போன மாதம் கோர்ட் படத்தைப் பார்த்தவுடன் எழுத ஆரம்பித்த பதிவு. சோம்பேறித்தனம் காரணமாக அப்படியே போட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்க போய்விட்டேன். போன வாரம் சென்னை கார்ப்பரேஷன் வெப்சைட் கண்ணில்பட, கோர்ட் படத்தை பற்றி பெரிதாக எதுவும் எழுதத் தோன்றவில்லை. இதுமாதிரி லிங்க்கை சிலபல வருடங்கள் முன்பு பாத்திருந்தால், அதீத உணர்ச்சிவசப்பட்டு ஒரு போஸ்ட் எழுதியிருப்பேன். ஏற்கனவே அப்படி ஒன்று எழுதியும் இருக்கிறேன். ஆனால் இந்தமுறை இது பழகிவிட்டது. நீங்களும் பெரிதாக ஜெர்காக மாட்டீர்கள் என்று தெரியும். தினமும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே தானே இருக்கிறோம். ஆமென்.... வாழ்க பாரதம்.
1996. மாதம், தேதி எல்லாம் நினைவில்லை. இந்தியா விளையாடிக்கொண்டிருந்த ஏதோ ஒரு மேட்ச். அவ்வளவுதான் ஞாபகம். நாங்கள் இருந்தது flat சிஸ்டத்தில். எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டுக்கு, ரயில்வேயில் வேலை பார்த்து ரிட்டையரான 60+ ஆள் - அவர் மனைவி - அவர்கள் மகன், குடிவந்து சிலபல மாதங்களே இருக்கும். எங்கள் வீட்டு டிவியில் ஏதோ பிரச்சனை என்று அவர்கள் வீட்டில்தான், பத்தியின் முதல் வரியில் சொல்ல ஆரம்பித்த மேட்ச்சை பார்க்க நேர்ந்தது. அந்தகால வெஸ்ட் இண்டிஸ் - இந்திய வீரர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த பெரியவர்... திடீரென்று ஒரு இந்திய வீரர் ஆட வந்ததும்... படுடென்ஷனாக பேச ஆரம்பித்தார். "இவுங்கள எல்லாம் உள்ள வுட்டுதான் டீம் நாசமா போச்சு" என்று ஆரம்பித்து டீம் - > கிரிக்கெட் -> சமூக காமென்ட்ரி என்று வேறுவேறு ரூட்டில் என்னென்னமோ கடுமையாக புலம்ப ஆரம்பித்தார். எந்தளவிற்கு பேசியிருந்தால்... கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்துக்கூட என்னால் அதை ஞாபகம் வைத்துக்கூற முடிகிறதென்று பாருங்கள்.
Court - அப்படியே மனதை நெகிழச்செய்து, ஒரேநாளில் நமது அறிவுக்கண்ணை திறக்கும் படமா...என்றால் நிச்சயம் இல்லை. அதன் நோக்கமும் அதில்லை. இந்திய சினிமாவை தலைகீழாக புரட்டிப்போடப் போகும் படமா என்றால் அதுவும் இல்லை. இதுவொரு மிக எளிமையாக, அலட்டிக்கொள்ளாமல் நமது சிஸ்டத்தை ஆவணப்படுத்த முயன்றிருக்கும் படம். Passive observerராக நம்மை இருக்க வைக்கும் படம். தினமும் அப்படித்தானே இருந்துகொண்டிருக்கிறோம். வதவதவென்று கருத்து மழை பொழிந்து தள்ளுவதைவிட, passivenessல் தான் தெளிவு பிறக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை (ஜென்னின் அடிப்படையும் இதுவே). Mass psychology (மராட்டிய நாடகம் முடிந்து – கேமரா staticகாக – படுகிளர்ச்சியாக கைதட்டிக்கொண்டிருக்கும் ஆட்களை காமிக்கும் காட்சியை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்), Judicial absurdity, Bureaucracy என்று இந்தியா இன்று சந்திக்கும் பலமுக்கிய – வெளியே பரவலாக தெரியாவிட்டாலும் – இருப்பே தெரியாமல், மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் விஷயங்களை படுயதார்த்தமாக காட்டியுள்ள படம். மேலிருக்கும் நான்கு வாக்கியங்கள் படத்தைப் பற்றி வித்தியாசமாக எழுத வேண்டுமே என்று வலிந்து திணித்த வார்த்தைகள் அல்ல. சத்தியமான உண்மை.
கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருக்காவிட்டால்...இந்தாள் இந்நேரம் உயிரோடு இருந்திருக்க மாட்டார். அந்த லின்க்கைப் படித்துப்பாருங்கள். மீடியாக்கள் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதற்கான சிறு எடுத்துக்காட்டு. “தூக்கு தண்டனை” மாதிரியான விஷயங்களில் எல்லாம் உணர்ச்சிபிழம்புகளாக பல பத்திரிக்கைகளும்/செய்தித்தாள்களும் கட்டுரை எழுதி வருவது ஞாபகம் வந்து தொலைக்கிறது.
கோர்ட் படத்தை பார்க்கும் முன்னர் அதன் இயக்குனரின் கலந்துரையாடல் ஒன்றைக் காண நேரந்தது. அவருக்கு இருக்கும் தெளிவு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. அந்த கலந்துரையாடலில் தான் (இங்கே பார்க்கலாம்) மேற்சொன்ன ஜிதன் மராண்டி பற்றி தெரிய வந்தது. அதோடு மட்டுமில்லாமல், தன்னை பாதித்த Krzysztof Kieślowskiன் குறும்படம் ஒன்றைப் பற்றியும் குறிப்பிட்டார். இது கீஸ்லோவ்ஸ்கி திரைத்துறை மாணவனாக இருக்கும்போது எடுத்த படம். இந்தப் படத்தை பார்த்தபொழுது, நமது ரிஜெஸ்ட்ர் ஆஃபிஸ்களிலும் ட்ரஷரிகளிலும் தாலுகா அலுவலங்களிலும் ஒளிந்திருந்து எடுத்ததைப்போல..சத்தியமாக உணர்ந்தேன் (அரசு அலுவலங்களில் எனக்கு ஏகப்பட்ட அனுபவம் உண்டு. ஆனால் கதவின் அந்தப்பக்கத்தில் நின்றபடி. அதைபற்றி பதிவின் கடைசியில் சொல்கிறேன்). அவர் 1966 எடுத்த படம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து ஒரு 27 வயது ஆளை பாதித்திருக்கிறது என்றால்.....கீஸ்லோவ்ஸ்கிக்கு – ஜீனியஸ் என்ற பெயரெல்லாம் சும்மா வந்துவிடவில்லை. (http://bombmagazine.org/article/7129714/chaitanya-tamhane)
ஓ...சொல்ல வந்து மறந்தே போனேன். கோர்ட் படத்தில் வரும் "குற்றவாளியின்" பெயர் - நாராயன் காம்ப்ளே.
அரசும் அதிகாரவர்க்கமும் எடுக்கும் ஒரு முடிவு, போடப்படும் ஒரு கையெழுத்து: ஒருவரை தூக்கில் ஏற்றும்; ஒருவரை விடுவிக்கும்; ஒரு பக்கம் திருநங்கைகளுக்கு சமஉரிமை உண்டு என்று அறிவிக்கும்; மறுபக்கம் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கும்; இன்னும் போபால் விஷவாயு கொடுமைக்கே சரியான நிவாரணம் கிடைக்காத நிலையில் புதிய அணுஉலைகளை திறக்கச் சொல்லும்; தனி மனிதனாக இதுபற்றியெல்லாம் நம்மால் என்ன செய்ய முடியும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், குறைந்தபட்சம் சுற்றி நடப்பவைகள் குறித்த பிரக்ஞையுடன் இருக்கலாம். அந்த உரிமையை யாரும் நம்மிடம் இருந்து பிடுங்க முடியாதுதானே. நடுவில் நம்மை திசை திருப்ப லெக்கிங்ஸ் குறித்த கட்டுரைகள் வரும்; மாட்டுக் கறி தடை என்று வரும்; ஒவ்வொரு வெள்ளியும் ஒரு படம் ரிலீஸ் ஆகும்; Facebookல் நம்மை unfriend செய்துவிட்டார்கள் என்ற சீற்றத்தில் நாம் இருக்கக் கூடும் X இதற்கு அப்படியே அந்தப் பக்கத்தில் அதிகார வர்க்கத்தால் பல முக்கிய முடிவெடுக்கள் எடுக்கப்படும். அம்முடிவுகள் நம்மை நேரடியாக பாதிக்கதாவரை......."குமுதம் போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிக்கையிடம் இருந்து...."
July 2015:
நெக்குருகி நிற்க நேர்ந்தது. ஷஷி தரூரின் இந்தப் பேச்சைக் கேட்டு. அதை சிலாகித்து நண்பர்கள் சோஷியல் தளங்களில் எழுதிய கட்டுரைகளை படிக்க நேர்ந்தபொழுது.....கிட்டத்தட்ட அழுதேவிட்டேன். நீங்களும் படித்துப்பாருங்கள்.
Barve Committee (1955) - Malkani Committee (1957) - X Committee - Y Committee - Z Committee இப்படி பல கமிட்டிக்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன...மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது பற்றி. "வேண்டிய வசதிகள் செஞ்சு குடுத்து....இந்த வேல பாக்கச் சொல்லுங்க" என்பதில் ஆரம்பித்து வேறுவேறு வகையான பரிந்துரைகளை இந்தக் கமிட்டிகள் வழங்கியுள்ளது.
இந்த விஷயத்தில் முக்கிய மாற்றம் (குறைந்தபட்சம் சட்ட அளவில்) நடந்தது Employment of Manual Scavengers and Construction of Dry Latrines (Prohibition) Act, 1993 அறிவிக்கப்பட்ட போதுதான். இதன்படி இப்படி கழிவுகளை அகற்ற ஆட்களை அமர்த்தும் நிறுவனங்கள்/ஆட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் - ஒரு வருடம் ஜெயில்/2000. Rs அபராதம். ஆச்சா...இனி 2012ற்கு வருவோம்.
இதுவரை இருக்கும் சட்டங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி "The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Bill, 2012" என்ற மற்றொரு சட்டத்தை பாய்ச்சுகிறார்கள். நேரமிருப்பவர்கள் இந்த சட்டத்தைப் பற்றி படித்துப் பார்க்கலாம். ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை. நேரடியாக "இது சட்டபடி குற்றம்" என்று சொல்லித் தொலைய வேண்டியது தானே. கிட்டத்தட்ட 16 பக்கம். தேவையேயில்லாத விவரணைகள், வார்த்தை ஜோடிப்புகள். எல்லோருக்கும் புரியும்படி ரெண்டு பக்கத்தில் அடக்கி எழுத முடியாதா என்ன ?
ஆனால், மேலே பார்த்த அனைத்து சட்டங்களும் - ஒரு விஷயத்தை (ஒப்புக்காகவாவது) முன்வைத்தன. "மனிதக் கழிவுகளை/சாக்கடைகளை அகற்றும் பணியில், தகுந்த பாதுகாப்பின்றி ஆட்களை வேலைக்கு வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்"
சென்னை - எனது Phd ஆய்வுக்குரிய பகுதி அதுதான் என்பதால், சென்னையின் கட்டிடங்கள் பற்றி எப்படியெல்லாம்/எப்போதெல்லாம் data திரட்ட முடியுமோ அப்பொழுதெல்லாம் data திரட்டுவது வழக்கமாகவே போய்விட்டது. அப்படி போன வாரம் Chennai Corporation Websiteக்கு சென்றபோது, உண்மையாகவே இது பெரிய அதிர்ச்சியையும்...இதை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் புரியாத நிலையும் ஏற்படுத்தியது. இப்பொழுது வரை இதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. முதல் பக்கம்...வெப்சைட்ன் முதல் பக்கமே அதுதான். அதில் இப்படியொரு லிங்க்.
நிறைய பேர் இந்த வாதத்தை (?) முன்வைத்து கேட்டிருக்கிறேன். "ஏன் இந்த மக்கள் வேலை செய்ய போக வேண்டும் ? முடியாது என்று சொல்ல வேண்டியது தானே...". விடை இந்த pdfல் இருக்கிறது. அடடா....எவ்வளவு அக்கறையுடன் மொபைல் நம்பர் முதற்கொண்டு துல்லியமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த லிஸ்டை பார்த்தால் சில patternகள் துல்லியமாகப் புரியும். ஒரே வீட்டில் இருந்து நான்கு பேர் கூட இதே வேலையைச் செய்வதைப் பார்க்கலாம். அதே முதல் பக்கத்தில் சுகாதார நிலையங்கள் குறித்தோ, ஹாஸ்பிடல் குறித்தோ ஏதாவது தகவல் இருக்கிறதா என்று பார்த்தால்...ம்ஹும். (சில டீடைல்களை நானும் பொதுவில் போட ஒப்பவில்லை. அதனால் erase செய்துள்ளேன்).
எனக்கு சென்னை கார்ப்பரேஷனிடம் மூன்றே மூன்று கேள்விகள் உள்ளன.
1) மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் விபரப் பட்டியல் என்றே போட்டிருக்கிறது. எப்பிடி அகற்றுகிறார்கள் ? எவ்வாறு அகற்றுகிறார்கள் ?
2) இந்த pdfன் அவசியம்/பயன் என்ன ?
3) 2012 சட்டத்தின் வரைவுகளுக்கு உட்படாமல் இவ்வேலைகளை நீங்கள் வாங்கிக் கொண்டிருந்தால், (மனசாட்சியை விடுங்கள்) அது சட்டபடி குற்றம் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா ?
திராவிட கட்சிகள், காங்கிரஸ், பிஜேபி, தமிழ் தேசியம், ஆண்ட பரம்பரை கட்சிகள், ஆளப் போகும் பரம்பரை கட்சிகள்....இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களது தேர்தல் அறிக்கையில் இதுவரை "மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது " குறித்து என்ன சொல்லியிருக்கிறார்கள் ? சொல்லியிருக்கிறார்கள் என்று நான் சொல்வது தேர்தல் அறிக்கையைத் தாண்டி - அடிப்படை கட்டமைப்பை எவ்வாறு செயலாக்கப் போகிறோம் என்ற தெளிவு கொஞ்சமாவது உண்டா ? பொதுக் கழிப்பிடங்களை கட்டுவோம் என்று சொன்னால் மட்டும் போதுமா ? எவ்வாறு... அதைவிட முக்கியமாக யார் அதை பராமரிப்பது என்பது பற்றியெல்லாம் இவர்களது பார்வை என்ன ? திடக்கழிவு மேலாண்மை என்பதெல்லாம் மொத்தமாக ஒரே இடத்தில குப்பையைக் குவித்து வைத்து எரிப்பதுதானா ?
கிழட்டுப் பயல் மாதிரி ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லி சொல்லி போர் அடிக்கிறது. மிகமிக அடிப்படை வசதிகளான...."காலையில எந்திருச்சா கக்கா போகும்..அத கழுவ தண்ணி வேணும் (அ) வேற எதாவது வேணும்..." போன்றவைகள் குறித்து என்றைக்கு சீரியசாக செயல் படுகிறோமோ அன்று தான்..Developing country என்றாவது சொல்லிக் கொள்ளும் தகுதி நமக்குண்டு. கோர்ட் படத்தில், நாராயன் காம்ப்ளே உட்பட பல பிரதான கதாபாத்திரங்களும் மராட்டியர்களே. ஜாதி மட்டும் வேறு. அந்த pdfல் இருக்கும் அநேகரும் தமிழரே. ஜாதி என்னவாக இருக்கும் ? இவர்களுக்கு தமிழ் தேசியத்திலாவது இடமுண்டா ?
இங்கே செய்யப்படும் அரசியல் எல்லாமே பெரிதும் உணர்ச்சி நிலை சார்ந்தே இருந்துவருகிறது. Social structure சார்ந்த அரசியலுக்கெல்லாம் இங்கு வழியுண்டா என்று தெரியவில்லை. எங்கு சுற்றினாலும் கடைசியில் ஊழல் (உங்கள் ஆட்சியில் ஊழல் - போன ஆட்சியை விடவா - அதற்கு முன்னால் இருந்ததை விடவா - அதற்கு முன்னாடி நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியாதா...) - தமிழ்/திராவிடம் - தமிழர்கள்...இந்த பாய்ன்ட்களில் வந்துதான் இவர்கள் அரசியல் நிற்கும். நீங்கள் என்ன காரணம் வேண்டுமென்றாலும் சொல்லலாம்...இந்த ஆட்சியில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என்று புள்ளி விவரங்கள் தரலாம். அந்த pdfயையே என் கேள்வியாகத் தருகிறேன். இதற்கு தகுந்த விளக்கம் கொடுக்க முடிந்தால், என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். Word..
கிழட்டுப் பயல் மாதிரி ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லி சொல்லி போர் அடிக்கிறது. மிகமிக அடிப்படை வசதிகளான...."காலையில எந்திருச்சா கக்கா போகும்..அத கழுவ தண்ணி வேணும் (அ) வேற எதாவது வேணும்..." போன்றவைகள் குறித்து என்றைக்கு சீரியசாக செயல் படுகிறோமோ அன்று தான்..Developing country என்றாவது சொல்லிக் கொள்ளும் தகுதி நமக்குண்டு. கோர்ட் படத்தில், நாராயன் காம்ப்ளே உட்பட பல பிரதான கதாபாத்திரங்களும் மராட்டியர்களே. ஜாதி மட்டும் வேறு. அந்த pdfல் இருக்கும் அநேகரும் தமிழரே. ஜாதி என்னவாக இருக்கும் ? இவர்களுக்கு தமிழ் தேசியத்திலாவது இடமுண்டா ?
இங்கே செய்யப்படும் அரசியல் எல்லாமே பெரிதும் உணர்ச்சி நிலை சார்ந்தே இருந்துவருகிறது. Social structure சார்ந்த அரசியலுக்கெல்லாம் இங்கு வழியுண்டா என்று தெரியவில்லை. எங்கு சுற்றினாலும் கடைசியில் ஊழல் (உங்கள் ஆட்சியில் ஊழல் - போன ஆட்சியை விடவா - அதற்கு முன்னால் இருந்ததை விடவா - அதற்கு முன்னாடி நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியாதா...) - தமிழ்/திராவிடம் - தமிழர்கள்...இந்த பாய்ன்ட்களில் வந்துதான் இவர்கள் அரசியல் நிற்கும். நீங்கள் என்ன காரணம் வேண்டுமென்றாலும் சொல்லலாம்...இந்த ஆட்சியில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என்று புள்ளி விவரங்கள் தரலாம். அந்த pdfயையே என் கேள்வியாகத் தருகிறேன். இதற்கு தகுந்த விளக்கம் கொடுக்க முடிந்தால், என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். Word..
ஆனால் இந்தப் பையனுக்கு என்னைப்போல் அப்பாவுடன் சுற்றியவைகளில் சில, நினைவில் நிற்காமல், அடியோடு மறந்து போனால் நல்லது என்று நினைக்கிறேன். சின்னப் பையன் என்பதால் பெரிதாக எதுவும் இவனுக்குத் தெரியவில்லை (இந்த வீடியோ எடுத்தது 2012ல். இந்நேரம் வளந்திருப்பான்). ஸ்ரீலாங்கா, சிரியாவில் - கொத்து கொத்தாக நடந்ததை....நாம் தவணை முறையில் வேறுவிதமாக செய்து கொண்டிருக்கிறோம்.
Must Read:
1) In Modi's Swachh Bharat, manual scavenging is now a career option
Must Read:
1) In Modi's Swachh Bharat, manual scavenging is now a career option