The mind was dreaming. The world was its dream.
— Jorge Luis Borges
-------------------------------------------------------------------------
பெரியோர்களே, தாய்மார்களே ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.ஆயிரக்கணக்கான இசங்களில் எனக்கு தெரிஞ்ச ஒரே இசம், தமிழ் சினிமா பாத்து கத்துகிட்டதுதான் – communism. இப்ப இத எழுத காரணம் – பேநாமூடி@ஆனந்த்.சும்மா இருந்த ஆள சொறிஞ்சுவுட்டது அவர்தான். பதிவினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அவரே பொறுப்பு.
--------------------------------
கண்டபடி யாரோ – என்னமோ ஒண்ணு உங்கள தொரத்துது. தப்பிச்சு ஓடிக்கிட்டேயிருக்கீங்க. விலங்குகள் – வேற்றுகிரகவாசிகள் வேற வந்து தீடீர் தீடீர்னு பயமுறுத்துதுங்க.திடுதுப்புன்னு கீழ விழுக ஆரம்பிக்கிறீங்க........ விழுகுறீங்க...........விழுகு.............றீங்க............வி..............ழு..............
(கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........................................Snooze)
கனவுக்கு காரணம் யாரவது வாத்தியார் நேத்து உங்கள திட்டியிருக்கலாம். Cowboys & Aliens படத்த பாத்து பயந்திருக்கலாம்.உங்க ஆபிஸ்ல எதுனா பிரச்சனை இருக்கலாம்.சரி..............ஓகே.........இந்த கனவ பத்தி வாயால சொல்லிறலாம்.ஆனா அத பத்தி ஒரு கவிதையோ – கதையோ – ஓவியமோ உங்களால படைக்க முடியுமா ? முடிஞ்சா நீங்க ஒரு surrealist creator. உங்க படைப்புதான் சர்ரியலிசம்.
20ஆம் நுற்றாண்டின் ஆரம்பம். சிக்மண்ட் ஃப்ராய்டு மெல்ல மெல்ல ஐரோப்பாவில் புகழடஞ்சுகிட்டு வரார்.அதே சமயத்தில் தான் டாடாயிசம்(Dadaism) என்று சொல்லப்படுகிற ஒரு இசம் வளர்ந்துகிட்டிருந்துச்சு. டாடாயிஸ்டுகள் – ஒரு மார்க்கம் இல்ல.....பல மார்க்கமான ஆளுங்க. மனுஷங்களுக்கு கலை லொட்டு லொசுக்கு எல்லாம் எதுக்கு, தேவையேயில்லை.இதுபோன்ற சமாச்சாரங்கள் தான் போர் சண்டைகள் சச்சரவுகள் உருவாக காரணம்(அப்போது முதல் உலகப் போர் நடந்துக்கிட்டுயிருந்துச்சு). இதான் அவுங்க வாதம். Anti – art- political -science movement. சுருக்கமா Dada had only one rule: Never follow any known rules (இத்த clickகி படிக்கவும்).
அதுக்காக புகழ் பெற்ற ஓவியங்கள் மேல எதயாவது கிறுக்கி வைக்கிறது, வாஷ் பேசின்,கக்கூஸ் மாதிரி கண்டகழிய பொருட்களை வரைவது போட்டோ எடுத்து கண்காட்சி வைப்பதுன்னு அதகளம் தான் போங்க. Trash என்று அதுவரை நெனச்சிருந்த பொருட்களில் இருந்து கலையை உருவாக்குவது. இந்த இசம் ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா இதுதான் பின்னாளில் பல இசங்கள் குறிப்பா போஸ்ட்மாடனிசம் உருவாகக் காரணம். போஸ்ட்மாடனிசத்தின் முக்கிய அம்சமே கலை – கோட்பாடு – பண்பாடு என்று நாம் இதுகாறும் நம்பும் system- கட்டமைப்பை உடைப்பதுதான. அதுனால இதுகுறித்து தெரிந்து கொள்ள விரும்புவர்கள்
இதுல இருக்குற மூணு பார்ட்டையும் தயவுசெஞ்சு அனைவரும் பாத்திருங்க.ஏன்னா,பின்னாளில் பல இசங்களுக்கு அதிமுக்கியமா போஸ்ட்மாடனிசத்துக்கு இதான் காரணம்.இப்ப வரை பல்வேறு வடிவங்களில் இது இசை–சினிமான்னு இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கு.
டாடாயிச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆளு தான் ஆந்த்ரே பிரேதன்.பிரஞ்சு நாட்டு எழுத்தாளர் – கவி – குட்டி மனோதத்துவவாதி - இன்ன பிற. இவரைப் போன்ற பயபுள்ளைங்க எல்லாம் சேர்ந்து 1920ஆம் ஆண்டு வெளியிட்டதுதான் Les Chants Magnétiques (The Magnetic Fields). இதுலதான் Automatic writing என்ற கோட்பாடு வந்ததே. அது என்ன Automatic writingன்னு தெரிஞ்சுக்க நெனைப்பவங்க, கோணங்கியின் – பாழி படிக்கவும் (இந்த பதிவ படிச்சிட்டு அப்பறம் போய் அத படிங்க,அத படிக்க ஆரம்பிச்சா இத நீங்க மறுபடியும் படிக்க வாய்ப்பேயில்லை.).
இதே ஆந்த்ரே பிரேதன் தான் 1924ஆம் ஆண்டு La Révolution surréaliste (Surrealist Manifesto) என்ற அறிக்கையை வெளியிடுகிறார் அப்பயிருந்துதான் சர்ரியலிசம் வீறு கொண்டு கிளம்ப ஆரம்பிச்சது.
சர்ரியலிசம்:
நம்ம எல்லாருக்கும் ஆழ்மனம் என்று ஒண்ணு இருக்கு (அதுவும் மனசாட்சியும் ஒண்ணா...தெரியல).அதில கிளம்புற எண்ணங்களை வெளிப்படுத்துற விஷயங்கள் அனைத்துமே சர்ரியலிசம் தான்.
சிலந்தி வலை பின்னுற மாதிரி Fanatasyல இருந்து ஒரு இழை – கனவிலிருந்து ஒரு இழை – தத்துவத்திலிருந்து ஒரு இழை – புதிர்த்தன்மையிலிருந்து ஒரு இழை – எல்லாத்தையும் சேர்த்து ஒரு வலை. ஆனா அந்த வலை நிகழ்காலம் (Reality) மீது அமைந்திருக்கும். கனவும் + புதிர்த்தன்மையும் + நிகழ்காலம். இதிலிருக்கும் + தான் சர்ரியலிசம்.
ஃப்ராய்டின் தாக்கம் பெருமளவில் இந்த விஷயங்களில் இருக்கும் (என்ன பெரிய ஃப்ராய்டு அவருக்கு முன்னமே பல விஷயங்கள நம்ப ஆளுங்க சொல்லிட்டாங்க).நம்ம subconsious mindல தோணுகிற விஷயங்கள வெளிப்படுத்தும் ஊடகம் தான் சர்ரியலிசம்.இதுல ரொம்ப முக்கியமா ஆளுங்க – டாலி, மேக்ஸ் எர்னஸ்ட், ரெனே மக்ரிதே போன்ற ஓவியர்கள். இதுக்கு மேல நா பேசி போரடிக்க விரும்பவில்லை.முடிஞ்சா டாலியும் – லூயி புனுவேலும் சேர்ந்து உருவாக்கிய இந்த படத்த பாருங்க. 1920லேயே பின்னி பெடலேடுத்துருக்காங்க.யாரும் தவறவிட வேண்டாம். மற்றவர்களை விட டாலியிடம் உள்ள சிறப்பு ரெண்டிலும் தேர்ந்து விளங்கியவர்.மேலும் ஓவியங்களில் optical illusion எல்லாம் கொண்டு வந்தவர். முடிஞ்சா "டாலியின் டைரிக் குறிப்புகள்" படிச்சுப் பாருங்க.ரகள.
இதுபோக பல சர்ரியலிஸ படங்கள் குறித்த நல்ல தொகுப்பு இங்க இருக்கு Louis Bunuel – Alexandro Jodorowsky – David Lynch போன்றவர்கள் எல்லாம் இதில் மாஸ்டர்கள்.மேற்கொண்டு ஓவியங்களை ரசிக்க.....இங்கே...
மாஜிகல் ரியலிசம்:
பேர பாத்த உடனே சொல்லிரலாம். அதே சிலந்தி வலை – அதே Fanatasy – அதே கனவு – அதே தத்துவம் – அதே புதிர்த்தன்மை – எல்லாத்தையும் சேர்த்து ஒரு வலை. ஆனால் படைப்பு நிகழும் உலகில் அனைத்தும் நிஜம். இதுவே சர்ரியலிசத்துக்கும் இதுக்கும் உள்ள வேறுபாடு.
சர்ரியலிசம் – ஒரு உலகத்தை விஷயத்தை தனது ஆழ்மனம் – எண்ணங்கள் எப்புடி intrepret பண்ணுதோ அதை ஒரு படைப்பா வெளியிடுறது. மாஜிகல் ரியலிசம் – எதையும் interpret பண்ண தேவையில்லை.ஏன்னா..... அதுல “reality” என்று சொல்லப்படுகிற “எதார்த்தம்”இந்த மாஜிகல் விஷயங்கள் அடங்கியதுதான். அந்த உலகத்தில் மாஜிகல் விஷயங்கள் அனைத்தும் எதார்த்தும். சுளுவா உங்களுக்கே புரியும். நா மேற்கொண்டு விளக்கம் என்ற பேருல எதுனா உளறி கெடுக்காம இருக்க நெனைக்கிறேன்.
இந்த வகை இலக்கியத்துல முக்கிய ஆசாமிகள் லத்தின் – அமெரிக்கர்கள், போர்ஹே – மார்க்வெஸ். இவர்களை தவிர கார்பெந்தியர் - மிலன் குந்த்ரா – கோய்லோ – ஜப்பானிய எழுத்தாளர்கள் – ஏன் காப்கா கூட, இவர்களையும் சொல்கிறார்கள். ஆலிஸ் இன் வோண்டர்லான்ட் கூட மாஜிகல் ரியலிசம் தான். ஆனா, இதை விட அனைத்து அற்புத அம்சங்களும் பெரும்பாலனா நமது கதைகளிலேயே இருப்பதுதான.இந்த லிஸ்ட் உபயோகமா இருக்கும் என்று நெனைக்கிறேன்.
மேல பொட்டிகுள்ள Inception படம் பத்தி சொல்லியிருக்குறத பத்தி இங்க படிக்கலாம். நா ரொம்ப ரசிச்சு எழுதுன பதிவு.
Existentialism: இருத்தலியல்
இதுகுறித்து FBல நா ஒண்ணு கேட்டிருந்தேன்.அதுக்கு ராஜேஷ் சொல்லியிருந்தது – செம.... போங்க. வாய்ப்பேயில்லை. சுலபமா புரியுற விஷயத்த நீட்டி முழக்கி குழப்பி அடிக்கிறது ஒருவகை(உ.த.எ ஞாபகம் வந்தா அது தற்செயலானதே).கஷ்டமான விஷயத்த சுளுவா சொல்றது மற்றொரு வகை. சுஜாதாவிடம் எனக்கு பிடிச்ச (ஒரே)விஷயம் அதான். அதுபோல ராஜேஷ் ரொம்ப சிம்பிளா சொல்லியிருந்தார்.எனக்கு ஏற்கனவே existentialism குறித்து கொஞ்சம் தெரிந்திருந்தாலும் என்னமோ ஒரு குழப்பம் இருந்திச்சு.அதை டக்குனு அவுரு போக்கிட்டாரு.அதையும் இங்க பகிர்ந்தா எல்லாருக்கும் உபயோகப்படும் என்பதால்....
1) Existentialism என்றால் என்ன ?
2) ஏன் அது பெரும்பாலும் சோகமயமாகவே இருக்கு ?
3) வெறும் சோகம் மட்டுமே வாழ்க்கை ஆயிறாது. அதுனால அதன் அடிப்படையில் இதை பார்ப்பதே தவறு என்று ஒரு கருத்து இருக்கே.
இந்த இசங்கள் பத்தி பதிவு எழுதக் காரணம், சரியோ தவறோ உக்காந்து பேசுனாதான தெரிஞ்சுக்க முடியும்.நானும் நெறய தெரிஞ்சுக்கலம்,அந்த சுயநலம்தான்.சினிமா குறித்து எப்புடி நம்ம இணையதளங்களில் இயங்குபவர்கள்,மற்றவர்களை காட்டிலும் சற்று விழிப்புடன் நெறைய உலக சினிமா குறித்து தெரிஞ்சு இருக்காங்களோ (???), அதுமாதிரி எல்லாருமே சேர்ந்து இதுபோன்ற விஷயங்களையும் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டா நல்லாதான இருக்கும். அப்பறம் நாங்கலாம் தனிப்பிறவிகள் – விதிசமைப்பவர்கள்னு நாமளும் பீட்டர் வுடலாம் (Intellectual arrogance....ஹி....ஹி...). உலகத்தில ரெண்டே ரெண்டு வகையான ஆட்கள்தான் – வாய்ப்பு கெடைச்சவங்க, கெடைக்காதவங்க. அதுனால இதுபற்றி தெரிஞ்ச நண்பர்கள் இதுகுறித்து மேற்கொண்டு கருத்துக்கள சொன்னா எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும்.
4) ஒவ்வொருத்தர் வாழ்வு சார்ந்த வெளிப்பாடு தான இலக்கியம்.அதுனால கஷ்டப்பட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கை (how the are existing or how they were existed) சோகமயமாதான இருக்கும் ?
1 . எக்சிஸ்டென்ஷியலிஸம் என்பதன் அடிப்படையே, மனித வாழ்வின் அர்த்தமற்ற தன்மையைப் பற்றிய ஒரு பார்வை தான் என்பது என் கருத்து. நாம செய்யுற செயல்கள், செலக்ட் பண்ணுற வழிகள், அதுனால ஏற்படும் விளைவுகள் ஆகிய விஷயங்கள் பற்றிய ஒரு டீப் ஸ்டடி. ஆனா, இதுதான் எக்சிஸ்டென்ஷியலிஸம் அப்படீன்னு டிஃபைன் பண்ணுற விதிகள் எதுவும் இல்லை. பொதுவா மனித வாழ்வு, துயரமாத்தானே இருக்கு? இதுக்கு சாரு ஒரு உதாரணம் கொடுத்துருக்காரு. ஒரு ராணுவ வீரன். அவனோட அம்மாவைப் பார்க்கப் பிரியப்படுறான். அப்ப, அவன் முன்னாடி ரெண்டு சாய்ஸ் இருக்கு. ஒண்ணு- நாட்டுக்காகப் போரிடுவது. இன்னொன்னு, போரை விட்டுட்டு, அம்மாவைப் போய் பார்ப்பது. ரெண்டும் சரிதான். ஆக, அவனோட முடிவு எதுவா இருக்கும்?இந்த ரீதில வாழ்வின் சாய்ஸ்கள் ,அதில் நாம் தேர்ந்தெடுக்கும் வழிகள், அதைப் பொறுத்து அமையும் விளைவுகள் ஆகியன பற்றிய ஒரு ஸ்டடி,எக்சிஸ்டென்ஷியலிஸம் எனப்படுகிறதுன்னு நினைக்கிறேன்.
2 . அது, பல சமயங்களில் சோகமயமா இருக்கு என்பது உண்மைதான். ஏன்? மனித வாழ்வு, அத்தனை பேருக்குமே சோகமயமாகத்தானே உள்ளது? ஒன்னை செய்யப் பிரியப்படுறோம். ஆனா அது நமக்கு அமையாம, வேற ஒண்ணுதான் கெடைக்குது. அப்ப, இந்தப் புது விஷயத்தை நாம சோகமாத்தான் எடுத்துக்குறோம். சிறுபத்திரிக்கை நடத்த ஆசைப்பட்டு, ஆனா அன்றாட வாழ்வில் அது முடியாம, வேற எதுலயும் இன்ட்ரஸ்ட் இல்லாம, கடைசில ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சி, பின் தற்கொலை செய்துகொண்ட மணிகண்ணன் (என்று நினைக்கிறேன்) பத்தி சாரு எழுதிருக்காரு. அதுதான் எக்சிஸ்டென்ஷியலிஸம்.
3 . கஷ்டப்பட்ட எழுத்தாளர்களின் வாழ்வு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, அந்தக் கஷ்டத்தை அவங்க எப்படி எதிர்கொண்டாங்க?காஃப்கா, தாஸ்தாயேவ்ஸ்கி ஆகியவர்களின் வாழ்க்கையைக் கவனிச்சா, அதுல ஒரு டக்கரான அங்கதம் இருக்கும். அது, அவங்க, தங்களைக் கஷ்டப்படுத்துகிற வாழ்க்கையை எள்ளி நகையாடுன வெளிப்பாடு.
ஆக, எக்சிஸ்டென்ஷியலிஸம் என்பது, எப்பவும் அழுவாச்சியாத்தான் இருக்கணும்னு அவசியமில்லை.அது,அவங்கவங்க அந்த உணர்வை வெளிப்படுத்துவதைப் பொறுத்தது.சார்லஸ் ப்யூகோவ்ஸ்கின்னு ஒரு இலக்கியவாதி இருந்தார்.அவரோட புத்தகங்களைப் படிச்சா,அவர் வாழ்க்கையை என்னமா என்ஜாய் பண்ணிருக்காருன்னு தெரியும்.ஆனா , மனிதர் சல்லிக்காசு கூட இல்லாம வாழ்ந்து செத்தவர்தான்.அவரோட நாவலான "Notes of a Dirty oldman" தான் இப்ப படிச்சிக்கிட்டிருக்கேன்.பல இடங்களில்,அது அவரா இல்லை சாருவான்னு டவுட்டு வருது.இதுவும் எக்சிஸ்டென்ஷியலிஸம்தான். சார்த்தர் தன்னோட எக்சிஸ்டென்ஷியலிஸம் பற்றிய வியூவை,பின்னாட்களில் மாற்றிக்கொண்டுவிட்டார். ஆனா அதையும் வெளிப்படையா ஒத்துக்கொண்ட நேர்மையும் அவரிடம் இருந்தது.
இந்த இசங்கள் பத்தி பதிவு எழுதக் காரணம், சரியோ தவறோ உக்காந்து பேசுனாதான தெரிஞ்சுக்க முடியும்.நானும் நெறய தெரிஞ்சுக்கலம்,அந்த சுயநலம்தான்.சினிமா குறித்து எப்புடி நம்ம இணையதளங்களில் இயங்குபவர்கள்,மற்றவர்களை காட்டிலும் சற்று விழிப்புடன் நெறைய உலக சினிமா குறித்து தெரிஞ்சு இருக்காங்களோ (???), அதுமாதிரி எல்லாருமே சேர்ந்து இதுபோன்ற விஷயங்களையும் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டா நல்லாதான இருக்கும். அப்பறம் நாங்கலாம் தனிப்பிறவிகள் – விதிசமைப்பவர்கள்னு நாமளும் பீட்டர் வுடலாம் (Intellectual arrogance....ஹி....ஹி...). உலகத்தில ரெண்டே ரெண்டு வகையான ஆட்கள்தான் – வாய்ப்பு கெடைச்சவங்க, கெடைக்காதவங்க. அதுனால இதுபற்றி தெரிஞ்ச நண்பர்கள் இதுகுறித்து மேற்கொண்டு கருத்துக்கள சொன்னா எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும்.