங்கவலையா - அரசாங்கமே சோமா விடுமுறைகளை அளிக்கும். அவ்வப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து களியாட்டத்தில் ஈடுபடுவார்கள். Orgy - Porgy.

இப்படியான உலகத்தில் சைக்காலஜிஸ்டாக வேலை பார்ப்பவன் - Bernard Marx. சற்று "வித்தியாசமான" ஆள். சுயத்தின் ருசியை உணர தொடங்கியிருப்பவன். "I want to know what passion is. I want to feel something strongly" என்ற மனநிலையில் இருப்பவன். இவனது நண்பன், Helmholtz Watson. வார்த்தைகளின்பால் ஈர்க்கப்பட்டவன். இவனைப்பற்றி புரிந்துகொள்ள...“Did you ever feel, as though you had something inside you that was only waiting for you to give it a chance to come out? ". எல்லாரையும்விட முக்கியமானதொரு ஆள் - John. The Savage. ஆதிவாசி மாதிரியான ஆள். ரிசர்வேஷன் முகாமில் பிறந்து, வளர்ந்தவன். ஷேக்ஸ்பியர் பிரியன் (அவனுக்கு படிக்கக் கிடைத்த ஒரே புத்தகம் . ஜான், பெர்னார்டின் புண்ணியத்தால் brave new worldக்கு வந்துசேர்ந்து, அங்கு அவனுக்கு கிடைக்கும் அனுபவங்களே கதையின் மையம். அவனது மனநிலைக்கு ஒரு சான்று, இந்த உரையாடல்

"We don't," said the Controller. "We prefer to do things comfortably."

"But I don't want comfort. I want God, I want poetry, I want real danger, I want freedom, I want goodness. I want sin."

"In fact, you're claiming the right to be unhappy" said the Controller

"All right then," said the Savage defiantly, "I'm claiming the right to be unhappy"

------------

Aldous Huxely இப்புத்தகத்தை எழுதியது 1932ல். ஆனால், 1958ல் திரும்ப - அப்போதைய சூழ்நிலைகளுடன் புத்தகம் எப்படி பொருந்திப்போகிறது என்ற வகையில் - சில commentaryகளுடன் Brave New Worldடை ரிவிஸ்ட் செய்கிறார். Propaganda in democratic society அத்யாயத்தில் அவரின் இந்த commentary தான் Amusing ourselves to death தான் ஆரம்பப்புள்ளி "In a word, they failed to take into account man's almost infinite appetite for distractions"


Amusing ourselves to death: டிவி போன்ற எலெக்ட்ரானிக் மீடியம் (சோஷியல் மீடியாவையும் சேர்த்துக்கொள்ளலாம்) - எவ்வாறு  நம் சொல்லாடல்களை மாற்றி அமைக்கிறது, எது தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டியவைகள் , எங்கு விவாதிக்கப்படுகிறது, எவ்வாறு விவாதிக்கப்படுகிறது போன்ற கேள்விகளுக்கான -  பதிலென்று சொல்ல முடியாது - சோஷியல் கமென்ட்ரி தான் இப்புத்தகம். சைகைகளின் மூலம் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்ற காலம் தொடங்கி பின்பு பேச்சு வழக்கு - சொல்லாடல்கள் - அச்சு ஊடங்கங்கள் - ரேடியோ - டிவி வரை அனைத்தையும் அலசுகிறது. போஸ்ட்மென், அச்சு ஊடகங்கள்\புத்தங்கங்கள் மூலமாக நடைபெற்ற சொல்லாடல்கள் (அச்சுத்துறை கிட்டதட்ட 600 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது) தீவிரமாகவும், கருத்தச்சிதறல்கள் குறைவாகயிருந்ததாக சொல்கிறார் (Age of Typography). ஆனால் டிவி போன்ற ஊடகங்களில் அவ்வாறான தீவிரத்தன்மைக்கு வாய்ப்பேயில்லை என்பது அவரது வாதம். காரணம் - டிவியின் இயல்பே பொழுதுபோக்கு மட்டுமே (Age of Show business). தலைபோகிற விஷயமாகயிருந்தாலும் அதனை dilute செய்யாமல் டிவியால் அந்நிகழ்வுகளை அணுக முடியாது. "Our politics, religion, news, athletics, education and commerce have been transformed into congenial adjuncts of show business, largely without protest or even much popular notice.  The result is that we are a people on the verge of amusing ourselves to death". இதுதான் அவரது தீஸிஸ். Text-based contentகளிலிருந்து image-based contentடிற்கு எப்பொழுது மாறினோமோ அன்றிலிருந்து சொல்லாடல்களின் தீவிரம் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்கிறார். It was a hard read. ஏனென்றால் பல உதாரணங்கள் முற்றிலும் அமெரிக்கா சார்ந்தவைகள். அதுவும் பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய அமெரிக்கா பற்றிய பல குறிப்புகள். அந்த context பிடிபட சற்று நேரமானது. புத்தகத்தில் எனக்கு ஏற்பில்லாத சில அம்சங்களும் உண்டு. ஆனால் அதைவிட முக்கியமாக, இதுவரை எனக்கிருந்த சிலபல கேள்விகளுக்கு நல்ல புரிதல்களை வழங்கிய புத்தகம். புத்தகத்தின் அடிப்படை கருத்துகளாக - கூடவே தற்போதைய மீடியாக்களையும் மனதில்கொண்டு  சில பாய்ண்ட்ஸ்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்வதைவிட அப்படியே விடுவதே நல்லது.

1) Trivializing important issues - Sensitizing trivial issues

2) Sea of irrelevance

3) Irony of emotional responses and insensitivity

4) Illusion of knowing something

5) Dominating public discourse

6) Everything is entertainment

7) World of memes, soundbites, catchy phrases

8) Rise of social media utopians

நிற்க: அமெரிக்காவில் டெலிவிஷன் சேனல்கள் 1939லிருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அன்றிலிருந்து இன்றுவரை ஏறத்தாழ 80 ஆண்டுகள். அமெரிக்கர்களின் கூட்டு மனநிலையை இன்றளவும் பாதிக்குமொரு ஊடகம். அமெரிக்காவில் 1940 முதல் 1995 வரையில் (அங்கு 1995களில் சோஷியல் மீடியா தலையெடுக்கத் தொடங்கிவிட்டது) ஏறத்தாழ 55 ஆண்டுகள் தொலைக்காட்சி பெரும் சக்தியாக இருந்துவந்துள்ளது. இன்று, சக்தியின் வீரியம் குறைந்திருக்கிறதேயன்றி மக்களின் மனநிலையின் மீதான தாக்கம் பலமானதாகவே இருக்கிறது. Late Night Showகளுக்கு போகாத - செனட் முதல் பிரசிடென்ட் பதவி வரை - அமெரிக்க தேர்தல் வேட்பாளர்கள் இல்லை. இன்றெல்லாம் இன்னும் ஒருபடி மேலே சென்று, podcastகளில் கூட பங்கெடுக்கிறார்கள். இந்தியாவில் - 1995களுக்கு பிறகுதான் cable networkகள் அதிகளவில் உள்ளே வர ஆரம்பித்தன. 2007/2008 சோஷியல் மீடியாக்களின் தொடக்கம். 1995 - கேபிள் டிவி. 2007 - சோஷியல் மீடியா, இந்தியாவில் இந்த transition நடந்தது - பன்னிரண்டு ஆண்டுகளில். அதிக இன்டர்நெட் யூசர்கள், smartphones, WhatsApp - இதையெல்லாம் கணக்கில்கொண்டால் தொலைக்காட்சி to சோஷியல் மீடியாவுக்கான நம்நாட்டின் ஜம்ப் - 20 வருடங்கள் மட்டுமே. அதனால் மீடியா என்று பேசும்போது நாம் சோஷியல் மீடியாவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

---------------------

ஒருவேளை சோஷியல்/மாஸ் மீடியாக்களில், சேனல்களில் - news of the day, தலைப்புச்செய்திகள் போன்றவைகளே இல்லாவிட்டால் ? Neil Postman, இதுமாதிரியான "News of the day"  வகை contentகளை முன்னிறுத்துவதன் மூலம் "Medium is the metaphor" என்ற கருத்தை முன்வைக்கிறார். அதாவது, என்ன விஷயம்/செய்தி - அதிலுள்ள தீவிரத்தன்மை, முக்கியத்துவம் - போன்றவைகள் எல்லாம் எதன்மூலம் எவ்வாறு சொல்லப்படுகிறது/பரப்பப்படுகிறது என்பதை பொறுத்து என்று அர்த்தத்தில்.

November 2019. ஏற்கனவே பல மாதங்களாக/சில வருடங்களாக - HLL Lifecareரென்ற அரசுத்துறையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் disinvestment ப்ளானை மத்திய அரசு நிறைவேற்றுகிறது. HLLல் என்னமாதிரியான வஸ்துக்களை தயாரிக்கிறார்கள் ? காண்டம்ஸ், சர்ஜிகல் க்ளொவ்ஸ், PPE போன்ற மருத்துவ உபகரணங்கள். ஜனவரி 31. இந்தியாவின் முதல் கோவிட் கேஸ் அடையாளங்காணப்படுகிறது. அன்றே PPE, masks, gloves போன்றவைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் தடை விதிக்கிறது. அதற்கடுத்து நடந்ததுதான் இன்றுவரை புரியாத புதிராக உள்ளது. ஒரே வாரத்தில் தடையை தளர்த்தி ஒருசில ஐட்டங்களை ஏற்றுமதி செய்யலாம் என்று இந்திய அரசாங்கம் அனுமதியளிக்கிறது. மீண்டும் அடுத்த ஒரு வாரத்தில் தடையில் மேற்கொண்டு சில தளர்வுகளை சேர்க்கிறது. தவிர, HLL அமைப்பின்மூலம்தான் நாட்டின் பிற PPE, body coverall மாதிரியான மருத்துவ உடைகளையும், மாஸ்க், க்ளொவ்ஸ் போன்றவைகளையும் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கி, தரப்பரிசோதனை செய்து மத்திய/மாநில அரசாங்க மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற ஆணையை பிறப்பிக்கிறது. முழுக்கதையும் இங்கே.

மத்திய அரசின் தடுமாற்றம் ஆரம்பித்தது இங்கிருந்துதான். ஒழுங்கான திட்டமிடல், SOP, என்ன மாதிரியான management plan வைத்திருக்கிறோம்...ம்ஹும். இந்த குளறுபடிகள் பற்றி (மிகமிகக் குறைவான) குரல்கள் எழத்தொடங்கியபோது, வசமாக சிக்கிய விஷயம்தான் - தப்லிகி விவகாரம். முட்டாள்தனமான காரியம். சந்தேகமேயில்லை. ஆனால் அதை முஸ்லீம் - இந்து விவகாரமாக்கி, தப்லிகி மசூதியிலிருந்து அதன் தலைவர் வெளியேற ரகசிய குகைகள் இருக்கின்றன என்றவரைக்கும் sensationalize செய்து, முழு கவனத்தையும் அதன்பக்கம் திரும்ப - வேறேந்த conversationகளும் எழவில்லை. விவாதிக்கப்பட ஏகப்பட்ட முக்கிய விஷயங்கள் இருந்த நிலையில் மீடியாக்களில் 99.9% விவாதங்கள் அனைத்தும் இதைச்சுற்றியே இருந்தது. அதில் மத்திய அரசின் குளறுபடிகள் அனைத்தும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. கூடவே - புலம்பெயர் தொழிலார்களின் நிலைமையும். இன்னொன்றும் வசதியாக மறக்கடிக்கப்பட்டுவிட்டது. Contact tracingயின் போது அச்சமயத்தில் டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா  போன்ற பல மாநிலங்களில் தப்லிகி அமைப்பினரை மட்டுமே தேடிப்பிடித்து சோதனை செய்தனர். ஒருவேளை டெல்லி போன்ற மாநிலங்கள் அப்பொழுதே சோதனை முறையை விரிவுபடுத்தியும். சற்று மாற்றியுமிருந்தால் - இன்றிருக்கும் மோசமான நிலைமை மாறியிருக்குமோ ?.

இன்னொருபக்கம், மத்திய அரசின் வெளியில் தெரியாத குளறுபடிகள் மாஸ் மீடியாக்களில் - ஒப்புக்கு, மேம்போக்காக விவாதிக்கப்பட்டது/படுகிறது -  ஏன் பெரிதாக பேசப்படவேயில்லை ? . மார்ச் 25. மோடி முதல் லாக்-டவுனை (நாலு மணி நேரம் மட்டுமே கொடுத்து) அறிவித்தார் அல்லவா. அந்த அறிவிப்பிற்கு ஆறு மணி நேரம்முன்பு ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. // On 24 March, Modi personally asked over twenty owners and editors from the mainstream print media to publish positive stories about the COVID-19 pandemic. The owners and editors represented media organisations working in 11 different languages, including the senior-most members of national media houses such as the Indian Express Group, the Hindu Group and the Punjab Kesari Group. According to a report on Modi’s official website, the prime minister asked the participants to “act as a link between government and people and provide continuous feedback” on the government’s handling of the COVID-19 crisis //

மிகமிக முக்கியமான நிகழ்வாக இதைச் சொல்லுவேன். முழுக் கட்டுரையையும் படித்தீர்களானால் மீடியா ஆட்கள் பலரின் பூரிப்புகள், மோடி பற்றிய சிலாகிப்புகள் தெரியவரும். கரோனா கவரேஜில் - 90% மீடியாகளின் செய்திகள் - அரசின் பார்வையோடு ஒத்திருப்பதை கவனிக்கலாம். இது தற்செயலானதா ? 

மோடி - ஆறு ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாத ஒரே பிரதமர் (அமித் ஷா ப்ரஸ்மீட் கணக்கில்வராது). என்ன கொடுமையென்றால், பேரிழப்புகள், வன்கொடுமைகள், பேரிடர்கள் நிகழும்போதுகூட பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் வெறும் ட்வீட்கள் மூலம் ஆறுதல்களையும் அறிவிப்புகளையும் அள்ளி வீசுகிறார். அதுதான் பிரதமரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக மீடியாக்களில் வெளிவருகிறது, பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. இது எவ்வளவு அபத்தமானது, ஆபத்தானது ?.  ஆனால் அதே பிரதமர் "முக்கிய" மீடியா ஆட்களை கூப்பிட்டு என்ன எதிர்பார்ப்பில் வீடியோ கான்ஃபரன்ஸிங் நடத்துகிறார் ?. 

--------------

“The best things on television are its junk and no one and nothing is seriously threatened by it. Besides, we do not measure a culture by its output of undisguised trivialities but by what it claims as significant. Therein is our problem, for television is at its most trivial and, therefore, most dangerous when its aspirations are high, when it presents itself as a carrier of important cultural conversations "

நீயா நானா டைப் நிகழ்ச்சிகள், செய்திச் சேனல்களில் தினமும் நடக்கும் "இன்றைய விவாதம்", "புரட்சிகர" கருத்துகளைக்கொண்ட திரைப்படங்கள் - இப்படி நாம் முக்கியத்துவம் கொடுக்கும் பல நிகழ்ச்சிகளும், மீடியம்களும் நிஜமாகவே முக்கியத்துவமிக்கவைகள் தானா ?  சாதிய கருத்துகளை தாங்கிவரும் திரைப்படங்களை கலாய்ப்பது முக்கியமா இல்லை நமது விருப்பத்திற்குரிய கட்சிகளின் அமைப்புக்குள்ளேயே நிலவும் ஜாதிய பாகுபாடுகளை கேள்வி கேட்பது முக்கியமா ?

----------------

"There is no more disturbing consequence of the electronic and graphic revolution than this: that the world as given to us through television seems natural, not bizarre"

மனித மலத்தை மனிதனே அள்ளுதல் - பற்றி தொடர்ச்சியாக பல வருடங்களாக பேசி (மட்டுமே) வருகிறேன். இதே ப்ளாகில் 2012ல் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அக்கட்டுரையின் கவர் ஃபோட்டோ - மலத்தை கைகளால் அள்ளும் ஒரு பெண்மணியினுடையது. "ஷாக்கிங்கான" ஃபோட்டோ. ரைட் ?. போன வாரம் - Facebookல் மனித மலத்தை மனிதர்களே அள்ளுவதைப் பற்றிய ஒரு photo storyயை பகிர்ந்திருந்தேன். லிங்க்கை மட்டும் பகிராமல் - அதிலிருந்த சில "உணர்ச்சிகரமான, அதிர்ச்சியான"  ஃபோட்டோக்களை collage செய்து பகிர்ந்தேன். வேண்டுமென்றேதான் செய்தேன். "மனித மலத்தை மனிதனே அள்ளுகிறான் " இதை படிக்கும்போதே நமக்கு கோபமும் தீர்வுகாணும் முனைப்பும் வரமால் போனது எப்பொழுது ? அடைப்பெடுத்த கக்கூஸின் ஓட்டையை ஒரு மனிதர் காலை உள்ளே விட்டு அடைப்பெடுக்கும் ஃபோட்டோவை காட்டினால்தான் அக்கொடுமையை மேலதிகமாக புரிந்து கொள்ள முடியுமா ? அந்தளவிற்கா நாம் போய்விட்டோம் ? மாஸ் மீடியாக்களில் இந்த மாற்றம் படுவீரியத்துடன் வளர்ந்து நிற்கிறது. டிவிக்களில் இது ஒரு மாதிரியாக செயல்படுகிறது; சோஷியல் மீடியாக்களில் மற்றொருவடிவில். எப்பொழுதெல்லாம் ஒரு பேரிழப்பு, மரணங்கள், படுகொலை, வன்புணர்வு, வன்முறை நிகழ்கிறதோ - அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி சேனல்கள் சோக மியூசிக்குடன் அந்நிகழ்வுகளை ஒளிபரப்புவது. ஏன் சோக மியூசிக் ? ஒன்று - மக்கள் படுமொன்னையாகிப்போன உணர்ச்சியற்ற ஆட்களாகயிருக்க வேண்டும். உணர்ச்சியை தட்டியெழுப்ப சோக இசை தேவை. இல்லையா, தொலைக்காட்சி சேனல்கள் அந்நிகழ்வுகளை ஒரு மணிநேர entertainment packageகா கருத வேண்டும். Entertainmentடிற்குதான் இதெல்லாம் தேவை. 1200 கிலோமீட்டர்கள் பசி பட்டினியில் மக்கள் நடந்தார்கள் என்ற ஒரு வரி செய்தி - நம்மையெல்லாம் வேதனைக்கும் அவமானத்திற்கும் கோபத்திற்கும் உள்ளாக்காது; Black and Whiteல் வெடித்து சிதறிய பாதங்களை க்ளோஸ்-அப்பில் காண்பித்து, அதற்கு பின்னணி இசையும் சேர்த்துதான் நமக்கெல்லாம் அதன் கொடுமை புரியுமென்றால் - irreparably deeply flawed society. அவ்வளவுதான். இதன் மற்றொருவடிவம்தான் சோஷியல் மீடியாக்களில் profile pictureகளை மாற்றுவது. புலம்பெயர் தொழிளாலர்கள் - movie of the month. Simple as that. கடந்த இரண்டு மாதங்களாக வேறெந்த படமும் ரிலீஸாகாததால் இதனை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் நிலைமை இதற்கு முன்பும் இப்படித்தான் இருந்தது; இதற்கு பிறகும் இப்படித்தான் இருக்கப்போகிறது. இதற்கு முன்னர் பான்பராக் வாயன்கள் என்றழைக்கப்பட்டனர். இனி என்ன பெயர் வைத்து அழைக்கப்படுவர் என்று பார்ப்போம்.

----------

“What is happening here is that television is altering the meaning of ‘being informed’ by creating a species of information that might properly be called disinformation. Disinformation does not mean false information. It means misleading information —misplace, irrelevant, fragmented or superficial information — information that creates the illusion of knowing something but which in fact leads one away from knowing.”

இதற்கு மிகச்சமீபத்திய உதாரணம், விவசாயத்திற்கான இலவச மின்சாரம். இலவச மின்சாரத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட/ஏற்படும் நன்மைகளைவிட பிரச்சனைகளே அதிகம். இந்த சமயத்தில் - இலவச மின்சாரத்தில் கைவைப்பது மிகப்பெரிய அநியாயம். அதுவும் விவசாயிகளின் பிரச்சனைகளை அலட்சியத்துடனே கையாண்டு வரும் மத்திய/மாநில அரசுகள் ஏகப்பட்ட உள்குத்துடன்தான் இதனைத் தற்போது செயல்படுத்தத் துடிக்கிறார்கள். அது ஒருபக்கமிருக்க, இலவச மின்சாரத்தால் விவசாயிகள் எந்த வகையில் பலனடைகிறார்கள் என்று தெளிவுடன்தான் இத்தகைய சொல்லாடல்கள் நிகழ்த்தப்படுகின்றனவாயென்றால் நிச்சயமாக இல்லை. "எல்லையில் ராணுவ வீர்கள்...." கோஷத்தின் மாற்று வடிவம்தான் "ஒவ்வொரு விவசாயியும்...". உணர்ச்சிபூர்வமாக யாராவது எதையாவது எழுதுவதை, அதை ஷேர் செய்வதால் மட்டுமே அதனைப்பற்றிய புரிதல் வந்துவிட்டதென்ற "illusion of knowing something" மிகமிக ஆபத்தானது. ஆனால் இங்கே  இதுதான் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது.

-----------------

Is this medium suitable for any kind of serious discussion ? போஸ்ட்மெனின் முக்கிய கேள்வியே இதுதான். என்னை யாராவது இப்படியொரு கேள்விகேட்டால் எனது பதில் - absolutely not (அவர் சொன்ன மீடியம் - தொலைக்காட்சி மட்டும். நாம், சோஷியல் மீடியாவையும் சேர்த்துக்கொள்ளலாம்).

மூன்று வகை இந்தியாக்கள் உண்டு.

1) 1984 India. Kashmir lockdown போல. சோஷியல் மீடியாக்களில் "லால் சலாம், காம்ரேட்" போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதே குற்றம் என்ற அளவில் அடாவடியான இந்தியா.

2) Brave new world India. எந்த பிக் ப்ரதரும் தேவையில்லை; எந்த கண்காணிப்பும் தேவையில்லை; கட்டுபாடுகளும் தேவையில்லை. தாமாகவே கட்டுப்படும் இந்தியா. Willingly surrender oneself to the state.   
3) இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத இந்தியா. இவர்களது அடிப்படை, அன்றாட தேவைகள் தீர்க்கப்படுமானால் எந்த கட்சிக்கும் ஓட்டு போடுவார்கள். யாரையும் சப்போர்ட் செய்வார்கள். இவர்களே இந்தியாவின் பெரும்பான்மையினர்.

Brave new world இந்தியாவில் இரு உட்பிரிவுகள் உண்டு. முதல் பிரிவு - Taali Bajao, விளக்கேத்தும் கோஷ்டி. இரண்டாம் பிரிவு - அதை எதிர்ப்பதால் மட்டுமே மாற்றம் வந்துவிட்டதாக நம்பும் கோஷ்டி. ட்விட்டரில் trending செய்வதன் மூலம் கிடைக்கபெறும் கவனஈர்ப்புக்கள் மட்டுமே போதுமென்று நம்பும் கோஷ்டி. சினிமா காட்சிகளை வைத்து போதிய புரிதலில்லாமல் "political, anti-casteist" meme போடுவதும் அதனை ஷேர் செய்வதாலேயே மிகத்தீவிரமாக பேசப்பட வேண்டிய பிரச்சனைகளை பற்றி தங்களுக்கு தெரிந்துவிட்டதென்று நம்பும் கோஷ்டி. என்ன சிக்கலென்றால் இவ்விரு கோஷ்டிகள்தான் மாஸ் மீடியாக்களை பெரிதும் ஆக்கிரமிக்கிறன. தலித் பிரச்சனையா, மூன்றாம் பாலினத்தவர் பிரச்சனையா, பூர்வகுடி மக்களின் பிரச்சனையா - இப்படி எல்லா பிரச்சனைக்கும் இவ்விரு கோஷ்டிகளுமே தீர்வு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். "Comrade" போன்ற வார்த்தைகள் buzz wordsகளாக மாறிவிட்ட சூழ்நிலையில் இவர்கள் memeகள் மூலம் கருத்துக்களை பரப்புவதாக நம்பிக்கொண்டிருக்க - அசாமிலோ அந்த வார்த்தைகளை உபயோகிப்பதாலேயே தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்வதைபற்றி பேச ஆளில்லை. டெக்னாலஜி இவ்வளவு தூரம் வளர்ந்த பின் - அதன் தயவால் இதுவரை வெளியில்வராத குரல்கள் ஒலிக்கத் தொடங்கும்போது அவர்களை பேசவிடாமல் Taali Bajao கோஷ்டி செயல்படுகிறதென்றால், இவர்களை எதிர்க்கிறேன் பேர்வழியென்று, இன்னொரு தரப்பு அதனைவிட அதிகமாக கத்துவதில் - victimsகளின் குரல் அமுங்கியே போய்விடுகிறது. 

மோடி 2019ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தென்னிந்தியாவில்/தமிழகத்தில்...மதவெறியர்கள் ஜெயிக்க வைத்துவிட்டார்கள், படிக்காத வட இந்தியர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள், நாமெல்லாம் படித்த மாநிலம், திராவிடத்தின் வெற்றி என்று ஏக வசனங்கள். ஒரு பேச்சுக்கு அதெல்லாம் உண்மையென்று வைத்துக்கொள்வோம் - 2018 தூத்துக்குடி படுகொலைகள். பெரும் அதிர்வலையை கோபத்தை ஏற்படுத்திய படுகொலைகள். மாஸ் மீடியாக்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பல்வேறு தரப்பினரால் "விவாதிக்கப்பட்ட" நிகழ்வு. 2019 by-elections. அந்தப் படுகொலைகளுக்கு காரணமான அதிமுக அரசு - 22 தொகுதிகளில் 9ல் வெற்றி பெறுகிறது. பதிவான மொத்த வாக்குகளில் 38.5% பெற்றது (வழக்கின் தற்போதைய நிலை என்ன ?). இதை எப்படி எடுத்துக்கொள்வது ?. (தனிப்பட்ட முறையில், தமிழ்நாட்டைப் பற்றி மேலதிகமாக புரிந்தகொள்ள உதவிய எலெக்சன் ரிசல்ட்ஸ் அது)

மாறாக, மோடிக்கு ஓட்டு போட்டவர்களில் - மத்திய அரசு அறிவித்த/செயல்படுத்திய ஒருசில திட்டங்களுக்காக ஓட்டு போட்டவர்கள் எத்தனைபேர் இருந்திருப்பார்கள், தலித் வேட்பாளர்கள் பலரை BJP நிறுத்த காரணமென்ன, BJP தலித் விரோத அரசு என்று தெரிந்தும் ஏன் அவர்கள் அந்தப்பக்கம் சாய்கிறார்கள், எல்லாவற்றிக்கும் மேலாக இந்தியா democratic country. இரண்டு கட்சிகள்தான் மத்தியில். ஒரு கட்சி சரியாக களத்தில் இறங்காவிட்டால் மற்றொரு கட்சிக்குதான் மக்கள் ஓட்டு போடுவார்கள்...இப்படி சிக்கலான பலபிரச்சனைகளை பற்றி பேசாமல் குண்டாங் குதிரையாக ஓட்டு போட்டவர்கள் அனைவைரையும் மத வெறியர்கள் கேட்டகிரியில் சேர்ப்பது எவ்வளவு சுலபம் ?. ஒருவேளை BJP செயல்படுத்தியதாக சொன்ன பல திட்டங்களின் லட்சணத்தை பொதுவெளியில் இன்னும் தீவிரமாக விவாதித்திருந்தால் ஒட்டுக்களின் எண்ணிக்கை சற்று மாறியிருக்கும்.

மாஸ் மீடியாவை குற்றம்குறை சொல்வதில் லாபமில்லை. அதன் டிசைனே அப்படித்தான். Emotional response தான் அதன் மூலதனம். எல்லா தரப்பு ஆட்களுக்கும் மீடியாக்களின் - குறிப்பாக சோஷியல் மீடியாக்கள் - மூலம் emotional closure தேவைப்படுகிறது. அதற்காக ஒரு சாதிவெறியனின் closureம் சாதி மறுப்பாளராக தன்னை மாற்றிக்கொள்ள முனைபவரின்  closureம் ஒன்று என்று சொல்லும் அளவிற்கு நான் முட்டாளில்லை. ஆனால் சாதி பற்றி தனக்குள்ள அசல் புரிதல்கள் என்ன, இன்னும் கடக்க வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது, தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவு இருக்கிறது - இதற்கான பதில்களையோ/கேள்விகளையோ/விவாதங்களையோ செயல்படுத்தக்கூடிய மீடியம்கள் தானா நமது சோஷியல் மீடியாக்களும்/காட்சி ஊடகங்களும் ? Self - retrospectionனுக்கு வேலையேயில்லாமால் மீடியாக்கள் நமக்கு காண்பிக்கும் செய்திகளுக்கும், ஷேர் செய்யப்படும் போஸ்ட்களுக்கும் படக்படக்கென ரியாக்ட் செய்வதன் மூலம் நாமாகவே ஒரு limboவில் மாட்டிக்கொள்கிறோம். போஸ்ட்மெனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் "In the Huxleyan prophecy, Big Brother does not watch us, by his choice. We watch him, by ours. There is no need for wardens or gates or Ministries of Truth. When a population becomes distracted by trivia, when cultural life is redefined as a perpetual round of entertainments, when serious public conversation becomes a form of baby-talk". 

ஒருநாள் அந்த தாயோழி கடவுளை செமத்தியாக திட்டிவிட்டேன்
கேட்டுக்கொண்டு வெக்கமில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தார் 
பக்கத்து வீட்டு ஐயருக்கோ பேரதிர்ச்சி 
மீண்டும் கடவுளை நோக்கி நல்ல வசவை வீசினேன்
பல்கலைக்கழக கட்டிடங்கள் குலுங்கத்தொடங்கின
அனைத்து ஆராய்ச்சியாளர்களும், ஒரே சமயத்தில்
"மக்களை எது கோபப்படுத்துகிறது" என்ற 

ஆராய்ச்சி பணியை தொடங்கினர் 
- Keshav Meshram 


இந்த நாட்டில் தலித்கள் உள்ளே நுழைய முடியாத(விடாத) பல இடங்கள் உண்டு. அப்படியான இடங்களைப் பட்டியல்போட்டால்  முதலில் எது இருக்கும் ? கோவில்கள் ?. Nah. இன்றும் பல இடங்களில் தலித்கள் உள்ளே நுழைய தடையிருந்தாலும் முன்பிருந்ததைவிட தற்போது கொஞ்சம் சுமார் என்று சொல்லலாம். நுழைந்தாகிவிட்டது. அர்ச்சகர்களாக முடியுமா ? ஆகியிருக்கிரார்களா ? ம்ம்ம்ம்....எனக்குத் தெரிந்து – தமிழ்நாட்டில் இல்லை (அப்படியே நடந்தாலும் பெரிய கோவில்களில் மட்டுமே சாத்தியம். சாதிப் பிணைப்பு கொண்ட சிறுகோவில்களில் வாய்ப்பேயில்லை); கேரளாவில் ஆகியிருக்கிறார்கள்; திருப்பதியில் சொல்லியிருக்கிறார்கள்; இந்தியாவில் வேறெங்கும் ஆனதாக தெரியவில்லை. தலித்கள், ஹிந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்கள் ஹிந்துக்களே கிடையாது; ஒருபோதும் ஹிந்துவாக சாக மாட்டேன் – என்ற அம்பேத்கரின் பார்வையில் யோசித்தால் தலித்கள் அர்ச்சகர்களாகி பொங்கலையும் புளியோதரையையும் வைத்து என்ன செய்வது ? தலித்கள் அர்ச்சகர்களாவதிலுள்ள social impactடை புரிந்துகொள்ளமுடிகிறதென்றாலும், அர்ச்சகராவதைக் காட்டிலும் முக்கியமான விஷயங்கள் உண்டல்லவா. ட்ராக் மாற வேண்டாம். வழிபாட்டு தளங்களில் “நுழையலாம்”; IIT/IIM/IISc மாதிரியான பெருங்கல்வி நிலையங்களில் “நுழையலாம்” (உயர் பொறுப்புகளில் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் தனிக்கதை); ISRO/DRDO மாதிரியான நாட்டின் முக்கியமான அரசு நிலையங்களில்கூட “நுழைந்துவிட” முடியும்; கோர்ட்கள் – Yes. அரசு நிர்வாகம் – ஓரளவிற்கு. என்னதான்யா சொல்ல வர்ற ? தலித்கள் மிகமிகக் கடுமையாக - almost நுழையவே முடியாத ஒரு இடமுண்டு. அந்த நிலைக்கு நான், நீங்கள், உங்கள் பிரியத்திற்கும் பக்திக்குமுரிய அரசியல் கட்சிகளும் (Of course, வாக்காளர்களும்) காரணம். 

போன வருடம் ஒரு ப்லாக் போஸ்ட் எழுதும்போது “அரசியல் கட்சிகள், குறிப்பாக திராவிட கட்சிகள், அதிலும் குறிப்பாக சமூகநீதி பேசும் திமுக போன்ற கட்சிகள் – தேர்தலென்று வரும்போது வேட்பாளரின் ஜாதிதான் முதலில், மத்ததெல்லாம் அப்பறம் என்ற ரீதியிலேயே ஆட்களை நிறுத்துகிறார்கள்” என்று ஒரு வரியை டைப் செய்துவிட்டு, இதை பலரும் பல்வேறு சமயங்களில் சொல்லியிருக்கிறார்கள்; நாமும் சோஷியல் மீடியாவில் இதுபற்றி பலதடவை  வெத்து அறச்சீற்றம் காட்டியிருக்கிறோம்...உண்மையில் எத்தனை வேட்பாளர்கள் இவ்வாறு நிறுத்தப்படுகிறார்கள், என்ன நிலவரம் என்ற factsகளை தேடிஓடியதன் விளைவுதான் இந்த போஸ்ட். தேடலின் ரிசல்ட்ஸ் – நானே எதிர்பாராதது. இவ்வளவு மோசமாக இருக்குமென்று சத்தியமாக நினைக்கவில்லை. நிறைய கோபமும்/வருத்தமும்/இயலாமையும் மட்டுமே எஞ்சியிருக்கிறது. 

தமிழ்நாட்டின் மொத்த 234 தொகுதிகளில் 46 – SC/STகளுக்கான reserved தொகுதிகள். அதுபோக, மீதியிருக்கும் 188 பொதுத்தொகுதிகளில் – எந்த சாதியினரும் நிற்கலாம்.
Src: Caste, a fault line of AIADMK politics now

அந்த 188 பொது தொகுதியில் 2006 – 2011 – 2016, மூன்று தேர்தல்களிலும் எத்தனை தலித் வேட்பாளர்கள் சேர்த்து ஜெயித்திருப்பார்களென்று நினைக்கிறீர்கள் ? ஒன்று. நிற்க வைத்தால்தானே ஐயா ஜெயிப்பதற்கு. கட்சிகள், மிகமிகத் துல்லியமாக படுலாவகத்துடன் - இங்கே இவனை நிறுத்தினால், அந்த தலித்களோ வேறு சாதி  ஆட்களோ ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை - சொந்த சாதி ஓட்டு வந்து சேர்ந்துவிடும். மெஜாரிட்டிக்கு பங்கமில்லை. தலித் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், ரிசர்வ்ட் தொகுதிகளை அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். அவர்கள் தோற்றாலும் நாம் மெஜாரிட்டி அடைவதில் சிக்கல் வராது - திட்டம்போடாமல் இது சாத்தியாமே இல்லை. I mean, தெரியாமல் கூடவா நிற்க வைக்காமல் போய்விட்டார்கள் ? என்ன லாஜிக் ஐயா இது ? திமுகவிற்கு ஒரு தலித் வேட்பாளர் கூடவா கிடைக்கவில்லை ? அவர்கள் கட்சியில் பொதுத்தொகுதியில் நிற்க ஒரு தகுதியான தலித் வேட்பாளர்கூடவா இல்லை ?
  • திமுக நிறுத்திய வேட்பாளர்கள் – 0
  • காங்கிரஸ் – 0 
  • அதிமுக – 1 (தெரியாமல் நிறுத்தியிருப்பார்களோ ? ஜெயித்த ஒரே வேட்பாளர்) 
  • இங்குதான் சிக்கலே. BJP – ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்தபட்சம் 5 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்கள்.
  • தலித் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் - புதிய தமிழகம் உட்பட, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்த்து - ஒரேயொரு பழங்குடியினர்(ST) வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை
Tamilnadu Election: ST Candidates in General Constituency (2006 - 2016)
தமிழக சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல, லோக் சபா தேர்தலிலும் - இந்தியாவின் பிற மாநிலங்களில் கூட அதிகளவில் தலித் வேட்பாளர்களை நிறுத்தும் ஒரே கட்சி பகுஜன் சமாஜ்வாதி பார்ட்டி (BSP) மட்டுமே (அவர்களுக்கு செல்வாக்கிருக்கிறதா, ஜெயிக்கிரார்களா என்பது வேறு கதை). உச்சபட்ச கொடுமையாக கடந்த 2016 தேர்தலில் பாமக 5 தலித் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த மூன்று தேர்தல்களுக்கு முந்தைய தேர்தல்களின் (1952 - 2006) வேட்பாளர்களின் சாதி - வயது - கட்சி பற்றி Election Commission of Indiaவிற்கு RTI தட்டிவிடலாம் என்றிருந்தேன். அப்பறம் வெறுத்துப்போய் விட்டுவிட்டேன். நிச்சயமாக, சர்வநிச்சயமாக இந்த 67 ஆண்டுகளில் பொதுத்தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலித்களின் எண்ணிக்கை ஐந்தைத் தாண்டாது. ஐந்தாவது இருக்குமா ?


2006 - 2016 General Constituency: Candidates - Category 

சரி, தமிழக சட்டசபை தேர்தலில் மட்டும்தான் இப்படியா ? லோக் சபா தேர்தலில் ? அந்த விஷயத்தில் இந்தியா இந்தியாதான். தலித்கலென்று வரும்பொழுது கட்சி, மத, மொழி, இன வேறுபாடின்றி அணைத்து மாநிலங்களும் சமூக நீதி பேசும் அணைத்து கட்சிகளும் (கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் சேர்த்துதான்) ஒரு தலித் வேட்பாளரைக் கூட லோக் சபாவிற்கான பொதுத்தொகுதியில் நிற்க வைக்கவில்லை. காங்கிரஸ், போனால் போகிறதென்று கொஞ்சமே கொஞ்சம் நிற்க வைத்திருக்கிறார்கள் (2014 data compile செய்யவில்லை. ஆனாலும் கவலையேபடாதீர்கள். நிச்சயமாக இந்தச் சூழ்நிலை பெரிதாக மாறியிருக்காது) 


இதிலென்ன தப்பு. தலித்களுக்கென்றுதான் தனித்தொகுதிகளை ஒதுக்கியிருக்கிரார்களே. அப்பறம் என்ன வந்தது...இப்படியொரு கேள்வியெழுப்பினால். இப்படி வைத்துக்கொள்வோமே. தலித்களுக்கென்றுதான் தனியாக கோவில்கள் உள்ளதே, எதற்கு எல்லா கோவில்களுக்குள்ளும் அவர்களை நுழைய விட வேண்டும் ? தலித்களுக்கென்றுதான் தனிப்பள்ளிகள் உள்ளதே. எதற்கு எங்கள் பிள்ளைகளுடன் சரிக்குசமமாக அவர்கள் உட்கார வேண்டும் ? தலித்கள் புழங்குவதற்குத்தான் தனி டம்பளர்கள் உள்ளதே....the list goes on. இவைகள் போலவே, இது இன்னொரு வகையான அரசியல் தீண்டாமை. Simple as that. உங்களுக்கென்றுதான் தனித்தொகுதி உள்ளதே. அதற்குள் ஒரு தலித் வேட்பாளர் இன்னொரு தலித் வேட்பாளரோடு போட்டிபோட்டுக்கொள்ளட்டும். வன்னியர்/தேவர்/கவுண்டர்/முதலியார்களுக்கு சமமாக எங்கள் தொகுதிக்கு வந்து எங்களுடன் போட்டிபோடுவதா ? அதானே இதன் சாராம்சம் ?

This is how the journey of Indian constitution started:

தலித்கள் உட்பட - எந்தவொரு, உலகின் எந்தப்பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களானாலும் - அவர்களது முன்னேற்றத்திற்கான இரண்டு முக்கிய கூறுகள் Political Freedom + Social Freedom. இதில் இரண்டுமே closely knitted. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஆனால் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இவ்விரண்டையும் செயல்படுத்த முக்கிய தேவை Constitutional Freedom. இப்படி யோசிப்போமே...இந்திய அரசியலமைப்பில் மட்டும் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர்களுக்கென சிலபல உரிமைகளை சேர்க்காமல் போயிருந்தால்...தொலைந்தார்கள். தெளிவான அரசியலமைப்பு இருந்துமே இந்தப்பாடு. அதுவும் இல்லாதிருந்தால். 


27th January 1919. 28 வயதேயான அம்பேத்கர், Southborough Commission முன்பு - ஒடுக்கப்பட்டவர்களுக்கென Separate Electorate முறை வேண்டுமென்று கேட்டதிலிருந்து தொடங்கியது இந்திய அரசியலமைப்பின் பயணம். 1919 - 1950 வரையிலான 30 ஆண்டுகால அம்பேத்கரின் போராட்டங்கள், கோபங்கள், காந்தியின் - செத்தாலும் பரவாயில்லை Separate Electorate முறை வேண்டாமென்ற வறட்டுப்போக்கு, அவரின் மத நம்பிக்கையை இதற்குள்ளும் நுழைக்கப்பார்த்தது - வல்லபாய் படேலின் மிகமிகக்கடுமையான எதிர்ப்பு, நேருவின் பங்கு, ரெட்டமலை சீனீவாசன் - M.C.Raja உட்பட பலரின் பங்கு என்று, an absolutely brilliant book - Ambedkar, Gandhi and Patel: The Making of India’s Electoral System. ஒன்று..ஐந்து..பத்து, கிடையாது - 15 ஆண்டுகளாக ஒவ்வொரு முக்கிய தகவல்களாக ஆய்வு செய்து... such a meticulous work by Raja Sekhar Vundru. கண்டிப்பாக படித்துப்பாருங்கள்.

அம்பேத்கர் மிகமிக உறுதியாக இருந்திருக்காவிட்டால், நம் அனைவருக்கும் ஓட்டுரிமை தள்ளிப்போயிருக்கலாம். ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளே அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற வாதத்தை ஏற்காமல், படிப்படியாக அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கிக்கொண்டிருந்த காலத்தில் மொத்தமாக - படித்தவன், படிக்காதவன், ஆண், பெண், வசதியானாவன், ஓட்டாண்டி - யாராகயிருந்தாலும் ஓட்டுரிமை வேண்டுமென்பதில் பின்வாங்கவே இல்லை (இந்த விஷயத்தில் நேரு அம்பேத்கர் பக்கம்). அவர் சொன்ன காரணம் “My feeling is that every man is intelligent enough to understand exactly what he wants. Literacy has not much bearing on this point; a man may be illiterate, none the less he may be very intelligent”. அதற்கு முன்னால் இந்தியாவில், படித்தவர்கள் - வரி செலுத்துபவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டு போடா முடியும். அம்பேத்கர் இன்னொரு படி மேலே செல்ல முயன்றார். ஓட்டு போடுவதை, "Fundamental Right" என்ற அடிப்படையில் இந்திய அரசியலமைப்பில் சேர்க்க விரும்பினார். ஆனால் அதற்கும் சரி - அனைவர்க்கும் ஓட்டுரிமை என்ற வாதத்தை அவர் முன்வைத்தபோதும் சரி - அதைக்கடுமையாக எதிர்த்த நபர் யார் தெரியுமா ? இவர்தான்

இந்தப் புத்தகத்திலேயே Raja Sekhar Vundru, அம்பேத்கரின் நோக்கங்களாக மூன்று விஷயங்களைக் கூறுகிறார்.
For Ambedkar any electoral system for the dalits, must serve three purposes. 1) It must enable the dalits to send its true representatives to the legislatures. 2) Dalits must not be completely isolated politically from the majority 3) It must enable the dalits to influence the election of the members of the majority community to the legislature. Isolation, according to Ambedkar, was the worst thing that would happen to dalits, since no matter how large a representation was given to dalits, it was bound to remain a minority.
இதனடிப்படையிலேயே இனிவரும் பகுதிகளைப் பார்ப்போம்.

Dalits - True Representation - Separate Electorate: 

தலித்களின் பிரதிநிதிகள் யார் ? திராவிட கட்சிகளா ? கம்யூனிஸ்ட் கட்சிகளா ? தலித் கட்சிகளா ? காங்கிரஸ் ? பிஜேபி ? ஒருவேளை பாமகவோ ? திராவிட கட்சிகளின் (திமுக என்றே எடுத்துக்கொள்ளலாம். அதிமுகவை குறிக்காது. அதிமுகவின் (பெயரளவிலான) கொள்கையென்ன என்று சரியாக சொல்பவர்களுக்கு 1 லட்சம் தருகிறேன்) தலைவர்கள், தொண்டர்கள், பக்தர்கள் பலரிடமும் வெளிப்படும் கடும் எரிச்சல்தரும் patronizing tone ஒன்று உண்டு. தலித்களுக்கு நாங்கள்தான் அவ்வளவு செய்திருக்கிறோம்; அவர்களது முன்னேற்றத்திற்கு எங்கள் கட்சியளவிற்கு உழைத்த கட்சி எதுவும் இல்லை; அம்பேத்கரின் அரசியலை நாங்கள் மட்டுமே முன்னெடுக்கின்றோம். எனக்குத் தெரிந்து அவர்கள் இன்னமும் சொல்லாதது “பெரியாரின் வழிகாட்டுதலின்பேரில், கலைஞர்தான் இந்திய அரசியலமைப்பு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று அம்பேத்கருக்கு கடிதமெழுதினார்” என்பதுதான். அதைத்தவிர எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள். 

திராவிட கட்சிகளின் வருகைக்கு முன்பிருந்தே தலித் மக்களும் தலைவர்களும் தங்களுக்கான போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். விஷயம் தெரியாதவர்கள் எவரேனும் (ஒருசிலர் நீங்கலாக) திராவிட கட்சி ஆட்களின் தலித்களின் போராட்டங்கள் குறித்தான பேச்சைக்கேட்டால், என்னமோ இக்கட்சிகளின் வரவிற்குமுன் – தமிழ்நாட்டில் (அ) திராவிட நாட்டில், தலித்தல் அடிமைப்பெண் எம்ஜிஆர் போல அலைந்துகொண்டிருந்ததைப் போலவும், ஜெயலலிதா – அம்மா என்றால் அன்பு டைப் பாட்டு பாடி திராவிட கட்சிகள் தலித்களை முன்னேற்றிவிட்டதைபோலவும் ஒரு தோற்றமெழும். அயோத்திதாசர் இருந்திராவிட்டால் திராவிட இயக்கங்கள் வலுப்பெற சிறிது காலம் பிடித்திருக்கும். ரெட்டமலை ஸ்ரீனிவாசன் போன்ற ஆளுமையின் தாக்கம் ஜஸ்டிஸ் பார்ட்டி -> திராவிட கழகம், மிகமிகப்பெரியது. 

ஜஸ்டிஸ் பார்ட்டி (திராவிட கழகம்) பெரியார் தலைவராகி இனி தேர்தலில் திராவிடர் கழகம் பங்கேற்காதென்று அறிவிக்கும் வரையில் ஜஸ்டிஸ் பார்டியின் சார்பில் சட்ட மேலவை தேர்தல்களில் பெருமளவில் நின்றது முதலியார்கள், ரெட்டியார்கள், நாயர்கள் மாதிரியான ஆட்கள்தான். தலித்கள் மிகச்சொற்பம். இதன் காரணமாகவே, M.C.Rajah போன்ற தலித் தலைவர்கள் ஜஸ்டிஸ் பார்ட்டியிலிருந்து விலகினார்கள். இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்: Ambedkar – Gandhi – Poona Pactடின்போது ரெட்டைமலை ஸ்ரீனிவாசன் அம்பேத்கர் பக்கமும் – M.C.Rajah, காந்தி பக்கமும் நின்றனர். தலித்கள்தான் உண்மையான இந்துக்களென்று எம்.சி.ராஜாவின் வாதம். அப்பறம், திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் பிறந்து -> அதிலிருந்து அதிமுக முளைத்து, மதிமுக போன்ற கட்சிகளும் கிளம்பி...இந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. 

முதல் தலித் பெண் அமைச்சர் – 1967ல் – முதல் திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் மலர்ந்த உடன், திமுகவின் சத்தியவாணி முத்து அவர்கள்தான் தலித்களுக்கான பல திட்டங்களை முன்னெடுத்தார். அண்ணாவின் அரசு, பின்னாளில் கருணாநிதியின் அரசும் அதற்க்கு செயல்வடிவம் கொடுத்தது. ஆனால், அதே சத்தியவாணி முத்துதான் 1974ல், தலித்கள் திமுகவில் சரியாக நடத்தப்படுவதில்லை என்றுகூறி வெளியே வந்து தனியாக கட்சி ஆரம்பித்தார். பின்னர் அதிமுகவில் இணைந்தார். 

தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் பின்-80களிலிருந்துதான் அம்பேத்கரை கட்சிகள் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தன. குறிப்பாக, 1991 அம்பேத்கர் நூற்றண்டு விழாவிலிருந்துதான் அம்பேத்கரோடு தங்கள் கட்சியினை தொடர்புபடுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். இதெல்லாம் நான் சொல்லவில்லை. Kancha Ilaiah Shepherd,  Anand Teltumbde, Prakash Yashwant Ambedkar போன்ற ஸ்காலர்களின் கூற்று (மெட்ராஸ் சட்ட கல்லூரிக்கு திமுக அம்பேத்கர் பெயர் சூட்டியது எந்தாண்டு என்று நீங்களே தேடிக்கொள்ளுங்கள்).

தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒடுக்கும் தேவர்/வன்னிய கட்சிகளோடு ஒரு தேர்தலில் கூட்டு, ஒடுக்கப்படும் விடுதலை சிறுத்தைகள்/புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் கூட்டு. என்ன நியாயம் இது ? Oppressorகளும் - Oppressedகளும் ஒன்றா ? 80களில் மலைச்சாமியின் மறைவிற்கு பிறகு, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி - விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் போன்றவர்களால் ஏன் ஒரு கட்டத்திற்குமேல் நகர முடியவில்லை ? ஒன்று திராவிட கட்சிகளில் எதாவது ஒன்றிடம் சரணடைந்துவிடுகின்றனர், இல்லை ஒவ்வொரு தேர்தலிலும் லிட்டரலாக ஒன்றுமே செய்ய இயலாமல் விஜயகாந்தை எல்லாம் முதலமைச்சராக முன்னிறுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இக்கட்சிகளின் தலித் மக்களுடனான செயல்பாடு (பள்ளர் - பறையர் - அருந்ததியர் பிரச்சனையே பெரும்பிரச்சனை), நோக்கம், கட்ட பஞ்சாயத்து (என் ஊர் திண்டுக்கல். திண்டுக்கல் - திருச்சி - மதுரை, பகுதிகளில் செமத்தியான கட்ட பஞ்சாயத்து நடவடிக்கைகள் உண்டு) எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு - இக்கட்சிகளின் நிலைமைக்கு இவர்களை மட்டுமே காரணாமாக சொல்வது சரியாக இருக்குமா என்று யோசித்தல் நலம். தலித்களுக்கான கட்சி என்பதாலேயே இவர்கள் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற கட்டயாம் வேறு உண்டு. 60 ஆண்டுகால திராவிட கட்சிகளுக்கு இந்தத்தொல்லை இல்லை. தலித் கட்சிகளிடம் நாம் கேட்கும் கேள்விகளை திராவிட கட்சிகளை நோக்கி கேட்பதில்லை என்பதே உண்மை.

திராவிட கட்சிகள் எப்படி தலித் கட்சிகளை dismantle செய்கிறார்கள் என்பதற்கு, 1999 லோக் சபா தேர்தலே சாட்சி. திமுக + பாமக + பிஜேபி கூட்டணி. முதன்முறையாக பிஜேபி வலுவாக தமிழகத்தில் காலூன்ற ஆரம்பித்தது இந்தத்தேர்தலிலிருந்துதான். அதுஒருபக்கமிருக்க, 90களில் கிருஷ்ணசாமி, திருமா போன்ற தலித் தலைவர்கள் தலித் ஓட்டுகளை நிர்ணையிக்கும் சக்திகளாக உருவெடுக்கத்தொடங்கினர். இந்நிலையில் சிதம்பரம் தேர்தல் வருகிறது. என்ன நடந்தது ?



Src: PhD Thesis: N.R.Suresh Babu - DYNAMICS OF CASTE CONFLICTS IN SOME SELECTED VILLAGES OF TAMIL NADU: A SOCIOLOGICAL STUDY

90களில் தான ஜாதி அத்துமீறல்கள், கொலைகள், வன்முறைகள் தென்தமிழகத்தில் மீண்டும் பரவலாக தலையெடுக்கத் தொடங்கின. தேவர், வன்னியர், பின் - 90களில் கவுண்டர்கள் - புதுபுது கட்சிகளாக ஆரம்பிக்கத்தொடங்கினர். கூடவே, 90களில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முக்குலத்தோரின் ஜாதிய வன்முறைகள் அதிகமானதேயன்றி குறையவில்லை. நாப்பது பக்கத்திற்கு 90களின் ஜாதிய வன்முறை பற்றி எழுதலாம் (மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் PhD தீசிஸை ஆர்வமிருப்பின் படித்துப்பார்க்கவும்). திமுக\அதிமுக, இரண்டு கட்சிகளுமே ஓட்டை மனதில் வைத்துக்கொண்டு பெரிதாக எதையும் செய்யவில்லை. தலித்கள் மீதான வன்முறைக்கு காரணமானவர்கள் எத்தனைபேர் தண்டிக்கக்பட்டிருபபார்களென்று நினைக்கிறீர்கள் ? // C.Lakshmanan, assistant professor at the Madras Institute of Development Studies, points out that not a single person has been punished for atrocities against Dalits in the last 70 years, though a dozen or so enquiry commissions have been set up. Worse, he says, not even one member of these commissions has been a Dalit //. எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் அவர் சொன்னாரென்று தெரியவில்லை. ஐந்து வருடங்கள் முந்தைய கட்டுரை என்பதால் நிலைமை கொஞ்சம் தேறியிருக்கும்.

இந்தத் தகவல்களெல்லாம் ஏன் மிகமுக்கியமென்றால், இப்படி யோசிப்போமே. ஒரு பொதுத்தொகுதி இருக்கிறது. 2 லட்சம் பேர் இருக்கிறார்கள். 70,000 பேர் வன்னியர்கள். 50,000 பேர் தேவர்கள். 40,000 தலித்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஏற்கனவே அந்த இரண்டு க்ரூப்பும் தலித்களை ஒடுக்கி வருகிறது. இதில், திமுக/அதிமுக போன்ற கட்சிகள் இந்த ஜாதி கட்சிகளுக்கு பெரிய முக்கியத்துவம்கொடுத்து அவர்களை அங்கிகரிக்கும்போது - அங்குள்ள தலித் மக்கள் நிலைமை ? அவர்களுக்கான பிரதிநிதியாக யார் செயல்படுவார்கள் ? வன்முறையின்போதுகூட திராவிட கட்சிகள் எப்படி "சுமூகமாக" பிரச்சனையை முடிப்பதென்றுதான் பார்க்கிறார்களே தவிர ஒரு நடவடிக்கையையும் எடுத்ததில்லை. எடுக்கவும் மாட்டார்கள் (ஜாதி வன்முறைகளை உதாரணமாக மட்டுமே சொல்லியிருக்கிறேன். Physical violenceசை தாண்டி, தலித்கள் அனுபவிக்கும் mental violence ரொம்ப அதிகம்). சரி, reserved தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தலித் வேட்பாளர்களாவது அரசிடம் இதுபற்றி பேசி எதாவது செய்யலாமென்றால் - அவர்களும் திமுக/அதிமுக கட்சிகளின் பிரதிநிதிகள். அவ்வளவே. ஆக தலித்களுக்கான நிஜமான பிரதிநித்துவம் இன்றுவரையில் இல்லையென்பதே நிதர்சனம்.

இதற்குத்தான் அம்பேத்கர் - Separate Electorate முறை - வேண்டுமென்று தலைப்பாடாக அடித்துக்கொண்டார். ப்ரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவும் செய்தது. காந்தி & கோ உள்ளே புகுந்து அனைத்தையும் கெடுத்துவிட்டனர். Separate Electorate முறை ஏன் முக்கியம் ?  ஏன் தேவை ? 2004ல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மிகத்தெளிவாக கூறியுள்ளதை படிக்கவும். ஆனால் - அதே கிருஷ்ணசாமி இன்றிருக்கும் நிலைமை ?. 

1) Dalit leader calls for revamp of electoral system

அட பொதுத்தொகுதிகளை விட்டுத்தள்ளுங்கள். SC/STகளுக்கான தனித்தொகுதிகளை எடுத்துத்கொள்வோமே. 2016 சட்டசபை தேர்தல். என்ன கொடுமை ஐயா இது. தலித் தொகுதியில் பாமக, தலித் வேட்பாளர்களை நிறுத்துகிறது. அவர்களுக்கு விழுந்திருக்கும் ஓட்டை பாருங்கள். சில இடங்களில் தலித் கட்சியான விடுதலை சிறுத்தைகளை விட அதிகளவில் பாமக ஓட்டு வாங்கியிருக்கிறது. ஒரு பேச்சுக்கு, பாமக தலித் தொகுதி ஒன்றில் வெற்றிபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் கட்சி தலித் முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறது என்று எடுத்துக்கொள்ள முடியுமா ?. 
2016 SC/ST Constituencies. Data Src: Election Commission of India

2011 தேர்தல் இன்னொரு காமெடி. ஜாதிக் கட்சிகளான பாமக + கொங்குநாடு முன்னேற்ற கழகம், இரண்டோடு, தலித் கட்சியான விடுதலை சிறுத்தைகளுடன் திமுக தேர்தலை சந்திக்கிறது (திமுகவை பொறுத்தவரை தொடர்ச்சியாக ஒன்றைக்கவனிக்கலாம். கூட்டணியிலிருக்கும் தலித் கட்சியினருக்கு SC/STகளுக்கான தொகுதியை மட்டுமே பெரும்பாலும் ஒதுக்குவார்கள்). தலித்களுக்கான தொகுதிகளில் கூட, திராவிட கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதற்காக அவர்களுக்கு தலித் ஓட்டுகள் நிறைய விழுகிறதென்று அர்த்தம் கிடையாது. தலித்கள் ஓட்டுகள் போடாவிட்டால்கூட பல தொகுதிகளில் பிற ஜாதியினரின் ஓட்டுகள் மூலம் இக்கட்சிகள் ஜெயிக்க வாய்ப்புண்டு. In fact, தலித்கள் ஓட்டுக்கள் யாருக்கு போகின்றன என்பதே சரியாகத் தெரியவில்லை. இதைத்தன அம்பேத்கர் representation குறைபாடு என்கிறார். 


2006 SC/ST Constituencies. Data Src: Election Commission of India

2011 SC/ST Constituencies. Data Src: Election Commission of India
சரி, திராவிட கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்களையாவது அமைச்சரவையில் உட்கார வைக்கிறார்களா ? அதிலும் பட்டும்படாமல் இருக்கிறார்கள். இன்று நேற்றல்ல, 1977 முதல் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. ஆச்சரியகரமாக - கம்யூனிஸ்ட்கள் - திராவிட கட்சி ஆளும் மாநிலங்கள்தான் முதல் மூன்று இடங்களில் உள்ளது. அப்படியே இலாக்காள் ஒதுக்கப்பட்டாலும் முக்கிய இலாக்கள் ஒதுக்கப்படுவதில்லை.


Lok Sabha Elections:

தற்போதைய இந்திய சூழ்நிலையில் மிகமிக cruicalலானது  அம்பேத்கரின் இவ்வார்த்தைகள் “As I understand the matter, the fundamental issue is: Are the Untouchables a separate element in the national life of India or are they not? This is the real issue in the controversy and it is on this issue that the Congress and the Untouchables have taken opposite sides. The answer of the Untouchables is yes. They say, they are distinct and separate from the Hindus. The Congress on the other hand says No' and asserts that the Untouchables are a chip of the Hindu block”. அம்பேத்கர், பலமுறை இதே கருத்தை திரும்பத்திரும்ப கூறி வந்துள்ளார். “We are not a subsection of the Hindus but a separate element in the national life”. காந்தி Separate electorate முறைக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கக்காரணமும் இதுதான். தலித்களுக்கென்று Separate electorate கொடுக்கப்பட்டால், அவர்கள் ஹிந்து மதத்தின் பகுதி இல்லையென்ற அம்பேத்காரின் வாதத்தை அங்கீகரிப்பதுபோலாகிவிடும்; தவிர, ஹிந்துக்கள் – தலித்கள் கைவிட்டுவிட்டார்கள் என்ற “பழி” நேரிடும்; ஹிந்து மதம் பிளவுபடும்; தலித்கள் முற்றிலுமாக புறந்தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது; தலித்களை முன்னேற்றுவது ஹிந்துக்கள்/காங்கிரஸ்ன் கடமை என்று உறுதியாக பெருசு நம்பினார். 

இங்குதான் பெரிய ட்விஸ்ட். Entered RSS/VHP/BJP. தலித் அரசியலை தேசிய அளவிலும்/மாநில அளவிலும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் கடந்த 10 – 20 ஆண்டுகளாக ஒரு ட்ரென்டை கவனித்திருக்கலாம். BJP, அதிகளவில் தலித் ஓட்டுகளை வாங்க ஆரம்பித்திருப்பது. இதுவரை இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு – 2014 Lok Sabha தேர்தலில், BJP – மொத்த தலித் ஓட்டுகளில் 25%தை பெற்றது. 2014 Lok Sabha தேர்தலில் 84 Reserved SC Seats, 47 Reserved ST Seatsகளில் ஏறக்குறைய பாதியை BJP தான் பெற்றது. போனவருடம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் தலித்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் BJP வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது (ஒருவாறு எதிர்பார்த்தேன்). இரண்டு நாட்கள்முன்புகூட - Rajnath Singh BJP asks workers to counter Congress propaganda about party being anti-Dalit - கூறியிருந்தார். BJP, திரும்பத்திரும்ப தலித்களை குறிவைக்கக் மிகமிக எளிமையான காரணம், தலித்களுக்கென்று (Uttar Pradesh நீங்கலாக) இந்திய அளவில் (மாநில அளவிலும் கூட) செல்வாக்குமிகுந்த கட்சி கிடையாது, தலைவர் கிடையாது. ஆனால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் 15% - 25% ஓட்டுகள் அவர்கள்வசம் உண்டு.



சரி, BJP இவ்வளவு ஓட்டுகள்/சீட்கள் வாங்கியிருக்கிறதே...அப்படியென்றால் தலித்கள் அவர்களை நம்புகிறார்கள், “தலித்களின் பாதுகாவலர்கள்” நாங்களென்று அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாமே ? 

1) Nature of crime against Dalits has worsened after 2014

2) Since 2014, crimes against SCs have increased one percent overall, although there was a steep rise of 5.5 percent in 2016


3) Violence against India’s Dalit women on the increase

4) Dalits have realised BJP is not for them


வலுவிழந்திருந்த பல சேனாக்களும், பரிக்ஷத்களும் மீண்டும் வலுப்பெற்று எழத்தொடங்கியிருப்பது BJPயின் ஆட்சி காலத்தில்தான். இதைத்தாண்டி, Reserved தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தலித்களுக்காவது அமைச்சரவையில் இடமுண்டா என்றால்...ம்ஹும். காங்கிரஸ், BJP, ஏன் Communist கட்சிகள் உட்பட (BSP நீங்கலாக) – இந்தியாவில் எந்தக்கட்சியும் தலித்களுக்கு அமைச்சரவையில் போதிய இடங்கள் தருவதேயில்லை. கொடுக்கப்படும் இலாக்காக்களும் முக்கிய துறைகளாக இருப்பதேயில்லை. BJP ஆளும் மாநிலங்களில் தலித்களுக்கெதிரான வன்முறைகள் எந்தளவிற்கு வலுப்பெற்று வருகிறன - தலித்களின் ஓட்டுகள் எந்தளவிற்கு தேசிய கட்சிகளுக்கு முக்கியம் என்பதையெல்லாம் புரிந்துகொள்ள இந்த கட்டுரைகளை படித்துப்பார்க்கவும்

1) The Dalit awakening

2) The Political battle for Dalit votes

3) Old Dalit vs New Dalit: How battle for 23 million new voters can play out

Epilogue:

கல்வியில் - வேலையில் - மற்ற துறைகளில் ரிசர்வேஷன் காரணமாக பல தலித்களின் நிலைமை வெகுவாக மாறிவருகிறது. இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் individualகளின் முன்னேற்றங்களை ஒரு கூடத்தின் collective முன்னேற்றமாக எடுத்துக்கொள்ள முடியுமா ? அப்படியான முன்னேற்றத்தின் அடையாளமான political freedom இன்னமும் அவர்களை சென்றடையவில்லையே. அப்படி நடந்திருந்தால் - SC ST Atrocities actல் சூப்ரீம் கோர்ட் வேறுமாதிரி தீர்ப்பு வழங்கியிருக்கக்கூடும். இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ? இருக்கிறது. இதுவரை எத்தனை தலித் நீதிபதிகள், சூப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகளாக பதவியேற்றிருக்கிறார்களென்று நினைக்கிறீர்கள். ஒரே ஒருவர். அட..சூப்ரீம்கோர்ட் வரை போவானேன். ஹை கோர்ட்களில் மட்டும் என்ன வாழ்கிறதாம் ? After 2010, not even a single Dalit chief justice in 24 high courts.

முதலில், பிற்படுத்தப்பட்டோர் - தலித்கள், இருவரும் ஒன்றா ? தேவரும் யாதவரும் ஒன்றா ? நாடாரும் கொங்கு கவுண்டரும் ஒன்றா ? முதலியாரும் வன்னியரும் ஒன்றா ? அட, தலித்தும் தலித்தும் ஒன்றா ? புரியவில்லையா...பறையரும் அருந்ததியரும் ஒன்றா ? வெட்டிக்கொண்டு சாகிறார்கள். எல்லாதரப்பு மக்களுமே victims of caste system தான். ஓகே. ஆனால் ஒரு victimமான வன்னியரும் தேவரும் இன்னொரு victimமான பள்ளரையும் பறையரையும் இப்படித்தான் நடத்துவானா ? அது வேறொன்றுமில்லை. அடிப்படையான மனித சைக்காலஜி. பார்ப்பான், நம்மை அடிமையாக நடத்துகிறானே. அப்படியென்றால் நாமும் நம்முடைய அதிகாரத்தை யாரிடம் காண்பிப்பது...பறையரிடம் தான். பறையர்களோ -> அருந்ததியரிடம். இதுவொரு endless cycle. எனக்குத்தெரிந்து இது ஒழிய வாய்ப்பேயில்லை. இந்நிலையில்தான் எல்லாவற்றையும் ஒன்றாக்கி திராவிடம் பேசும் அரசியல் கட்சிகளை/ஆட்களை பயத்துடன் பார்க்க வேண்டிருக்கிறது.


எனது ஊரான திண்டுக்கலில் 2016 தேர்தலில், ஆத்தூர் தொகுதியில் - திமுக சார்பில் ஐ பெரியசாமியும், பழனியில் அவரது மகன் ஐ.பி/செந்தில்குமாரும் நிற்கவைக்கப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் கட்சியில் இடமளிக்கிறது. ஆனால், ஒரு தலித் வேட்பாளர்கள்கூட அவர்களுக்கு கிடைக்கவில்லைபோலும். பாவம்.திமுகவின் உள்கட்சியிலாவது ஏதாவது முன்னேற்றம் ? DMK has 1 Dalit among its 65 district secretaries. ஒருவராவது இருக்கிறாரே. அந்தமட்டுக்கும் மகிழ்ச்சி. அட கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமென்ன சளைத்தவர்களா...இதைப் படியுங்கள். ஆனால் ஆச்சரியகரமாக இரண்டு கட்சிகளும் பதிலும் ஒரே மாதிரியே - BJPதனமாகவே உள்ளதை கவனியுங்கள். மாறாக அணைத்து கட்சிகளும் தலித் ஓட்டுகளை tokenize செய்வதிலேயே முனைப்பாக உள்ளன. BJP - தலித் ஜனாதிபதி போல. மைல்கல்லில் ஹிந்தியில் எழுதினால் தமிழ்நாடே கொதிக்கிறது. சோஷியல் மீடியா அலறுகிறது. ஏனென்றால் BJP/ஹிந்திமயம் - தமிழர்களின் (திராவிடர்களின்) பொது எதிரி. ஆனால் - ஜாதி நம் எல்லோருக்குமான பொது எதிரி இல்லையா ? அப்படித்தானே இருக்க வேண்டும். அதுதானே நியாயம். ஆனால் தேர்தலென்று வரும்போது இவ்வளவு மோசமாக உள்ளது. ஆனாலும் நமக்கு இதுபற்றி எவ்வித சங்கடமும் இல்லை. கவலையும் இல்லை. நமக்கு பிடித்தமான கட்சி/அதன் தலைவர். அதுவேபோதும். தலித்களின் நிலைமைதான் மிகப்பரிதாபகரமாக உள்ளது. ஒரு நல்ல தலைவரும் இல்லை; கட்சி இல்லை; பிடிக்கிறதோ இல்லையோ தொகுதியில் நிற்கும் யாருக்காவது ஓட்டு போட்டுத்தொலைய வேண்டியிருக்கிறது. Even, Ambedkar சொன்னபடி Separate electorate இருந்திருந்தால் கூட - தற்போதைய சூழ்நிலையை வைத்து சொல்வதென்றால், எனக்கொன்றும் தலித்கள் பெரிதாக தேர்தல்களத்தில் வளர்ந்துவிட முடியுமென்று தோன்றவில்லை. Their electoral future is very bleak it seems. இந்த election முறை - வோட்டிங் முறை - கூட்டணி கட்சி - பெரும்பான்மை - இத்யாதிகள் - கடும் சிக்கல்நிறைந்ததாக உள்ளது. கணிப்பு தவறினால் மிகமிக சந்தோஷம்.

Note: 2006 - 2016 வரையிலான Election Commission of Indiaவின், தமிழ்நாடு தேர்தல் ரிபோர்ட்களில், வேட்பாளர்களின் ஜாதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்து அனைத்து pdfகளையும் டவுன்லோட் செய்து, நானே process செய்த data. So, தவறுகளுக்கு வாய்ப்பில்லை.