I was born a suspect. Came out my mother’s stomach; anything that happened in a three-block radius, I was a suspect! White America is so scared of black teenagers. I walk down the streets, women are grabbing hold of their Mace, everybody’s tucking in their chains, people are hitting their car doors, people get into karate stances. I look up in the air, there’s a bunch of old white ladies on the phone - they’ll dial nine-one and just wait for me to do something

- Chris Rock


Stage 1:

1) Bruce Lee பிடிக்குமா: செக்

2) Rap பிடிக்குமா. குறைந்தபட்சம் குழந்தைகளுக்குப் பரிச்சயமான Eminemனாவது கேட்கும் பழக்கம் உண்டா: செக்

3) தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறீர்களா, தமிழ் சிற்றிதழ்களில் வரும் சினிமா தொடர்பான விமர்சனம்....whatever....படித்த பிறகு: செக்

4) Friends (அ) மெட்டி ஒலி நாடகம் பிடிக்குமா : செக்

5) டிவியில் சிவாஜி படம் ஓடும்பொழுதோ/சட்டசபையில் ஜெயலலிதா பேசும்பொழுதோ...தன்னையறியாமல் அடக்கமாட்டாமல் சிரிப்பு வருமா: செக்

6) "ழ"வை சரியாக உச்சரிக்க வருமா: செக்

7) தாகமெடுத்து "இலக்கிய" கூட்டங்களுக்குப் போனதுண்டா: செக் 

8) அட்வைஸ் கேட்பதும்/சொல்வதும் மிகப்பெரிய கடுங்கொடுமை என்பவரா: செக்

Stage 2:

9) தன்னைத்தானே எவ்வளவு மோசமாக சுயபகடி செய்ய முடியுமா அத்தனை மோசமாக சுயபகடி செய்துகொள்பவரா: செக்

10) Misanthropic symptoms உள்ளவரா: செக்

11) Reputation ஒரு ஆபத்தான மிருகம் என்ற நினைப்பில் உள்ளவரா: செக்

12) எதையாவது சதா நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளவரா: செக்

Stage 3:

13)  தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை எப்பொழுதும் ஆர்வமாக கவனிக்க முற்படுபவரா: செக்

12) எல்லா மாற்றங்களும் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்தவரா: செக்

13) Principle of Causation பற்றி புரிந்து வைத்துள்ளவரா: செக்

இந்த 13 பாய்ன்ட்ல்  8 - 10 points பொருந்தினால், இந்த Stand-up comedyகளும்/கார்ட்டூன்களும் உங்களுக்கு மிகமிகப் பிடிக்கும். 10 - 12 points பொருந்தினால், இந்த பதிவு உங்களுக்கானது கிடையாது. ஏற்கனவே இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே. 12 pointsக்கு மேல் பொருந்தினால், நிச்சயம் ஒரு செமையான satiristடாக வர எல்லா தகுதியும் உங்களுக்கு உண்டு. அந்த ஜாதிக்கு அப்பிடியொரு பஞ்சம் இங்கு நிலவுகிறது. Political Satirist, Social Satirist எல்லாம் இங்கு வெகுவெகு அபூர்வம். 

-----------------------------------------------------


Every sixth person in the world is an Indian. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதுபோலவே, உலகளவில் திறந்தவெளியையே கக்கூஸாக பயன்படுத்தும் 110கோடி பேரில்....63.8கோடி ஆட்கள் இந்தியர்கள். இதுவெறும் தகவல் கிடையாது. பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு போகாமல் இருப்பதில் தொடங்கி ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயம் இது.  Now, இந்த சீனை பார்ப்போம்.



ஐயோ..ஐயோ..ஐயோ..ஐயோ..ஐயோ..ஐயோ..ஐயோ...ஐயோ..ஐயோ..ஐயோ..இந்தியாவை கேவலப்படுத்திவிட்டார்களே (Slumdog Millionaire படத்திற்கு அப்படித்தான் குரல் கொடுத்தார்கள்) என்று சிலருக்குத் தோன்றலாம். சிலர் காமடியாக எடுத்துக்கொள்ளலாம். அது இரண்டாம்பட்சம். மிகமுக்கியமானது, மேலே பார்த்த புள்ளிவிவரம். அது facts. நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்ற கவனம் இல்லாவிடில், இதுவெறும் offensive காமெடியாக/அல்லது ஜாலியாக கடந்து போய்விடும். ஆனால் சிலபல விஷயங்கள் பற்றிய பின்புலம்/இல்லை, அதைத்தேடிப் போகும் ஆர்வம் இருந்தாலொழிய இதுபோன்ற காமெடிகளை எரிச்சலாகவே பார்க்க வேண்டியிருக்கும். இதை க்ரியேட் செய்தவர்களுக்கு, இத்தனை தகவல்கள் தெரிந்திருக்கலாம்/தெரிந்திருக்காமல் போகலாம். ஆனால், நம்மை கொஞ்சமேனும் அசைத்துப்பார்த்தால் போதும். இது ஒன்றும் பிரமாதமான காமெடி இல்லைதான். ஆனால், அதற்கே அந்த லின்க்கில் இருக்கும் காமென்ட்களைப் பாருங்கள். ட்ராக்மாறி எங்கு போகின்றதென்று.

இதுபோன்ற பல காமெடிகளின் crux இதுதான். ஒரு படு offensive விஷயத்தை அதேயளவிற்கு/அதைவிட தூக்கலாக offensiveவாக சொல்வது. உதாரணமாக, உலகம் தோன்றிய வரலாறு/மனிதர்கள் தோன்றிய வரலாறு என்று நமது பண்டிதமணிகள் அடித்துவிடும் சரடுகள் ஒரு லாஜிகல் மைன்ட்க்கு insultingகாவும்/offensiveவாகவும் தெரியத்தானே செய்யும். அதை சகித்துக்கொள்வதுபோல இதையும் சகித்துக்கொள்ள வேண்டியதுதான். நம்மை pampering செய்வது இதன் நோக்கமல்ல; உலுக்குவது. நல்ல art form அதைதான் செய்ய வேண்டும். அதையே சீரியஸாக சொல்லாமல், இப்படி காமெடியாக சொல்வதன் மூலம், எளிதில் மக்களை யோசிக்க வைக்க முடியும்; "ஆமால...இதையா நம்பிகிட்டு/செஞ்சுகிட்டு இருக்கோம்" என்று நமது ஈகோவை சற்று அடக்கி, வேறு கோணத்தை முன்வைக்கும். Of course, இதுபோன்ற எல்லா காமெடி ஷோ/டாக் க்ஷோக்களின் நோக்கமும் இதுதான் என்று சொல்லவே முடியாது.



எனது கணிப்பின்படி இதுபோன்ற சூழல் இந்தியாவில் (குறிப்பாக தமிழ்நாட்டில்) நடக்க வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது. Yes...அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முயற்சிகள் நடந்தாலும் அடுத்த கட்டத்திற்கு எதுவும் போகவில்லை/போகவும் முடியாது. ஆர்வமுள்ள ஆட்கள் இருந்தாலும், சிஸ்டம் விடாது. அடி வெளுத்துவிடுவார்கள்; சாவு நிச்சயம். ஆனால் இலைமறைகாயாக செய்ய முடியும். 60களின் தென்னமெரிக்க சினிமாவில் இதுபோன்ற பகடிகள் அதிகம். ஏன் சிஸ்டம் வரைக்கும் போவானேன். ஜாலியாக Fbயிலோ, twitterயில் கூட கலாய்க்க முடிவதில்லை.

ரோமன்ஸ் பொலன்ஸ்கிக்கும் - Spotlight படத்திற்கும் என்ன சம்பந்தம் ?

அதையும் மீறி ஏதாவது முயற்சி நடந்தாலும், அடுத்தவருக்கு என்றால் பிரச்சனையில்லை. ஆனால் என்னை/என் ரசனையை/என் நம்பிக்கைககளை கலாய்த்தால் அதை வெகு சீரியஸ் முகத்துடன் அணுகுவது நமது ஆட்களின் பிரச்சனை. சுயபகடி என்பது நம்மாட்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அப்படியான சுயபகடியின் மூலம் Black peopleன் வலிகளை/குசும்புகளை/கைவிட வேண்டிய விஷயங்களை சொல்வதில் கைதேர்ந்தவர்கள் Chris Rock, Dave Chappelle. பழைய ஆட்களில் Richard Pryor, Bill Cosby, Dick Gregory (இந்தாளை மிகப்பிடிக்கும். இதைப் பார்த்தால் ஏனென்று புரியும்). இதில் Bill Cosby, போன வருடம் sexual assault கேஸில் மாட்டிக்கொண்டார். விடுவார்களா...வறுத்தெடுத்துவிட்டார்கள். Chirs Rockன் இந்த show, one of my all time favorites.



அதுபோலவே Dave Chappelleயின் இந்த முழு ஷோவும்.



நம்மாட்களுக்கு Memeகளினால் மட்டுமே பரிட்ச்யமான George Carlinனில் ஆரம்பித்து Louis C K வரை இன்னொரு பக்கம். இதில் Carlin - அமெரிக்க வாழ்வின் அபத்தங்களை போட்டுத்தாளிப்பதில் வல்லவர். கூடவே, கடவுள் மறுப்பும்/அரசுகளின் மீதான விமர்சனமும்.



Lewis Black. இவரது ஸ்டைல் எனக்கு மிகப்பிடிக்கும். கொஞ்சகொஞ்சமாக rantடை ஆரம்பிப்பார்.



Bill Maher. அலட்டிக்கொள்ளாத ஸ்டைல்



Stephen Colbert. Deadpanனிற்கு சிறந்த உதாரணம். இவரும் Eminemம் அடித்த கூத்தை நீங்களே பாருங்கள். இவர் அவ்வளவாக stand-up நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை

Louis CK. Freestyle comedian என்று சொல்லலாம். சமீபத்தில் கூட Child abuseசைப்பற்றி பேசுகிறேன் பேர்வழி என்று வாங்கிக்கட்டிக்கொண்டார்.



மேலிருப்பவர்கள் போலல்லாமல், சிரித்தால் போதும்/நோக்கமெல்லாம் ஒன்றுமில்லை என்று வகையில் Kevin Hart, Aziz Ansari, Russell Peters போன்ற ஆட்கள் உண்டு. என்னதான் சொன்னாலும், Russell Petersன் இந்த ஷோ (முழு ஷோவும்) எப்பொழுது வேண்டுமென்றாலும் திரும்பத்திரும்ப பார்க்கலாம்.



பெண்களில் (தனியாக இப்படி சொல்வதில் உடன்பாடில்லை என்றாலும், அவர்களது ஷோக்களின் தீம்கள் அப்பிடி இருப்பதால்) Whoopi Goldberg (மொக்கை) காலம் தொடங்கி இன்றிருக்கும் Sarah Silverman, Amy Schumer பலர் இருந்தாலும் எனக்குப் பிடித்தது Janeane Garofalo தான்.

இதுவொரு பக்கம் என்றால், அடல்ட் கார்ட்டூன்கள் இன்னொரு பக்கம். இதில் Family Guy, South Park (எல்லா சீசனும் பார்த்தால் நிச்சயம் போர் அடிக்கும். Repetitiveவாகவே இருக்கும். டைம் வேஸ்ட் செய்ய வேண்டாம்) பிடித்தமானது. Boondocks டவுன்லோட் செய்ததோடு சரி. இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லை. அதனால், இந்த கார்ட்டூன்களை வெறித்தனமாக பார்த்த Hari Krishஸிடம் சிலபல வரிகள் எழுதித்தருமாறு கேட்டேன். அவரும் ஆஃபிஸ் நேரத்தில் கர்மசிரத்தையாக உட்கார்ந்து எழுதிக்கொடுத்துள்ளார். Over to Hari Krish

--------------------------------------

The theme of the following Adult cartoons might be off putting for you, if you are easily offended. So, please feel free to steer clear. And for the some of us who enjoy racial, dark, gruesome, offensive humor, we are going to have a very good time. 

Some of the contents in the adult cartoons discussed here could not be reproduced in the live action format because … you will know .. if you watch them. 

One thing that we can agree that the Americans are good at is taking a good look at themselves and laugh. We are nowhere near their sense of humor. It is evident when we watch their movies, series , video games, stand-up comedy and celebrity roasts. 

These are the 3 adult cartoons i liked the most. The reason being obviously, the offensive humor. I am sucker for that. 

South park: started airing in the year 1997 with the following disclaimer


Well, now you know what you expect. And what you get is the 22 minutes of unruly, offensive, gruesome toilet humor you can ever imagine. This is the show that took insult comic to the whole new level. You cannot watch one of the episodes without thinking, ”they made fun of that” or “How can you make fun of that?” and thats where they win. 

The main characters are 9 year old 4th grade children of southpark elementary. After watching a couple of seasons you will not help but becoming a fan of one of the main character “Eric Cartman” who is america’s darling. The irony here is Cartman is everything that is wrong with America and they are 100% aware of that. South park has a huge cast which includes Stan the voice of reason, Kyle the Jew, Kenny the dirty one, Randy the America’s dad, Mr Hanke the chirstmas Poo (It is exactly what you think it is), Mr.Garrison the sexually confused elementary school teacher who had two sex change operations in the course of the series, Terrance and Philip the Canadian comedy duo, Cartman the jew hating, fat, ignorant racist kid and Jesus christ and satan as reoccurring character. 

There is a huge, in your face parody of celebrities that include Tom Cruise, Kanye West, Mel Gibson, Oprah, and Muhammed (which explains the threats ). So, if you are a celebrity and if you mess up, you end up in a episode of south park. by the way, most of the characters are voiced by Matt and Trey the creators. This is the show that put “Comedy central” on map which has become famous for introducing some of the best stand up comedians in the history of the US and there are always “the Roasts”. 

Cartman best scene:



When you're born into this world, you're given a ticket to the freak show. If you're born in America you get a front row seat” – George Carlin 

And south park is america’s conscious with sick sense of humor. South park has been threatened, criticized and sued for its political and religious satire over the years and but the makers Trey Parker and Matt Stone would not stop. South park is by far the Maxx usage of Freedom to express. If Eminem were a Cartoon, it would be south park. Over the years, south park has gone through many changes but the best one is adapting to the serial elements and reoccurring story lines. Watch the seasons 18 and 19 (By far the best season in recent years)

And finally, it is free. You can watch the full episodes at southpark.cc.com. because, as the creators say “Fuck Piratebay”. 

P.S: There is a hilarious documentary about the making of South park which is available in their site. South park also released a kick ass video game and a full, length movie which was nominated for academy awards for best original song in a feature film and this is how the creators walked the red carpet. 



Family Guy: 



If you are one of those guys who do not like the yellow people of the Simpsons and looking for a better and adult version, look no further and watch “family guy”. TThe creator Seth Macfarlane has a impressive resume with the movie Ted, the other TV shows “Cosmos:: The space time odyssey”, The Cleveland show , the spin -off of family guy (Don’t watch it, it is not worth it) and the American dad. When he is not repeating the living shit out whatever he is good at , he voice acts, directs and writes for family guy. This is one of those shows that audience love so much they have made FOX revive it not one but twice after being cancelled. 

The infamous offensive bits:



Family guy is grown man’s Simpsons that revolve around the Griffins, a dysfunctional family that is led by ignorant, douchy and absolutely stupid Peter griffin. The satire on America here is done mostly by flashbacks and cutaways which became overwhelming at some point, it led to south park make a couple of special episodes about how corny and predictable the show is. (The Simpsons team sent them flowers as a token of appreciation ). Despite getting cancelled twice and being accused of being a Simpson rip off, fans still tune into family guy because of the shows hilarity and self awareness. The shows sometimes makes fun of itself when it doesn’t call bullshit on other shows and celebrities (Check out the news sequence of family guy. Its hilarious). 



The first thing that attracts you in my opinion is the cast, just like south park , family guy’s huge cast is its main asset. Especially, Stewie Griffin – the an old year old toddler (one of the best things with cartoons/animes , the cast doesn’t have to age) with Posh British accent and undying rage to kill his mother Lois. Macfarlene said he influence for Stewie’s character is “Rex Harrison” , the guy who played “Henry Higgins fin My fair lady” . The exploits of Brian Griffin (The families pet dog ) and stewie duo has become a huge hit among the fans. Apart from being a social satire , FG stands out for his dry wit and sarcastic humor mostly pointed straight at religion and taboo subjects. It is not as brutal as south park but FG has its way of giving it to the intended. 

The Situation of FG being funny or unfunny solely depends on the certificate the episodes get mainly during the later years. I think it tries too hard to be funny these days. But hey, it might just be me and the show has its moments. Macfarlene’s singing abilities is well known from his Oscar hosting and Graham Norton show appearances and he goes full on Bruce Springsteen on the show which led to some of the best original songs that TV can offer. Unlike, south park FG has its array of celebrity cameos who “willingly” take jabs at themselves. 

Don’t miss this song about FCC, the censor equivalent. Jesus and death appear as reoccurring characters in family guy as well (These guys would not leave them alone) with Adam west (Batman 1960) paying himself as himself as Mayor.West (one of the most bizarre characters in T history). FG has many straight to DVD movies released during its successful run which includes 3 star wars parodies (Macfarlene is a huge ass nerd) if you‘d like to check ‘em out. Finally , if you like to watch a borderline alcoholic mom throw up on her baby, a liberal douche, atheist , drug addict, smug dog be the voice of reason of the family, A toddler build a time machine to stop his birth or Peter Griffin fight a giant chicken , you will not be disappointed. 

The Boondocks: 

You might have noticed that I have compared Family guy with south park all, over the review of the same. Because of south park’s reach and being a phenomenon. You can't help but compare a newly airing series to south park as the latter laid the foundation deep and strong for a newbie to follow. Here is where The boondocks stands out. 

Have you wondered why non-black people are so much obsessed with the African American / Hip hop culture ?. I believe because its is FRESH. So, just like its background and settings which is predominantly black The boondocks came out of nowhere to become one of the influential anime/adult cartoon of last decade. Running for only short lived 4 seasons , this is one of the freshest anime you will come across. 

The opening sequence starts with a Afro Samurai influenced visuals with Asheru’s “Judo flips” as theme song (My ring tone for last 4 years). The 60s and 70s blaxplotation/ black power influenced lyrics what got me into this in the first place. 

Two little brothers with polar opposite personalities, one being a thinking black man and the other one being a wanna be thug and her token dirty old black grandpa move to a sub urban white neighborhood. What would you do with the above plot? Well , the creators said one of the influential, thought provoking, social satire in anime format. 



This puts the racial events, black on black crimes and reverse racism is perspective while telling a funny story each episode. The animation format is heavily influenced by the Japanese Anime art. This has stirred a lot of controversy for the extended usage of the word “Nigger”( but still has nothing on Quentin tarantino’s usage on the same). Especially when Martin Luther king Jr (Cameo :P ) says it. 

This has also added a new phrase in the urban dictionary called “The Nigga moment” - which is the creators witty take on black on black crime. The boondocks doesn’t shy away from parodying and making fun of the contemporary black/ hiphop culture while discussing LGBT and police and government brutality against the minorities. 

The first nigga moment: 




I don’t have much to say about The boondocks as it has been a very long time and I will leave you to it. One thing I can assure is, if you like Hip hop culture, movies like “Friday”, straight outta Compton, boys in the hood, menace to society and video games like “GTA san andreas” , you will love it. 

Dragob Ball Z Abridged " by teamfoustar channel youtube : 

I just have to mention it because even if you haven’t watched a single episode of Dragon ball Z or its sequels , you will love it. Have you wondered DBZ is bit draggy and the humor is too PG13 for you (atleast the American version )?

If so, please do not miss this . This is parody at its best. This adult episode by episode version of DBZ is so funny , even the show creator Akira Toriyama praised it. If you are a Fan and if you want to re watch DBZ with adult rated humor and pop culture references, please do not miss it. 


ஒரு processன் மீது மட்டும் என்றுமே தீராக்காதல் உண்டு. Observation. அவதானிப்பு. குழந்தைகளிடம் இருக்கும்பொழுது எதுவும் பேசப்பிடிக்காது. மாறாக, குழந்தைகள் இயல்பிலேயே எல்லாவற்றையும் அவதானித்தே வளர வேண்டுமென்பதால்....அவர்களை அப்செர்வ் செய்வது பல விஷயங்களை எனக்குப்புரிய வைத்திருக்கிறது. Sociologyயில் இருந்து Linguistics வரை. எந்தவித கற்பிதங்களோ முன்முடிவுகளோ அவர்களுக்கு கிடையாது. சூழ்நிலை தான் எல்லாவற்றையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். புதிதாக ஒன்றுமில்லை. எந்த விஷயத்தையும் அணுகும்முன் psychologicalலாக அந்த மேற்சொன்ன ஸ்டேட்க்கு போக முடிகிறதா என்று முயற்சிப்பேன். க்ளீன் ஸ்லேட் மனநிலை. காசா பணமா. முயற்சிப்பதில் ஒன்றும் தவறில்லையே. பெரும்பாலும் தோல்விதான் என்றாலும், சிலசமயம் முடிந்திருக்கிறது. இது என்ன மாதிரியான “தெளிவை (வேறு வார்த்தை கிடைக்கவில்லை)” வழங்குமென்றால், ஒரு விஷயம் – இப்பிடி நடக்குது – இது சரியில்ல – இதனால் இந்தமாதிரி பாதிப்பு வரும் – இவர்களை இது பாதிக்கும் – இதுல நான் தனிமனிதனாக என்ன செய்ய முடியும் – இப்படி நான் செய்வதால் என்ன நடக்கும் - என்று எந்தவித தலையீடும் இல்லாமல் நம்மால் யோசிக்க முடியும். உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்வதெல்லாம், விலங்குகள் – சல்லிகட்டு – இத்யாதிகள் எல்லாவற்றை பற்றி ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் முன்முடிவுகளை/நம்பிக்கைகளை கழட்டிவிட்டுவிட்டு இந்த விஷயங்களை அணுக முடிகிறதா என்று பாருங்கள். 

மொழிரீதியாக, பாலியல்ரீதியாக, இனரீதியாக, பொருளாதராரீதியாக, etc... ஒரு சுப்பீரியர் ஆளாக என்றுமே நான் உணர்ந்ததில்லை. உறுதியாக சொல்ல முடியும். ஆனால், இவர்களைக் காட்டிலும் எனக்கு அதிகம் தெரிகிறது (Intellectual Snob) என்ற கற்பிதத்தை முற்றிலுமாக கைவிட முடியவில்லை. எங்கேயாவது தலைதூக்கி விடுகிறது. வெளியே காமிக்கக்கூடாது என்ற cautious உணர்வு இருந்தாலே உள்ளே இருக்கிறது என்றுதானே அர்த்தம். அது போகட்டும். என் அப்பா கேன்சரில் தான் இறந்தார். ஒரு மாதத்தில், வருடத்தில் அல்ல. மூன்று வருடங்கள் கழித்து...பெரும்வலியுடன். அந்த மூன்று வருடங்கள் தந்த அனுபவங்கள் ஏகப்பட்ட விஷயங்களை கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஐந்து ஆண்டுகளாகிவிட்டாலும் இன்றும் கூட சில நாட்களில் தூக்கம் வராது. அவர்பட்ட suffering அந்தமாதிரி. இங்கு suffering என்று நான் சொல்வது...எனது அப்பாவுடன் நிற்காமல், ஹாஸ்டலில் ஒன்றிரண்டு வயது குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை ஏகபட்ட ஆட்களை பார்த்துள்ளேன். வெறும் உடல்நிலை – இறப்பு – ஒரு உறவு இல்லாமால் போவது என்பதோடு மட்டும் இதை குறுக்கிப்பார்க்க வேண்டாம். காசு இருப்பவர்களுக்கு என்னமாதிரியான ட்ரீட்மெண்ட் – அவர்கள் இந்த விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள், இல்லாத ஆட்கள் என்ன செய்வார்கள் – medical trailகளுக்கு, அதன் விளைவுகளை பற்றி முழுவதுமாக புரிந்துகொள்ளாமல் volunteerகளாக போய் சேர்வார்கள் என்பதில் ஆரம்பித்து இதை டாக்டர்கள் எவ்வாறு அணுகிறார்கள், நண்பர்கள் – உறவினர்கள் (ரத்த உறவுதானே நமக்கு என்றும் முக்கியம்) எவ்வாறு அணுகுகிறார்கள் என்று ஏகப்பட்ட திறப்புகள் உண்டு. இதுமாதிரி அனுபவங்கள் ஒரு subdued/detached மனநிலைக்கு நம்மை கொண்டுவந்துவிடும். நமது இயல்பே அப்படியென்றால், இன்னும் வசதி. 1 + 1 = 2. இது விஷயங்களை உணர்வுபூர்வமாக அணுகாமல், தூரத்தில் இருந்து telescopic viewவிற்கு பெரிதும் உதுவும்.

இதற்கடுத்த பெரிய learning process எதுவென்றால், bird watchingகைத் தான் சொல்வேன். அதை பொழுதுபோக்கு என்று சொல்வதைக்கூட நான் விரும்புவதில்லை. மொத்தமே 180 – 200 பறவைகளை மட்டுமே பார்த்திருக்கலாம். இனி பேர்ட் வாட்சிங்காக எங்கும் போகாமல் கூட இருக்கலாம். அது விஷயமேயில்லை. ஏற்கனவே பல விவரிக்க முடியாத தெளிவுகளை எனக்கிது கொடுத்துள்ளது. என் வாழ்க்கை முழுமைக்கும் போதுமான தெளிவு. அதில் பல இருந்தாலும், மிகமிக முக்கியமான ஒன்று: நான் இங்கே ஒரு உயிரினம். இந்த பூமியில் “நானும்” வாழ்கிறேன். எனக்கு பலகோடி ஆண்டுகள் முன்பே பல உயிரினங்கள் இங்கே நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றன. எந்தவிதத்திலும் அந்த உயிரினங்களின் சூழலை குலைக்க எனக்கு அதிகாரமில்லை (புலியும் – நானும் நேருக்கு நேர் சந்திக்கிறோம் என்றால், என் உயிரை காப்பாற்றிக்கொள்ள என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். Survival of the fittest. அது வேறொரு டிபார்ட்மென்ட்). புத்தகத்தில் வாக்கியங்களாக படிப்பதற்கும், உணர்வதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டு. எப்படி மொழிரீதியாக, பாலியல்ரீதியாக நான் சுப்பீரியர் இல்லை என்று உணர்ந்தேனோ, அதேபோல்தான் இதுவும். நமது சிந்திக்கும் திறன், ஆறாவது அறிவு எல்லாம் வேறொரு பக்கம். ஆனால் விலங்குகள்/பறவைகள்/பூச்சிகள் எல்லாமே ஒரு processல்/sequenceல் தான் இயங்குகிறது. அதற்குள் தலையிட நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பது மட்டும் உறுதியாகப் புரிந்தது. தவிர, ஒரு Homo sapien இன்னொரு Home sapienனோடு கம்பேர் செய்து கொள்வதுதானே நியாயம். ஒரு புழுவோடும் சிங்கத்தொடும் நாயோடுமா நம்மை ஒப்பிட்டு பார்த்து மகிழ்வது.



சொல்லப்போனால் இந்த இரண்டு புரிதல் வந்தவுடன் பல விஷயங்களை அணுகுவதும்/புரிந்துகொள்வதும் மிகஎளிதாக இருந்தது/இருக்கிறது. இது மிகவும் முக்கியமான விஷயங்களாக தோன்றியதாலேயே, இவ்வளவுதூரம் சுற்றி வளைத்துக்கொண்டு வர வேண்டியதாகப்போயிற்று. இனி நேரடியாகவே எனக்குத் தோன்றிய கேள்விகளை முன்வைக்கிறேன்.

1) ஹிட்லருக்கு/அந்த கூட்டத்துக்கு  ஒரு கற்பிதம் இருந்தது. தனது "இனம்" தான் மிக உயர்வானது; மற்றவர்கள் தங்களைவிட கீழானவர்கள்; அதனால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்; Racism. இவர்கள் அதோடு நிற்கவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் - ஊனமுற்றவர்கள், இவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் இவர்களைக் கொல்லலாம். இவர்கள் அனைவரும், nothing but empty shells of human beings. இவர்களது வாழ்க்கை, life unworthy of life - Lebensunwertes Leben. எளிய, சாதாரண மக்களிடமிருந்து இந்த கற்பிதம் தொடங்கவில்லை. இரண்டு ப்ரோஃபசர்கள் தான் 1920ல் இதை ஆரம்பித்து வைத்தது. இந்தக் "கோட்பாடு" பிடித்துப்போய் நாஸிக்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு இதை கொண்டுபோக ஆரம்பித்தார்கள்.


Speciesism. எப்பிடி தனது "இனம்" மட்டுமே உயர்ந்தது என்று நினைக்கிறோமோ அதுபோலவே  "மனிதன்" இனம் மற்ற எல்லா இனங்களை விட உயர்ந்தது; தனக்கு கீழ்தான் எல்லாம் என்று நினைப்பிற்க்கு பெயர். Racism, Sexism போல. 

நேரடியாக பேசுவோமே. ஆடு - மாடு - கோழிகள் -நாய்கள் - இன்னும் பல விலங்குகள் இதெல்லாம் சாகடிக்கப்பட வேண்டியவைகள்; "மனித" நன்மைக்காக - உணவுக்காக - பொழுதுப்போக்கிற்காக - தேவைகளுக்காக என்றால், மனநிலை சரியில்லாதவர்களால் நமக்கு எவ்வித "பயனுமில்லையே". கடுமையாக பாதிக்கப்பட்ட பலருக்கு, விலங்குகளை விட "awareness" குறைவுதான். விலங்குகளை கொல்வது நமது பார்வையில் சரி என்றுபடுமானால், ஹிட்லர் கோஷ்டியின் பார்வையில் அதுவும் சரிதானே.

ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன். அதன் ஆரம்பமே, இந்த life unworthy quoteடை வைத்துதான். இந்தியா போன்ற நாட்டில் ஏற்கனவே நாம் சக மனிதர்களை "unworthy life" என்றே நடத்திக்கொண்டிருக்கிறோம். இங்கு விலங்குகள் - அதன் மனநிலை - உரிமை பற்றி பேசுவதெல்லாம் அதீத எதிர்பார்ப்பு. பெண்கள், குழந்தைகள் உட்பட inferior என்று நாம் நம்பும் அனைவரிடமும் நம் "வீரத்தை" காமிக்க முற்படுவோம். விலங்குகளிடத்திலும் அதேதான். 

2) 20 வாரங்களுக்கு முன்பு கருவில் இருக்கும் குழந்தைக்கு வலி தெரியாது/தெரியும் என்று பெரிய சண்டை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அபார்ஷனை முன்வைத்து. ஆனால், அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் - அந்த கருவை விட, வளர்ந்த நாய்க்கோ - ஆட்டுக்கோ - பன்றிக்கோ வலியை உணரும்தன்மை மிகமிக அதிகம். Awarenessம் அதிகம். இதில் நமது நிலைப்பாடு என்ன ?




Complex Science at Issue in Politics of Fetal Pain

3) மீனவர்கள் மீனை உண்பதற்கும், பூர்வகுடிகள் காட்டுக்கோழியை அடித்து உண்பதற்கும்(இரண்டுமே முன்னொரு காலத்தில்)  - KFC/McDonald's செயற்கையாக புஷ்டியாக்கப்ப்பட்ட - மோசமான சூழ்நிலையில் அடைத்துவைத்து வளர்க்கப்படும் கோழிகளை நாம் உண்பதற்கும், இமயமலைக்கும் பரங்கிமலைக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. முன்னது ecologyல் ஒரு பகுதி(யாக இருந்தது). இரண்டாவது luxury.

4) பெரும்பான்மை/அதிகாரம் மிகுந்த குழுவின் கூட்டு மனநிலைக்கு எது சரி/வசதி என்று தோன்றுகிறதோ அதுதான் கடைபிடிக்கப்பட ஆரம்பிக்கும். பின்னர் அதுவே மரபாக மாறிவிடும். நாகரீகங்கள் – மரபுகள் – சடங்குகள் வளர்ந்ததெல்லாம் இவ்வாறுதான். ஆனால் அது இன்றைய காலகட்டத்திற்கு தேவையா - அதன் பயன் என்ன - இதெல்லாம் யோசித்துப்பார்த்து அது ஒத்துவராவிட்டால் அதை தூக்கி எறிந்துவிட்டு போக வேண்டியதுதானே. ஒருவேளை மரபை முன்னிலைப்படுத்துவதுதான் நோக்கம் என்றால், தமிழர் மரபு/பெருமை பேசும் நாம்தான் இன்னொரு பக்கம் சாதிக்கொடுமைகளை தொடரந்து செய்துகொண்டிருக்கிறோம். 

South Africaவில் இல்லாத மரபா, பெருமையா. அவர்களும் இதுபோன்றே பலவிழாக்களை கொண்டாடவே செய்கிறார்கள். ஆனால் அதோடு - இப்பிடியான மியுசியம்களையும் வைத்திருக்கிறார்கள். ஏன் ?

Apartheid Museum

நமது மரபின்மீது பற்றிருக்குமாயின் - அதன் குறைகள்/நிறைகள் இரண்டையும் பொதுவில் வைத்தால்தானே மக்களுக்கு இதை தொடரலாமா இல்லையா என்ற தெளிவு பிறக்கும். அதைவிடுத்து, மரபு - மொழி - தமிழர் என்று பேசிக்கொண்டிருந்தால் இப்படியே பல நூற்றாண்டுகளுக்கு உட்காந்திருக்க வேண்டியதுதான். இதுபோலவே, விலங்குகள் மீது நாம் இவ்வளவு கொடுமைகள் நிகழ்த்துகிறோம் என்ற factsசை ஒப்புக்கொண்டு பொதுவில் இதைப்பற்றி பேசாமல் ஒழிய, எப்படி இதுபற்றிய பார்வை மாறும். மாறலாம். மாறாமல் போகலாம். ஆனால் முற்றிலுமாக இன்னொரு கோணத்தை பேசவே தயாரில்லை என்றால், என்ன மனநிலை இது ? யார் கண்டது....அடுத்த தலைமுறையிலோ அதற்கடுத்த தலைமுறையிலோ இப்படியெல்லாம் விலங்குகளை கொடுமைப்படுத்தியிருக்கிறோமா என்பதை உணர்ந்து வேறு வகையில் இதற்கு தீர்வு காண முற்படக்கூடும்.

------------------------------------

Circa 1994. திண்டுகல்லில் MVM என்ற பள்ளியில் தான் LKG முதல் 5வது வரை படித்தேன். ரொம்ப விசாலமான ஸ்கூல். விளையாட ஏகப்பட்ட இடங்கள் உண்டு. இன்னொரு முக்கியமான விஷயம், மாடுகள். மிகப்பெரிய மாட்டுப்பண்ணை இருந்தது. தள்ளி இருந்தாலும், அஞ்சாங் க்ளாஸ் படிக்கும்போது மாட்டுக்கொட்டகைகள் கொஞ்சம் பக்கத்தில் இருக்கும். பெரிய பெரிய திமிளோடு சில மாடுகளை கொட்டகையின் ஸ்கூலின் ஒரு பக்கத்தில் இருந்து அந்தப் பக்கமாக கொண்டுபோவார்கள். கொஞ்சநேரத்தில் மற்றொரு மாட்டின் மீது இந்தமாடு ஏறி சண்டை போட்டுக்கொண்டிருக்கும். ஆ..வு..என்ற கூச்சல் வேறு. ப்ரேக்கின்போது அந்தப்பக்கமாகப் போனால் ரத்தம் எல்லாம் இருக்கும். இப்பிடி மாடுகள் பெரிய சண்டைபோட்டு, நான் ஸ்கூலுக்கு போகாமல் இருந்தால் அடுத்தநாள் நண்பர்கள்....இன்னிக்கு செம சண்டடா என்று திகிலுடன் சொல்வார்கள். இப்படியாக, ரெண்டு மாடுகள் ஏன் சண்டைபோடுகின்றன என்ற தாத்பரியம் கிட்டத்தட்ட 20....சரி, 15....ஓகே....10 ஆண்டுகள் கழித்துதான் எனக்குப் புரிந்தது. 

சிலபல மாதங்கள் முன்பு ஆஃபிஸ் நண்பர் ஒருவருடன் அவர் ஊரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். சேலம் பக்கம் எதோவொரு ஊர். மாடுகள் பற்றி பேச்சு வந்தபோது, சுவாரஸ்யமான பல தகவல்கள் சொன்னார். அதற்கு முன்னமே இதுபற்றி எனக்குத்தெரிந்தாலும், இவ்வளவு தகவல்கள் தெரியாது. அவர்கள் ஊரில் ஒரு “பொலி காளை” ஒருநாளைக்கு 200 – 300 ரூபாய் வரை சம்பாரிக்குமாம். பல சமயங்களில் ரெண்டு பசு மாடுகள், சில சமயங்களில் மூன்று பசு மாடுகள் வரை இணை சேரும். அதற்கு முன்னர் பொட்டாசியம் பெர்மாங்கனேட் போட்டு கழுவி விடுவார்கள். நோய் தொற்றிக்கொண்டால். அதுபோக காளைக்கு சிலசமயம் மூட் செட்பண்ண – அதற்கு கொஞ்சம் முன்னாடியே பசு மாட்டை கட்டிவைத்திருப்பார்களாம். நேரம் வரும்போது வரிசையில் வேறுசில பசுமாடுகளை கொண்டுவந்து நிறுத்துவார்கள். இதில் சில பொலி காளைகள் மைனர் குஞ்சுகளாக மாறி ஊரை சுற்றிக்கொண்டிருக்கும். யாருக்கும் அடங்காது; எந்த வேலையும் செய்யாது. ரொம்ப முரண்டு பிடிக்கும். அப்படியான காளைகளை கூட்டிக்கொண்டுபோய்....பொட்டீர்....காயடித்து விடுவார்கள். அப்பறம் விதியை நொந்தபடி ஓரமாக நின்றுகொண்டிருக்கும். 

இதெல்லாம் நடந்தது பல ஆண்டுகள் முன்பு. இன்று, இந்தியாவில் கிட்டத்தட்ட 80% மாடுகள் எப்பிடி கன்றுக்குட்டிகளை ஈனுகின்றன என்றால்... Artificial Insemination எனப்படும் செயற்கையாக காளையின் விந்தை மாட்டுக்குள் செலுத்தும் முறையின்மூலம் தான். அமெரிக்க போன்ற நாடுகளில் இதன் சக்சஸ் ரேட் 80% என்றால், நம்மூரில் 30%தை தாண்டுவதே பெரிது. இந்தமுறையில் நோஞ்சான் காளை மாட்டை எல்லாம் சீந்த மாட்டார்கள். நல்ல திடகாத்திரமான – High breed – காளைகளுக்கு தான் மௌசு. இந்தமுறையில் ஒருமுறை எடுக்கப்பட்ட விந்தை பல மாடுகளுக்கும் பயன்படுத்து முடியும். விலையும் கம்மி. ஒரு ஷாட் ஐம்பது ரூபாய்(என்று கேள்வி). இதன் முக்கிய நோக்கம், காளையின் உதவியின்றி கன்றுகளை ஈனலாம் என்பதைத்தாண்டி பால் உற்பத்தி அதிகளவில் இருக்கும் என்பதினால்தான். பசு கன்றை ஈன்ற பிறகு, பால் உற்பத்தி படிப்படியாக குறையத்தொடங்கும். அடுத்த கன்றை ஈன்றால்ஒழிய உற்பத்தி குறைவாகத்தான் இருக்கும். இதை எப்படி override செய்வது ? அதற்குதான் வருடாவருடம் செயற்கையாக கருத்தரிக்க வைப்பது. பால் உற்பத்தி குறையாதல்லவா.

இந்தியாவில் இந்தமுறை 50களில் தொடங்கினாலும், 70களில் வேகமெடுக்கத் தொடங்கியது. 60களுக்குப் பிறகான இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை பற்றித் தெரிந்திருந்தால் இந்நேரம் இந்த செயற்கை கருத்தரிப்புமுறை எவ்வாறு நமது நாட்டில் பயன்படுத்துப்பட்டது என்பது புரியும். White Revolution –  90களில் தூர்தர்ஷன் சுரபி அமுல் விளம்பரம். ஞாபகம் வருகிறதா ? White, Green, Blue, Grey, Yellow என்று நமது நாட்டில் நடந்த புரட்சிகள் ஏராளம். இதனைப்பற்றி தெரிந்துகொள்வதும் அதன் விளைவுகளை (நல்லது/கெட்டது/சரிசெய்ய முடியாத இழப்புகள் என்று பல விளைவுகளை இந்தப்புரட்சிகள் ஏற்படுத்தியுள்ளன) புரிந்துகொள்வதும், தற்போதைய சூழ்நிலையில் மிகமிக அவசியம். ஏனென்றால் அப்போதைய இந்தியாவை அடுத்ததடுத்து பல வறட்சிகள்/பஞ்சங்கள் தாக்கிக்கொண்டிருந்தன. அன்றைய நேரு regime இதையெல்லாம் அடுத்தடுத்து பார்த்தினால் இதுபோன்ற “Revolution”கள் தான் விடிவு/நிவாரணம் என்று நம்பினார்கள். குறிப்பாக, நேரு – தொழில் புரட்சியைவிட விவாசய புரட்சியே மிகவும் அவசியம் என்று உறுதியாக நம்பினார். இந்தப் புரட்சிகளின் விளைவாகத்தான் இந்தியா உணவு உற்பத்தியிலும் பால் உற்பத்தியிலும் 90களில் தன்னிறைவை அடைய முடிந்தது. 60களின் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு பார்த்தால் இது பல லட்சம் மக்களைக் காப்பற்றியுள்ளது என்பதே நிஜம். ஆனால், சரியான அணுகுமுறையும்/மாற்று சிந்தனைகளும் இல்லாத காரணத்தால் இந்த வழிமுறைகளையே பிடித்துதொங்கிக் கொண்டிருந்ததன் விளைவுகளைத்தான் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.



மாடுகளும் உயிர்கள் தான்; அதற்கும் ஓரளவு பிரக்ஞை – எங்கிருக்கிறோம், எப்படி நமது இடத்திற்கு திரும்புவது, பிடித்தவன்/பிடிக்காதவன் யார்யார் - உண்டு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்று நினைக்கிறேன். அப்படியான, தெய்வமாக பலரும் வணங்கும், மாடுகளுக்காக கொலைகூட நடக்கும் இந்நாட்டில் தான் இயற்கையாக ஒரு உயிரினம் குட்டியை ஈன்றெடுக்கும் முறையைக்கூட நமது சுயநலத்திற்காக மாற்றி...மாடுகளை போட்டு வதைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பசுவதை தடுப்புச்சட்டம் இதையெல்லாம் கண்டுகொள்ளாது. இதுவெறும் ஆரம்பம் தான். இதில் தொடங்கி பசுவின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை ஏராளம். இப்பிடி சக்கையாக உறிஞ்சப்பட்ட மாடுகள், கடைசி காலங்களில் அடிமட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. அதில் சில கறிக்கும் பல மாடுகள் தோலுக்காகவும் கொல்லப்படுகின்றன.அதைக் கொல்ல கேரளா போன்ற ஊர்களுக்கு கொண்டுபோகும் முறை அதைவிட கொடுமையானது.  கன்றுக்குட்டிகள் நிலைமை படுமோசம். இதுபற்றி நல்ல விரிவான கட்டுரையை இங்கே படிக்கலாம். இன்னொரு விஷயம், நான் முட்டை கூட சாப்பிடாத சைவம். பால்/பால் பொருட்கள் மட்டும் எடுத்துக்கொள்வேன் என்றால், ரத்தகறை நம்மீதும் படிந்தே இருக்கிறது.


1) பத்து பேர் சேர்ந்துகொண்டு ஒரு மாட்டை கேரோ செய்யும்பொழுது அது பதிலுக்கு தாக்கவே செய்யும். இது எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும். இதைவைத்துக்கொண்டு, அது “விளையாடுகிறது” என்று முடிவு செய்ய நமக்கு என்ன உரிமை இருக்கிறது ?. ஒன்றுமில்லை. ஒரு பசுமாட்டின் முன்பு போய், கத்திக்கொண்டே இருங்கள். கொஞ்சநேரத்தில் கடுப்பாகி முட்ட வரும். ஆயிரம்பேர் கூச்சல் போட்டுக்கொண்டிருக்கும் இடத்தில் அதைவிட்டால் சீறத்தான் செய்யும். இதிலென்ன விஷயம் இருக்கிறது ?

2) தமிழர்கள் ஏறு தழுவுதல்/மஞ்சு விரட்டுதல்/சல்லிக்கட்டு போன்ற விஷயங்களை ஆரம்பித்தபொழுது இருந்த காளை – மாடுகளின் எண்ணிக்கை வேறு. அப்போதிருந்த சூழ்நிலை வேறு. வாழ்க்கைமுறை வேறு. பொழுதுபோக்கு வேறு. 

3) ஒரு மாடு – மற்றொரு மாடுடன் இயற்கையாக இணை சேரும் முறையில் ஆரம்பித்து பல விஷயங்களை நமது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அது பிரச்சனையில்லை.

4) மரபுரீதியிலான விவசாயத்தை கைவிட்டாயிற்று. அட...விவசாயம் நசிந்து போய்கொண்டிருக்கிறது. அப்பறம் எங்கே மரபுரீதியிலான விவசாயம். அது பிரச்சனையில்லை. 

5) மரபுரீதியிலான உணவுப்பழக்கம் போயே போய்விட்டது. அது பிரச்சனையில்லை.

6) விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து....நம்மை சுற்றி ஏராளமான பிரச்சனைகள் நடந்துகொண்டே இருக்கிறது. அதுவும் முக்கியமில்லை

7) இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி, சல்லிக்கட்டை நடத்துவதன் மூலம் நாம் என்ன சாதிக்க நினைக்கிறோம் ? அல்லது இதன் நோக்கம் என்ன ? வீரமா ? வெட்டி பெருமையா ? 

இன்னொரு வாதத்தையும் பார்க்க முடிகிறது. நியாமான காரணங்களும் கூட. சல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்பதால் விவசாயிகளுக்கும் நன்மை. காளைகள் இனம் காக்கப்படுகிறது. 

காளைகளை வளர்ப்பதென்பது லேசுப்பட்ட காரியமல்ல. ஏகப்பட்ட காசு செலவுசெய்தாக வேண்டும். சாதாரண விவசாயிக்கெல்லாம் இது கஷ்டமான காரியம். அப்படியென்றால் பொருளாதார ரீதியில் ஓரளவு நன்றாக இருப்பவர்கள் மட்டுமே காளைகளை வளர்க்க முடியும். அதிலும் மிகவசதியாக இருந்தால் மட்டுமே நல்ல உணவாகக்கொடுத்து காளைகளை தினவுடன் வளர்க்க முடியும். 

இரண்டாவது பாய்ன்ட் மிகமுக்கியமானது, தேவையானதும் கூட. Artificial Inseminationனை விடுத்து இயற்கையான வழியில் அதன் இனத்தை காப்பது. ஆனால், சல்லிக்கட்டு நடக்காத மாநிலங்களில் மட்டும் எப்படி காளைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டை விட அதிகளவில் இருக்கின்றன ? இத்தனைக்கும் நமது காளை வகைகளை விட அங்கு அதிகளவில் வகைகள் உள்ளன.

National Kamdhenu Breeding Centre

நோஞ்சான் காளைகளும், வயதான காளைகளும் - பெரும்பாலும் - எவ்வாறு கொல்லப்படுகின்றன ? இதுவொரு முறை. பெரிய சுத்தியால் முதுகில் நாலைந்து அடிகள். அவ்வளவே. இதுபோல பல உண்டு. ஆக, காளைகள் தெய்வம் - உயிர் என்றால், எப்படி இதுமாதிரியான உயிர்வதையை இத்தனைநாள் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். "பல்லுயிர் ஓம்புதல்" என்ற தமிழரின் "மரபிற்கு" முற்றிலும் எதிரானதாகல்லவா இருக்கிறது.

1) Why the Ban on Cow Slaughter is not Just Anti-Farmer but Anti-Cow as Well

2) Who killed the holy cow


பிராய்லர் கடைகள் 10 – 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இன்று அதிகம் இருப்பதைக்காண முடிகிறது. இந்த கோழிகள் எங்கிருந்து வருகின்றன ? எவ்வாறு வளர்க்கப்படுகின்றன ? அது புஷ்டியாக வளர என்னவெல்லாம் கொடுக்கப்படுகிறது ? இதுபற்றி எத்தனை பேர் சிந்தித்திருக்கிறோம் ? இந்தப்பக்கம் அந்தப்பக்கம் நகர முடியாத கூண்டில் தான் முக்கால்வாசி ஆயுளை இக்கோழிகள் கழிக்கின்றன. கோழிகளுக்கும் உணர்வு உண்டு; வலி உண்டு; தனது சூழலியல் பற்றிய அறிவு உண்டு. அப்படியான உயிரினத்தை இவ்வளவு மோசமாக நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், தமிழர்கள்/இந்தியர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் “மரபு”...அதன்படி...கோழிகளை அதன்போக்கில் வளர்ப்பார்கள். அது அந்த இடத்தைச் சுற்றி அதுபாட்டுக்கு சுற்றிக்கொண்டிருக்கோம். ஒருநாள் படக்கென்று பிடித்து குழம்பு வைத்து விடுவார்கள் (சைவைம் – அசைவம் – இதுமிகப்பெரிய டாபிக். இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்ல ). ஆனால் இந்த இறக்குமதி செய்யப்பட்ட livestock farming முறை வந்தவுடன் நமது “மரபு” அடியோடு மாறிப்போயிற்று. உற்பத்தி – லாபம் என்ற நோக்கில் மட்டும் வெறித்தனமாக கோழிகளை கையாள்கிறோம்.


கோழிகள் மட்டுமல்லாமல், பன்றிகள், மாடுகள் என்று எல்லா விலங்குகளையும் நமது சுயநலத்திற்காக படுமோசமாக நடத்துகிறோம் என்பதே நிஜம். KFC, McDonalds போன்ற இடங்களில் எல்லாம் நாம் கைவைக்கும் ஒவ்வொரு துண்டும் கண்டிப்பாக இவ்வாறு கொடுமையான சூழ்நிலையில் வளர்க்கப்படும் விலங்குகளே. இதைச்சொல்லி உணர்ச்சிகளை துண்டுவது என் வேலையல்ல. இது facts. ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம்.



உணவுப்பழக்கம் தான் இப்படியென்றால், இதற்கு மற்றொரு முனையில் இன்னொருதுறை இருக்கிறது. Pharmaceutical industry. உணவுக்காக நடத்தபடும் அவலங்களாவது கொஞ்சம் வெளியே தெரிகின்றன. பரவலாக பேசுப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் விலங்குகள் பற்றி வெளியே தெரிவதேயில்லை. நண்பர் ஒருவர் (ஒருவேளை அவர் இதைப்படித்தால் கொஞ்சம் விரிவாக இதைப்பற்றி எழுதுவாராயின் சந்தோஷம்), Biotech முடித்தவர். இதுபற்றி கதைகதையாக சொல்லி இருக்கிறார். Sampleக்கு ஒன்று. அதை அப்படியே தருகிறேன்.

“ முயல் கண்ணுல டெஸ்ட் பண்ணுவோம்னு அன்னிக்கு சொன்னீங்களே...அது Draize eye test தான சொன்னீங்க ? “

“Irritation இருக்கான்னு டெஸ்ட் பண்ணுவாங்க.... Draize eye irritant test. எல்லா முகப்பூச்சு க்ரீமும் இப்படி டெஸ்ட் செய்யப்படும். Maybelline கண் மை வகையராவும் இப்படியே

அது டெஸ்டிங் க்காக தான்.. நான் அந்த experiment பண்ணல..... Animal testing License வாங்கணும்னா , எலியைக் கொல்லனும்...தினுசு தினுசா,, Carbon monoxide விட்டு கொல்வது, கழுத்து எலும்பை உடைத்துக் கொல்வது, கருப்பையில் இருக்கும் foetus கொல்ல கத்திரிக்கோல் வைத்து வெட்டுவது...

இது முதல் படி...அடுத்து முயலின் கண்ணில் இருக்கும் ஒரு ரத்த நாளம், இதயத்தின் அருகே இருக்கும் ரத்த நாளம் ...இதில் ஓட்டை போட்டு extraction of blood. அப்பால காதுல எல்லாம் எக்கச்சக்க irritability inducing agents போட்டு, மருந்து அலேர்ஜி ஏற்படுத்துதான்னு பாப்பாங்க

Embryotoxicity. அப்படின்னு ஒரு மேட்டர் இருக்கு கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருளான்னு சோதனை... முயல் செம்ம ஸ்பீடா, அடிக்கடி குட்டி போடும் அனிமல்...அதனால் கருவில் இருக்கும் குட்டிகளில் இதை சோதிப்பார்கள். LD 50 எல்லாத்துலையும் இருக்கும்.....பெக்டீரியால கூட அது செய்வாங்க.. “

இன்னொரு உதாரணம் பார்ப்போமே. “Horseshoe Crab” என்றொரு வகை நண்டு உள்ளது. இதற்குள்ள சிறப்பம்சம் இதன் ரத்தம் ப்ளூ கலரில் இருக்கும். ஏன் அவ்வாறு இருக்கிறது ? அதனால் நமக்கென்ன பயன் ? படித்துப்பாருங்கள்

தேமே என்று திரிந்துகொண்டிருந்த நண்டுகளை பிடித்து அதை வைத்து பில்லியன் கணக்கில் காசு பார்க்கிறார்கள். முதலீடு ? கொஞ்சமேகொஞ்சம். லாபம் ? மலைப்பாக இருக்கிறது. 

இந்தத் துறையில் எல்லாம் அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. Tissueகளை வைத்து சோதனை செய்வது, Simulation என்று மாற்றுவழிகள் இல்லாமல் இல்லை. 

Literalலாக, என்னை சுற்றி ஆட்கள் இருந்தாலே எனக்கு மூச்சுமுட்டும். எரிச்சல் மண்டும். வேறுவழியில்லாமல் காலம்தள்ள வேண்டியுள்ளது. ஆனால் எந்தவொரு closed environment - Train AC compartment, ஜன்னலே இல்லாத ரூம்கள் - மாதிரியான இடங்கள் என்றால், பெரிய கஷ்டம். அஞ்சு நிமிடத்திற்கு மேல் suffocateடாக ஆரம்பித்துவிடும். ஆறறிவு உள்ள நமக்கே இப்படி இருக்கிறதென்றால், கோழிகள் - யானைகள் - டால்பின்கள் மாதிரி, ஷோ காமிக்க வளர்க்கப்படும் மிருகங்களின் நிலைமை ? கோழி எல்லாம் படுபரிதாபத்திற்குரிய ஜீவன்கள். இந்தப்பக்கம் - அந்தப்பக்கம் நகர முடியாது. கோவில் யானைகள், புறாக்களில் ஆரம்பித்து ஏகப்பட்ட உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். நமது "Entertainment"க்காக க்ராஸ் - பரீட் செய்யப்பட்ட கலர்கலர் பறவைகளும், மீன்களும் இதில் அடக்கம். இப்படியான, முற்றிலும் ஒரு அந்நிய சூழ்நிலையில் விடப்பட்டு வித்தைகாட்ட பழக்கப்படுத்தப்பட்ட Orca திமிங்கிலத்தைப் பற்றிய டாக்குமெண்டரி இது. தனது ட்ரைனர் உட்பட, இருவரை கடித்து "கொன்றுவிட்டது". நாம் பேசிக்கொண்டிருப்பது கடலில் தன்போக்கில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு உயிரினத்தை கூட்டிவந்து, இப்படி மிகமிகமிக சிறிய இடத்தில் அடைத்துவைத்து வித்தைகாட்டயது யார் தவறு ? அதை ஆயிரக்கணக்கான மக்கள் உறுத்தலின்றி இத்தனை ஆண்டுகளாக பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். பண்டைய ரோமர்கள் காலத்தில் நடந்ததைப் போல. உயிரினங்கள் வேறு - அடிப்படை மனநிலை ஒன்றுதான்.


மேலிருக்கும் பத்து பக்கங்களையும் தாண்டி, இந்த My life as a Turkey documentaryயை முன்வைக்கிறேன். இதுவொன்றே பல புரிதல்களை தரக்கூடியது. Romanticize செய்யப்பட்டதாக தோன்றலாம் (அப்படி இருந்தால், இதை ஷேர் செய்திருக்கவே மாட்டேன்). முழுதாக பார்த்தீர்களானால் நான் சொல்ல வருவது புரியும். Animal behavior - அதில் நம் பங்கு - அதற்கும் நமக்கு உள்ள தொடர்பு/எல்லை - எல்லாவற்றையும் பின்புலமாகக்கொண்டது இந்த documentary.


பெண்ணுரிமை, மனித உரிமை, மாற்று பாலின உரிமை இதெல்லாம் பேசுகிறோம். தேவை. அவசியம். நல்லது. ஆனால் விலங்குகள் பற்றி ஏன் கண்டுகொள்வதில்லை ? ஒருவேளை நாம் எல்லோருமே ஏதாவதொருவிதத்தில் விலங்குகள் மூலம் பயனடைவதால் take it for granted என்று எடுத்துக்கொள்கிறோமா ? இயற்கை - சூழலியல் பற்றி பேசுகிறோம். மாடு - ஆடு - கோழி - உட்பட அனைத்தும் அதிலொரு அங்கம். நாமும் அதிலொரு உறுப்பினரே தவிர, நாம் மட்டுமே முக்கியம் கிடையாது. வேறுவகையில் கலிலியோ இதை சொன்னதற்காகத்தான் அந்தாளை சாகடிக்க வந்தார்கள். அந்த மனநிலையில் தான் நாம் இன்னும் இருக்கிறோமா ? நமக்காகத்தான் எல்லாம்/நம்மைச்சுற்றி தான் எல்லாம் என்ற படுஆபத்தான மனநிலை. "இயற்கையை காப்போம்" என்ற வார்த்தையே பயங்கர காமெடி. இயற்கை தான், நம்மை காப்பற்றிக்கொண்டிருக்கிறது. யாரைப்பார்த்தாலும் "வருங்கால தலைமுறைக்கு நீர், நிலம், லொட்டு லொசுக்கு...." அதிலும் வடிகட்டிய சுயநலம். சுயநலம் - எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் எந்த extentக்கிற்கு என்பதுதான் இங்கு பிரச்சனை.

Mass culture என்றொரு டெர்ம் உண்டு. தமிழ்நாடு/இந்தியா/உலகம் என்று காலங்காலமாக அது தொடர்ந்து இருந்துகொண்டே வருகிறது. அதன் முக்கிய கூறுகளில் ஒன்று, individual significanceசை சட்டை செய்யாது. அதற்கு தனிநபர் விருப்பு/வெறுப்பு தேவையில்லாத விஷயம். பெரும்பான்மைக்கு எது உகந்ததோ அதை பின்பற்ற வைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்ய முற்படுவதுதான் இதன் முக்கிய அம்சம். Propaganda அதிலொரு வழி. அதை கடைசியாக பார்ப்போம். லாஜிக்கலாக யோசித்தால், தனிநபருக்கோ - சிறுகுழுக்களுக்கோ - முக்கியத்துவம் தேவையில்லை என்று தோன்றும். பெரும்பான்மை ஆட்களுக்கு நன்மை நடக்கும்பட்சத்தில் இதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே. ஆனால், Moral responsibility...நம் மனித இனத்திற்கு மட்டுமே உரியது என்று சொல்கிறோமோ...அதுதான் நடுவில் வந்து தொலைக்கிறது. Moral responsibilityயை முன்வைத்து ஒரு சமூகம் நகரும்பொழுதுதான், என்னளவில் அது சிறந்த சமூகம்/மரபு/எல்லாமே. ஒரு Utopianனின் கடைந்தெடுத்த பிதற்றலாக இது தோன்றலாம். பிரச்சனையில்லை.  ஒரு தனிநபரின் விருப்புவெறுப்பை mass culture மதிக்காமல் போகலாம். அல்லது mass cultureன் கருத்துகளோடு அவர் ஒத்துப்போகலாம். அது இரண்டாம்பட்சம். அதற்கு முன்னர், ஒரு பெரிய "thought process" இருந்தாலொழிய நம்மால் தனியாக சிந்திக்க முடியாது. After all, நமது சிந்தனையை யாரும் தடை செய்ய முடியாதே. திரும்பத்திரும்ப இந்த பாய்ன்ட்டையே வலியுறுத்த விரும்புகிறேன். Think individually. பிறகு அவன்/அவள்/அவர்/இவர்/சமூகம் என்று பார்த்துக்கொள்வோம். Marxist theoryயில் முக்கிமான கூறு - False Consciousness/False Needs. தேவை எதுவோ அதைவிட்டுவிட்டு, இதுதான் உனது தேவை என்று நம்ப வைக்கும் முயற்சி. மரபு, மொழி, இனம், இத்யாதிகள் எல்லாம் அவ்வாறன false needsகளை நோக்கி நம்மைத் தள்ளுகிறதோ/தள்ளிவிடுமோ என்ற பயம் எப்பொழுதும் எனக்குண்டு. அதிலிருந்து லாவகமாக தப்பிப்பது...நம் திறமை. Art form, இசை - இலக்கியம் - சினிமா, எதுவாக இருந்தாலும்...அவைகளின் பலவேலைகளில் இதுவும் ஒன்று. தெளிவைத் தருவது. விழித்தெழ செய்ய வேண்டுமெயன்றி ஒரேடியாக போட்டு தூங்க வைப்பது கலையின் வேலையல்ல.

கடைசியாக இதோடு முடிக்கிறேன்.
The function of propaganda does not lie in the scientific training of the individual, but in calling the masses attention to certain facts, processes, necessities, etc., whose significance is thus for the first time placed within their field of vision
The whole art consists in doing this so skillfully that everyone will be convinced that the fact is real, the process necessary, the necessity correct, etc.
All propaganda must be popular and its intellectual level must be adjusted to the most limited intelligence among those it is addressed to. Consequently, the greater the mass it is intended to reach, the lower its purely intellectual level will have to be.