WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens.
மேலே படத்தில் இருக்கும் பெண்மணி வல்லரசு (அல்லது) developing country எனும் வேற்றுகிரகத்தை சேர்ந்தவர். இந்த வேற்றுக்கிரகவாசிகளை சாதாரண மனித உருவத்தில் தேனி - மதுரை முதற்கொண்டு ரயில்வே நிலையங்கள் வரை அநேகம்பேர் பார்த்திருப்போம். ஒருமுறை இதுபோன்றதொரு வேற்றுகிரகவாசியை சந்திக்க நேர்ந்தது. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, மிகுந்த ஆச்சரியகரமான ஒரு விஷயம் தெரிய வந்தது. அந்த கிரகத்திலும் ஜாதி என்று அமைப்பு - ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்ததே, அது போல இருக்கிறதாம். இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் 98% ஒரே ஜாதி தானாம். ஆஸ்துமா - காசநோய் - சர்மநோய்கள்(இன்னும் என்னென்னவோ நோய்கள் எல்லாம் சொன்னார்கள்) எல்லாவற்றையும் விட கடுமையான மன உளைச்சல் - சமூக தீண்டாமை போன்றைவகள் எல்லாம் இருந்தும் இந்த வேலைதான் செய்வோம் என்று பிடிவாதமாக இருப்பதாக சொன்னார்கள். அதில் 30 - 40% வரை தங்களது வாரிசுகளையும் இந்த தெய்வ செயலுக்கே நேர்ந்து விட்டிருப்பதாய் சொன்னார்கள்.
இருந்தாலும் எனக்கு மனசு கேக்கவில்லை. ஏன் உங்கள் அரசாங்கம் பல நடவடிக்ககைள் எடுக்கிறதே. உங்களுக்கு உதவுவதற்கென்றே நிறைய திட்டங்கள் வகுத்துள்ளதே, அதெல்லாம் உங்களுக்கு தெரியாதா என்று கேட்க, அப்படியா என்று பதிலுக்கு அவர் என்னை கேட்கிறார். உங்க நாடு மாதிரி இல்ல தம்பி, இங்க ஜாதி ரொம்ப பாப்பாங்க. அதுவும் இந்த வேல செஞ்சவங்கனு தெரிஞ்சா வேற வேலையும் தர மாட்டேங்குறாங்க. வேற வேல கெடைக்காட்டி என்ன பண்ண, மறுபடியும் இதுக்குதான் போகணும். ஆனா இப்ப கொஞ்சம் நெலம பராவாயில்ல. நிறைய பேர் வேற பக்கம் பொழப்பு தேடி போக ஆரம்பிச்சுட்டாங்க.
இன்னொரு விஷயமும் சொன்னாரு. படிக்க பள்ளிகூடத்துக்கு போகுற அவுங்க பிள்ளைகள விட்டு ஆசிரியர்களே டாய்லெட்ட கழுவச் சொல்றாங்களாம். யப்பா....என்னவொரு கொடூர கிரகம் அது. நம்ம நாடு சொர்க்கமங்க. நல்லவேல, நம்மநாடு அந்த கிரகம் மாதிரி இல்ல. பயங்கர வசதியோட - அணுவுலை வெச்சு - நுக்ளியர் பார்க்லாம் கொண்டு வரப்போற பயங்கர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாடாக இருப்பதால் இந்த கீழ்த்தரமான - சக மனிதனை நடத்தும் அசிங்கம் எல்லாம் இங்க இல்ல. எத்துனை குடுத்து வைத்தவர்கள் நாம்.
During the partition of India and Pakistan in 1947, migration to India was allowed except for the manual scavengers, because if they were allowed to leave, then who would do their job? Government of India was concerned about Hindus residing in Pakistan but not them. The author of the Indian Constitution Dr. Ambedkar expressed his deep concern about this unfortunate community in Pakistan by writing a letter to the then Prime Minister Jawahar Lal Nehru. He said that the Hindu scavenging employees in Pakistan were being forced to do the degrading work warranting the intervention of the government of India. Yet, even after so many years of Independence the practice continues. It also exists in Bangladesh, Sri Lanka, Nepal and Pakistan but in different forms. In all the countries it is based on caste hierarchy.மேல இருக்கும் தகவலகளை இந்த லிங்க்ல இருந்து எடுத்தது. கண்டிப்பா அனைவரும் படிக்க வேண்டுகிறேன். நா சொல்லியிருக்குறது நூத்துல பத்து சதவிகிதம் தான். மதுரையில் எவிடன்ஸ் அமைப்பினர் - கதிர் - கூட இதுபற்றி நிறைய பத்திரிக்கைகளில் எழுதியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். இன்னொரு முக்கிய விஷயம், இந்த புள்ளி விவரங்கள் அரசாங்கமே கொடுத்தது. அரசாங்க புள்ளி விவரங்கள் எப்படி இருக்கும்னு நமக்கு தெரியும். அப்ப, உண்மை நிலவரம் எப்படி இருக்குமோ ?
மேலும் அந்த கிரகத்த பத்தி நா தேடி எடுத்த புள்ளி விவரங்கள பாருங்க.
- 65% மக்களுக்கு டாய்லெட் வசதி இல்லை, இருங்க இது வெறும் ஆரம்பம்தான். கொஞ்சம் பின்னாடி வரும் ஷாக்கிங்கான பாய்ன்ட்கள ஊன்றி படிங்க.
- பிரசவத்தின் போதும் பிரசுவித்த பிறகு 42 நாட்களுக்கு பெண்கள் இறப்பு விகிதம்(Maternal mortality rate) - 8 நிமிசத்துக்கு ஒரு பெண் இங்க இறக்க நேரிடுகிறது (பங்களாதேஷ் - ஸ்ரீலங்கா கூட நமக்கு முன்னாடி தான். Again, இந்த இறப்பு விகிதம் லோயர் க்ளாஸ்ல தான் மிக அதிகம்.
Source:
- உலகளவில் இருக்கும் குழந்தை தொழிலாளர்களில் 30% (5 - 14 age group)இங்க தான் இருக்காங்க.
Source:
- Human Development index - மனிதவள மேம்பாட்டு குறியீட்டில், 134வது இடம். நமது ஆதர்ச ஹீரோக்கள் - அமேரிக்கா - பிரான்ஸ் - ஜெர்மனி -கனடா - இங்கிலாந்து எத்தனையாவது இடம் தெரியுமா ? (வல்லரசுனா இதுல காமிக்க வேண்டியதுதான உங்க வளர்ச்சிய). அட, நமக்கு முன்னாடி பல ஆப்ரிக்க நாடுகள் குட இருக்கு.
Source:
இதுமாதிரி பல புள்ளி விவரங்கள அடுக்கிகிட்டே போகலாம். அதுனால என்ன பிரயோஜனம் ? ஒண்ணும் கெடையாது. GDP அதிகமாகுறது மட்டுமே வளர்ச்சின்னு பல காலமா நம்ம பொது புத்தியில பதிய வெச்சாச்சு. இனி அத ஒண்ணும் பண்ண முடியாது.
கவலையெல்லாம் இத்தன அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது, இந்தளவுக்கு அணு சக்தி திட்டங்களில் முனைப்பு காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு ? எந்த ரஷ்யன் விஞ்ஞானியோ, நம்ம ஆட்களின் போராட்டம் பத்தி டிவில நக்கலா பேட்டி தரான். அதையும் வெக்கமில்லாம நாம பாத்துகிட்டு இருக்கோம்.
இந்த வளரும் நாடு - சூப்பர் பவர் - அமெரிக்க - வல்லரசு - லொட்டு லொசுக்குன்னு பேசும் விஞ்ஞானிகள், மேல இருக்கும் கேள்விகளோட இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லுவாங்கன்னு நம்புறேன்.
- இந்தியா தவிர, அணு சக்தி பயன்படுத்தும் - நீங்க ஆதர்சமா அடிக்கடி இதுபோன்ற "வளர்ச்சிகளுக்கு" உதாரணம் காட்டும் பிரான்ஸ் - அமெரிக்க - ஜப்பான் - கனடா - ஜெர்மனி - இங்கலாந்து போன்ற நாடுகளில், இதுபோல பீயை கைகளில் அள்ளும் ஆட்களை காமிங்க பாப்போம்.
- 1980கள் முதற்கொண்டு அணு திட்டம் மட்டும் போட தெரியுதுல்ல. சுதந்திரம் வாங்கி 65 வருஷத்துல இதுபோன்ற மனித கழிவுகள அகற்றும் ஆட்களுக்கு என்னத்த கிழிச்சீங்க.(ஓரளவு முன்னேற்றம் இருக்கு. ஆனா, படு பயங்கர ஸ்லோ. அத முன்னேற்றம்ன்னு கூட சொல்ல முடியாது)
- உண்மையான வளர்ச்சி என்பது வெறும் அணு சக்தி தானா ? அடிப்படை வசதிகளான, சுகாதாரம் - மருத்துவம் - அதற்குறிய காப்பீடு - கல்வி - மாதிரியான விஷயங்கள் இல்லையா ? ரைட்டு, இந்த துறைகளில் முன்னேற்றம் இருக்கவே செய்யுது. ஆனா, உலகத்துலையே மெதுவா நகர்கிற உயிரினம் ஸ்லோத் என்பதுதான் - அதவிட மெதுவால இந்த துறைகளில் வளர்ச்சி இருக்கு.
- மருத்துவம் - கல்வி வளர்ந்திருக்கு. ஆனா அதுலையே எத்தன ஏற்ற தாழ்வுகள். ஏன் ஒரே மாதிரி சிஸ்டம் இல்ல.
- இன்னொரு பெரிய ஜோக். பாதுகாப்பு துறைய வலுப்படுத்தவாம். கிளிச்சாங்க. உலகளவில் பாதுகாப்புக்கு என்று அதிகளவில் நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒண்ணு. ஆனா, என்ன பிரயோஜனம். சிறிலங்கா மாதிரி கொசுவ கூட ஒண்ணும் பண்ண முடியல. குறைந்தபட்சம் மிரட்டவாவது முடிஞ்சதா. அதுக்கு கூட துப்பில்ல. தென் கொரியா மாதிரி சின்ன நாடுகளுக்கு இருக்கும் தைரியத்தில் நூத்துல ஒரு சதவீதம் கூட நம்மகிட்ட இல்ல. அப்பறம் என்ன மயிரு பாதுகாப்பு துறைக்கு இத்தன கோடி.அதையாவது ஒழுங்கா செஞ்சாங்களா. அந்த துறைல கூட ஊழல்.(2.7% of GDP on military expenditure)
- இந்த அடிப்படை தேவைகள எல்லாம் பிற "வளர்ந்த" நாடுகள் மாதிரி ஆக்கிட்டு அப்பறம் இதுக்கு வர வேண்டியதுதான.
- என்னமோ சொந்த மூளையில கண்டுபுடிச்ச டெக்னாலஜி மாதிரி இத்தன பீட்டரு....இதுவும் ஐரோப்பியர்கள் கண்டுபுடிச்ச விஷயம் தான. இதுல கூட புதுசா ஒண்ணும் கண்டுபுடிக்க முடியல. இதல எங்கிருந்து தன்னிறைவு ?
- இத்தன வருஷமா - சுமார் முப்பது ஆண்டு காலமா என்னதான் இந்த அரசாங்கங்கள் மாற்று திட்டம் வெச்சிருந்தது ? இதுகுறித்து கொஞ்சம் கூட யோசிக்கலையா....இல்ல, யோசிக்க ரஷ்யாவின் டோலர்கள் விடலையா ?
சரி, இத்தனையும் மீறி - இதுதெல்லாம் சகஜம் தான். "வளர்ச்சி" தான் முக்கியம்ன்னு சொல்றவங்கிட்ட ரெண்டே ரெண்டு கேள்வி மட்டும் கேட்க ஆசை.
- வாரன் ஆண்டர்சன் யாரு தெரியுமா ?
- போபால் மக்களுக்கு எவ்வளவு ஈழப்பீடு குடுத்தாங்க தெரியுமா ?
நாளை பாப்போம்..தூங்க போறேன்...
ReplyDeleteஷேர் பண்ணிட்டேன் :((
ReplyDeleteபளீரென்று அறை வாங்கியது போன்ற ஒரு உணர்வு!
ReplyDelete:( உண்மைகள்
ReplyDeleteவல்லரசு இல்லை "வள்'லரசு
ReplyDeleteசெவிட்டுல அறையர மாதிரியிருக்கு கொழந்த ...
ReplyDeleteமிக அருமையான பதிவு! அணுகுண்டு வைத்திருப்பது மட்டுமே வல்லரசு ஆவதற்கான தகுதி நம்புபவர்களை என்ன செய்வது? இன்னும் யாரும் உங்களின் தேச பக்தியைப் பற்றிக் கேள்வி எழுப்பவில்லையா? :-)
ReplyDelete//(பங்களாதேஷ் - ஸ்ரீலங்கா கூட நமக்கு முன்னாடி தான்//
நீங்கள் கொடுத்த லிங்கில் ஸ்ரீலங்கா பற்றி எதுவும் சொல்லவில்லை. ஸ்ரீலங்கா இந்த விஷயத்தில் 113 வது இடத்தில்தான் இருக்கிறது!
அரசியல் சூழ்நிலை, யுத்த அழிவுகள் காரணமாக பின்னடைவில் இருக்கிறதே தவிர, சிசு மரண வீதம், எழுத்தறிவு வீதம், சராசரி ஆயுட்காலம், சுகாதாரம் போன்ற பல விஷயங்களில் ஸ்ரீலங்கா சக சார்க் நாடுகளுடன் ஒப்பிட முடியாது!
(மனித உரிமைகள் பற்றி மட்டும் சொல்வதற்கில்லை! :-) )
ஒருமுறை ஸ்ரீலங்கா வந்து பார்த்தால் நிச்சயம் ஆச்சரியம் அடைவீர்கள்!
நிச்சயம் அவசியமான பதிவு! நிறையத் தேடி இருக்கிறீர்கள்! Hats off!
கூடங்குளத்தில் பிரியங்காவும் வதேராவும் தனிக்குடித்தனம் வருகிறார்களாம்.
ReplyDeleteஅப்துல்கலாம் கூட ஒரு குடிசை கட்டி குடி வரத்தயாராயிருப்பதாக கேள்வி.
இவ்வளவு பேர் வரத்தாயாராய் இருக்கும் போது நீங்க ஏன் இன்னும்
பயப்படுறீங்க!!!!!!!!!????????????
போபாலில் வெடித்தது பட்டாஸ்தான்.பட்டாஸ் வெடித்ததற்க்கெல்லாம் நிவாரணம் தரமாட்டார்கள்.
ReplyDelete@ ஷங்கர்
ReplyDeleteரொம்ப முக்கியாம நான் எழுதியதுன்னு நினைக்கிற சில கட்டுரைகள நீங்க எப்பவும் ஷேர் செய்ய மறப்பதில்லை. நன்றி.
@நேர்கோடு - கோவி.கண்ணன் - இராமசாமி கண்ணன்
ஆம் நண்பர்களே. ஒவ்வொரு தடவ ரயில்வே ஸ்டேசன்களிலும் பல ஊர்களிலும் இத்த பாக்கும் போது, பளார்ன்னு அற வுழுகுற மாதிரி தான் இறக்கும். ரொம்பநாளா இருந்தது. சரி, எழுதுவோம்னு எழுதியாச்சு..
@ஜீ
HDI - WHO போன்ற புள்ளி விவரங்களில் ஸ்ரீலங்கா பல மடங்கு மத்த ஆசிய நாடுகளை விட உயர்வாதான் இருக்கு. பங்களாதேஷ் கூட சேர்த்து சொன்னது சரியில்ல தான். ஒரு flowல வந்திருச்சு.
தேசபக்தி - இதுவர இல்ல. ஆனா அது ரொம்ப இருக்கிறதுனால தான எனக்கும் பல நண்பர்களுக்கும் நடக்கும் நிகழ்வுகள் கவல தருது......
@உலக சினிமா ரசிகன்.
நாராயனசாமி இந்த மாதிரி அறிக்கை விட்டாலும் ஆச்சரியம் இல்ல. உருப்படாத பசங்க.
நண்பர்களே....இவ்வளவு சீக்கிரத்துல நா எந்த பதிவும் எழுதுனது இல்ல. அதுனால அவசரமா முடிச்ச மாதிரி ஆயிருச்சு. இன்னும் - தெளிவா - புள்ளி விவரங்கள் - தகவல்களோட இருந்திருக்கலாம். பாப்போம்.
ReplyDeleteஅணு உலை வைப்பதற்கு சொல்லும் காரணம் மின் உற்பத்திதானே? அதற்கு மாற்று வழிகள் இந்தியாவில் இல்லையா?
ReplyDeleteமலம் அள்ளும் வேலை, கழிவறை கழுவுதல் இதுபோன்று குறிப்பிட்ட வேலைகளை குறிப்பிட்ட இனத்தவரே செய்வதை நானும் பார்த்திருக்கிறேன். இப்போது அந்த நிலை நகரப் பகுதிகளில் ஓரளவு மாறியிருந்தாலும் கிராமப்புறங்களில் எந்த அளவு என்று தெரியவில்லை...
ReplyDeleteகடைசியாக கேட்டிருக்கும் அந்த இரண்டு கேள்விகள் சவுக்கடி...
ReplyDeleteஆழமான எழுத்துக்கள்... மிக உபயோகமான பதிவு...தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...
//நேற்று அணியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் முழுப்பெயரையும் தெரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு கார்கில் போரிலும், மும்பை 26/11 குண்டுவெடிப்பிலும் இன்னுயிர் ஈந்த காவல் வீரன் ஒருவனின் பாதிப்பெயராவது தெரியுமா? இதில் எதை தேசபக்தியென வரையறுப்பீர்கள்? //
நெத்தியடி கேள்வி.. நம்ம ஆட்களின் தேசபக்தி கிரிக்கெட்டில்தான் இருக்கிறது போலும்...
நட்புடன்
கவிதை காதலன்
முக்கியமான பதிவு கொழந்த..
ReplyDelete//படிக்க பள்ளிகூடத்துக்கு போகுற அவுங்க பிள்ளைகள விட்டு ஆசிரியர்களே டாய்லெட்ட கழுவச் சொல்றாங்களாம்.//
ReplyDeleteஇந்த வசனம் கொடுத்த அதிர்ச்சியிலதான் இன்னும் இருக்கேன்!
ரொம்ப நாள் கழிச்சு எழுதினாலும், அலார்ட்டான ஒரு பதிவு.. தேடித்தேடி தகவல்களை கொட்டியிருக்கிறீர்கள். இப்போதைக்கு HDR மட்டும் வாசிச்சிருக்கேன். மற்றையதையும் வாசிக்கிறேன். நன்றி!!
தினமலம் இந்த மலம் அள்ளும் அம்மாவைப் பற்றி எழுதவில்லையே?
ReplyDeleteஉதயகுமாரை ஒரு தீவிரவாதி போல சித்தரிக்கும் புறம்போக்குத் தாயோளிகள் இந்த இழிநிலையை ஏன் எழுதவில்லை,பொறுக்கி நாதாரிகள்.
அனுக்கழிவுகளை அமெரிக்காவில் 2கிமீ ஆழத்தில் வேர்ஹவுஸ் போல அமைத்து சுமார் 100 வருடத்துக்கு சேமிக்கிறார்களாம்,அவர்களுக்கு சந்தனம் மிஞ்சினால் குண்டியில் தேய்ப்பார்கள்,இங்கே மலத்தை தானே தேய்க்க வேண்டியிருக்கிறது,இது பெரும்பானமையான மலக்காடு தானே?தேச அவமானம்.
சோலார் பேனல்கள் அல்லது மாற்று மின் தயாரிப்பு அமைக்கப்பட்டு தானே மின்சாரம் தயாரித்துக்கொள்ள துப்பு இருக்கும் ஆட்கள் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் தொழிற்சாலைக்கும் தான் புதிதாக மின் இணைப்பு தருவோம்,என்று சொல்ல துப்பு இல்லை,அணு உலையே தான் வேணுமாம்,தூத்தேரி
தினமலம் இந்த மலம் அள்ளும் அம்மாவைப் பற்றி எழுதவில்லையே?
ReplyDeleteஉதயகுமாரை ஒரு தீவிரவாதி போல சித்தரிக்கும் புறம்போக்குத் தாயோளிகள் இந்த இழிநிலையை ஏன் எழுதவில்லை,பொறுக்கி நாதாரிகள்.
அனுக்கழிவுகளை அமெரிக்காவில் 2கிமீ ஆழத்தில் வேர்ஹவுஸ் போல அமைத்து சுமார் 100 வருடத்துக்கு சேமிக்கிறார்களாம்,அவர்களுக்கு சந்தனம் மிஞ்சினால் குண்டியில் தேய்ப்பார்கள்,இங்கே மலத்தை தானே தேய்க்க வேண்டியிருக்கிறது,இது பெரும்பானமையான மலக்காடு தானே?தேச அவமானம்.
சோலார் பேனல்கள் அல்லது மாற்று மின் தயாரிப்பு அமைக்கப்பட்டு தானே மின்சாரம் தயாரித்துக்கொள்ள துப்பு இருக்கும் ஆட்கள் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் தொழிற்சாலைக்கும் தான் புதிதாக கட்டிட அனுமதி,குடிநீர் அனுமதி,என் ஓ சி, போன்றவைகளை தருவோம்,என்று சொல்ல துப்பு இல்லை,அணு உலையே தான் வேணுமாம்,தூத்தேரி
வாரன் ஆண்டர்சனும் தெரியாது பேரன் ஆண்டர்சனும் தெரியாது,ஏனையோருக்கு தலைக்கு மேல் ஃபேன் ஓடினால் போதும்,யாரின் சமாதிமேலும் கூட உடலுறவு கொள்ளக்கூடிய ஜென்மங்களுக்கு.வயிற்றெரிச்சல்ப்பா..இதை அப்படியே ஆஃபீஸில் பகிர்வேன்.
சல்யூட் சாரே.....
ReplyDelete@எஸ்.கே
ReplyDeleteமாற்று வழிகள் பலது இருக்கு. ஆபத்தில்லாம, சோலார்ல எடுக்கலாம் (இதுல கொஞ்சம் நடைமுறை சிக்ககல்கள் இருக்கத்தான் செய்து. வெயில் கொளுத்துற நம்ம ஊர்ல இதுக்கா பஞ்சம்.
நா சொல்ல நெனைகிறது, மாற்று வழி - பாதுகாப்பு - இந்த விசயத்துக்கே போகல,
முன்னேற்ற வேண்டிய துறைகள் - அத்தியாவசிய தேவைகள் பலது இருக்கும் போது, இத இவ்வளவு வலுவா திணிக்க வேண்டிய காரணம் என்ன ??
@ கவிதை காதலன்
நன்றி நண்பா..
@MSK
நன்றி பாஸ்....
@JK
இதெல்லாம் இங்க அடிக்கடி நடக்குறது. மூனாவது - நாலாவது படிக்கிற பிள்ளைங்கள -அதுவும் பெண் பிள்ளைங்கள ஈடுபடுத்துறாங்க.
@நாஞ்சில்...
நன்றி தல.....
@கீதப்ப்ரியன்
ReplyDeleteதலிவா.........பின்னிட்டீங்க.....இப்பதான் பழைய கீதப்ப்ரியன பாத்தா மாதிரி இருக்கு. தனது favorite கெட்ட வார்த்தைகளுடன், செம கமென்ட். உச்சந்தலையில் நங்குன்னு இறங்குது..
உங்கள் பக்கத்தை என் வலைப்பூவில் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட தெறச்சி வால்-க்கு நன்றி. ரௌத்திரம் பழகு என்று இதனால்தான் பாரதி சொன்னானோ... இத்தனைக்கும் மேலே கூடங்குளம் வந்துவிட்டது என்று நினைக்கும்போதுதான் சுயகழிவிரக்கம் தோன்றுகிறது. இருந்தாலும் தொடர்வோம் - நாளையேனும் விடியட்டும்.
ReplyDeletepudhiavan.blogspot.com
அருமை...... கட்டுரை படித்ததுமே என்னவோ போல் ஆகி விட்டது
ReplyDelete//அதில் 30 - 40% வரை தங்களது வாரிசுகளையும் இந்த தெய்வ செயலுக்கே நேர்ந்து விட்டிருப்பதாய் சொன்னார்கள்.//
ReplyDelete//படிக்க பள்ளிகூடத்துக்கு போகுற அவுங்க பிள்ளைகள விட்டு ஆசிரியர்களே டாய்லெட்ட கழுவச் சொல்றாங்களாம்.//
மிகவும் அதிர்ச்சியான விழிப்புணர்வுக் கட்டுரை. ஒன்ன எழுதினாலும் நன்னா எழுதியிருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க.
இப்படிப் பார்க்கும்போது இந்தியாவை வல்லரசாகப் போகும் ஒரு நாடாக பார்க்கமுடியவில்லை. இன்னும் வல்லரசு என்ற சொல்லிற்கான அர்த்தத்தில் இருந்து நிறையத் தூரம் பின்தங்கியிருப்பது போல தோன்றுகிறது. சிவாஜியில் சொல்வது போல “எல்லாம் வந்துருச்சி. இது மட்டும் இன்னும் போகல”
இப்படிப்பட்ட வேளைகளில் இலங்கை எவ்வளவோ பரவாயில்லை போலத் தோன்றுகிறது.
என்னது.. நாலாவது இடமா? :(
ReplyDeleteநான் நார்வேக்கு மூவ் பண்ணலாமான்னு யோசிக்கிறேன்!!
@ஷாஜஹான்
ReplyDeleteநன்றி நண்பரே...நிச்சயம் நம்புவோம்....ஒருநாள் நடக்காமலா போய்விடும்..
@டெனிம்
நன்றி..
@ஹாலிவுட்ரசிகன்
நிச்சயம் ஸ்ரீலங்கா பல விஷயங்களில் பரவாயில்ல தான். என்ன அங்க வெளிப்படைய மீறப்படும் மனித உரிமை இங்க சுத்தி வளச்சு வேற மாதிரி மீறப்படும்.
@பூபதி
ஊஎஸ் எல்லாம் மொக்க. யூரோப் நாடுகள் நல்ல சாய்ஸ். இல்ல, நியுசிலாந்து. சொர்க்கம் (எனகென்ன தெரியும். எல்லாம் கேள்வி ஞானம்). அமெரிக்காவுக்கு வரலாறே 400 வருஷம் தான். இதேது யூரோப் போனா.....எப்புடி இருக்கும்
சரியான பகிர்வு. மேற்கு நாடுகளிடம் இருக்கும் பல நல்ல விஷயங்களை விட்டுவிட்டு, தேவையற்றவற்றைத்தான் எடுத்துக் கொள்கிறோம். இது தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல,அரசிற்கும் பொருந்தும்.
ReplyDeleteஅரண்டே போய்விட்டேன். நெஜம்தான் மேற்கத்திய நாடுகளைப்பற்றி பேசும் நாம் இதற்கு பதில் என்ன என்றே சொல்லத்தெரியவில்லை. இது சவுக்கடி இல்ல எல்லோருக்குமான சாவு அடி.
ReplyDelete@ பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDeleteசரியா புடிச்சீங்க பாய்ன்ட்ட மைன்ட் செட்ல ஆரம்பிச்சு பல உருப்படியான விஷயங்கள பாத்து காப்பி அடிச்சா பரவாயில்ல. வெளங்காத விஷயமா தேடித் தேடி காப்பி அடிக்கிறோம்
@விச்சு
மேல ராமசாமி போட்டிருக்கும் கமென்ட் தான் இதற்கும் நண்பரே. தேவையில்லாத விஷயமா பாத்து தான் நா எப்பவும் காப்பி அடிக்கிறோம். என்னத்த செய்ய
I am collecting these details. You have done a fabulous job. Can we file a PIL?
ReplyDeleteKannan..
ReplyDeleteநன்றி நண்பா..Regarding PIL, மதுரைல எவிடன்ஸ் - கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நெனைக்கிறேன் - அமைப்பினர், கதிர் என்பவர்தான் அதன் முக்கிய பொறுப்பில் இருப்பவர். அவர்கள் ஏற்கனவே இதுகுறித்து பல்வேறு களப் பணிகள் செய்துள்ளனர். நானும் நேரில் ஒருநாள் அவர்களை சந்தித்து பேசனும்ன்னு நெனச்சிருகேன்..
அவர்களை தொடர்பு கொண்டால், நிறைய தகவல்கள் கிடைக்கும். அதிலிருந்து மேற்கொண்டு செல்ல உங்களுக்கு ஏதுவாக அது அமையலாம்.
நல்ல கட்டுரை. தொடர்ந்து நாம் அப்பப்ப சத்தம் போட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதுவும் மாறாது.
ReplyDelete@ gnani
ReplyDeleteநன்றி சார்....
http://www.youtube.com/watch?v=VVPqgeWPTww&feature=relmfu
ReplyDeleteஇன்றைய காலகட்டத்திற்கு தேவையான முக்கியமான பதிவு. முகநூலிலும் மின்னஞ்சலிலும் நன்றியுடன் பகிர்ந்து கொள்கிறேன்,
ReplyDeleteசீனி மோகன்
குழந்தே..
ReplyDeleteநீ தெய்வம் கண்ணு!
ப்ளாக் ஐ சரியான முறையில் பயன்படுத்தும் சிலரில் நீயும் ஒண்ணு கண்ணு.
வாழ்க,வளர்க.
இந்த பதிவு பற்றி..
என்ன சொல்வது.. :-(
25%..indifference plus
25%..irresponsibility plus
25%..idiocy plus
25%..inalterability
is equal to
AN I N D I A N
@ Balasingam
ReplyDeleteபதிவு எழுதுன நேரத்தில், விடியோ பத்தி யோசிக்கவே இல்ல..இப்ப இணைத்துவிடுகிறேன். நன்றி, பகிர்ந்தமைக்கு,
@சீனி மோகன்..
நன்றி சார்.
@கன்பத்...
தொடர்ந்து நல்ல கட்டுரைகள் எழுதணும்ன்னு ஆசை இருக்கு. பாப்போம்..
நன்றி சார்.
அந்த வேற்றுகிரகாத்துல இன்னுமா ஜாதி லாம் பாக்குறாங்க??? நல்லவேளை நம்ம நாட்டுல நாம ஜாதியை ஒழிச்சிட்டோம்.
ReplyDelete