Thursday, January 16, 2014

பறவைகள் பலவிதம்: தினகரன் தொடர்

கடந்த ரெண்டு மாசமா அடிக்கடி ரெண்டு ரீபீடட் கனவுகள் வந்து "ஞே" முழிக்க வெச்சது. ஒண்ணு, என்னைவிட ஆறேமுக்கால் வயது குறைவான, ஒண்ணே கால் வயதுடைய - பி ப ஒருவரின் - கொழந்தைக்கு (இதுவொரு குறியீடு...பெரிய ஆளுங்க கிட்ட சொன்னா என் சாயம் வெளுத்துரும்ல) எப்பிடி போட்டோ எடுக்குறதுனு ரொம்ப பொறுமையா சொல்லிக் குடுக்கிறேன். இதுவொரு ரெண்டு மூணு தடவ வந்திருச்சு. ரெண்டாவது தான் அதகளம்.....பறவைகள் பத்தின கனவு.....அதன் துல்லியம் தான் ரொம்ப புடிச்சது. ஒரு White rumped Vulture அப்பிடியே அலேக்காக கொட்டாங்குச்சி மாதிரியான என் மண்டையைக் கொத்தி....தூக்கிகினு பறக்குது.....பறக்குது....ப...ற....க்....கு..து. என்ன நெனச்சுதோ...படார்னு ஒரு கெணத்துக்குள்ள தூக்கி வீசிறுது. எனக்கோ நீச்சல் தெரியாது (Centre of Buoyancy எல்லாம் பரிட்சயமான ஆள் என்பதால்....அத்தனை நேரம் தண்ணிய உள்ள முழுங்காம இருந்திருக்கக் கூடும் என்று யூகிக்கிறேன்). இப்படியே போய்கிட்டு இருக்கும் போது..தீடீர்னு ஒரு ராட்சஸ Spot-billed duck (புள்ளி மூக்கு வாத்து).....அப்பிடியே தூக்கி..என்னை பத்திரமாக கரையேற்றி விடுகிறது. Batman Returnsல பெங்க்வின் காட்சி ஞாபகம் இருக்கா...கிட்டத்தட்ட அப்படிதான் நடந்தது. இந்த டைப்ல தொடர்சியா ரெண்டு மூணு தடவ இப்படியான வந்திருச்சு. 28 வயசுல (இன்னும் ரெண்டு மாசத்தில் 29) இப்பிடித்தான் பல கனவு வருது. ராட்சஸ ஓணான்களில் ஆரம்பிச்சு தினுசு தினுசா வரும். என்ன எழவோ. இதுல என்ன ஸ்பெஷாலிட்டி என்றால்,White rumped Vultureரை பாத்தது கூட இல்ல. ஒருவேள சில மாதங்கள் முன்ன படிச்ச இந்த நியுஸ்ன் தாக்கமாக இருக்கலாம். புள்ளி மூக்கு வாத்தின்,  மஞ்சள் அலகு + அதுக்கு கொஞ்சம் மேல, சிவப்பு + ஆரஞ்சு நிறம் அத்தனையும் அட்டகாசமான துல்லியத்தோடு தெரிஞ்சது மட்டும் நல்லா நினைவிருக்கு (REM Phase). ஏற்கனவே பறவைகள் தொடர்பா எதனா பங்களிப்பு செய்யணும்னு பொச முட்டிகினு இருந்த சமயத்தில......இப்பிடி தொடர்ந்து கனவுகள்.

அதாகப்பட்டது, கருந்தேள்+பாலாவின் War of the Rings புத்தகம் வெளிவந்த சமயத்தில் கே.என்.சிவராமன் கொஞ்சம் பழக்கம். அதுவும் ஒண்ணு ரெண்டு மெயில் மூலமாகத்தான். பின்னாடி தான் அவர் தினகரன் பத்திரிக்கைகளின் எடிட்டர்னு தெரியவந்தது. அவர் வந்தபிறகு, தினகரன் வெள்ளி மலர் முதல் பலதிலும் நெறய நல்ல மாற்றங்களை கொண்டுவந்தது பத்தி இணையத்தில் இருக்கும் பலருக்கும் தெரியும். நெறய பிரபல பதிவர்களை பத்திரிக்கைக்குள்ள இழுத்துப் போட்டத்தில் அவருக்கு பெரிய பங்குண்டு. கொஞ்சம் புதிய முயற்சிகளுக்கு அவர் எதுனா செய்வார்...என்றே ஒரே அடிப்படையில் ஒரு மெயில தட்டி விட்டேன்.

இந்தமாறி....நவம்பர் முதல் தமிழ்நாட்டுக்கு பல பறவைகள் வலசை வரும். இந்த சமயத்தில் பறவைகள் பத்தி, குறைஞ்சது ஒரு அரை பக்கத்துக்காவது எதுனா உங்க பத்திரிக்கையில் வந்தால்....மிகப்பெரிய விஷயமா இருக்கும். அநேகபேர் பொத்தாம்பொதுவா சைஸ் சின்னதா இருந்தா குருவி, மீடியாம மூக்கு கூர்மையா இருந்தா  கழுகு என்ற ரேஞ்சுலய பறவைகள் பத்தி தெரிஞ்சுவெச்சுருக்காங்க. நெறய பேருக்கு இதுலலாம் ஆர்வம் இருந்தாலும், வாழ்க்கைய ஓட்ட வேண்டிய கட்டாயம் + நடைமுறை சிக்கல்கள் காரணமா இதுகுறித்த தெரிஞ்சுக்காம இருப்பாங்க. அப்பிடியான ஆட்களுக்கு இப்பிடியான கட்டுரைகள், நெறய பேர் படிக்கும் ஒரு பத்திரிகையில் வந்தால்...நிச்சயம் சில நூறு பேராவது கவனிப்பாங்க; குறிப்பா கொழந்தைங்க கிட்ட எளிதா அவர்களது பெற்றோர் மூலமா போய் சேரும்...

இவ்ளோதான் அந்த Fb மெசேஜ்ல சொன்னது. இதுமட்டும் தான் என் நோக்கம். கூடவே தியோடர் பாஸ்கரன், ச.முகமது அலி, வி.சாந்தாராம் போன்ற ஆட்கள் உங்களுக்கு பரிச்சயம் இருக்கும்பட்சத்தில் அவர்கள்ட்ட பேசி பாருங்கன்னு வேற கேட்டிருந்தேன். ஆனா அவர் என்னயவே எழுதச் சொன்னார். சத்தியமா எனக்கு இதுல பயங்கர தயக்கம் இருந்தது உண்மை. திறமை சார்ந்தோ, விஷயம் சார்ந்த தயக்கம் இல்ல - என்ன எழுதப் போறோம், என்னென்ன பறவைகள் என்பதில் ரொம்ப தெளிவா இருக்கேன் - வேற சில தயக்கம். நீட்டி முழக்கி எழுதி, ஆர்வம் உள்ளவங்களையும் கெடுத்திர கூடாதே என்ற தயக்கம். ஆனாலும் சிவராமன் நல்லா வரும்; எழுதங்கனு சொல்லிட்டார். வழக்கம்போல, ராஜேஷ் (இவரது தளத்தை இங்கே படிக்கலாம். நல்லா எழுதுவாப்ல) & பாலா (இவரது தளத்தை இங்கே அமுக்கி படிக்கலாம். ரிட்டையர் ஆயிட்டார். வயசானாலும் வீரியம் குறையாம அவ்வப்போது எதுனா எழுதி வருகிறார்) யோசனைகளை கேட்டேன். பல - பெர்சனல் விஷயங்கள் உட்பட - மேட்டர்களுக்கு இவர்களிடம் நான்(னே) ஆலோசனை கேட்பது உண்டு. எல்லாரும் நல்லபடியா உசுப்பி விட்டதன் விளைவு.....

சினிமா சம்பந்தாமன நியுஸ் எதுனா அந்த இடத்தில போட்டிரலாம். இன்னும் பலபேர் அத விரும்பி படிப்பாங்க. ஆனா, சூழலியல் தொடர்பான இதுபோன்ற விஷயத்துக்கு ஒரு பக்கத்தை ஒதுக்குவது...இன்னும் என்னால நம்பமுடியல. நெஜாமவே இதுபெரிய விஷயம். முன்னாடி, சிறுவர்மலரோ சிறுவர்மணியோ பறவைகள் பத்தி வாராவாரம் பத்திகள் வந்த ஞாபகம். ஆனா அது பெரும்பாலும் நாம பாத்திரத பறவைகள் பத்தின பத்திகள் என்றும் ஞாபகம் (என்ட அந்த கட்டிங்க்ஸ் இருக்கு. அடுத்த தடவ ஊருக்கு போகும்போது பாக்கணும்). இந்தத் தொடரின் நோக்கம் மிகமிக எளிமையானது. அத முதல் வார பத்திலயே படிச்சு தெரிஞ்சுக்கலாம். ஆயிரக்கணக்கான பேர் படிக்கிறதுல நூறு பேருக்காவது இதுல ஆர்வம் வந்து....சூழலியல் சார்ந்த கவனிப்பை அது உருவாக்காதா என்ற நப்பாசை தான் காரணம். வேற யார் எழுதியிருந்தாலும் இதே அளவுக்கான எக்சைட்மென்ட் நிச்சயம் என்ட இருக்கும். சிவராமனுக்கு பெரிய நன்றிகள். வார்த்தைக்காக சொல்ல. நிச்சயம் அவர் ஆரம்பிச்சிருக்குறது பெரிய விஷயம்.

படிச்சு பாருங்க. எதுனா சேர்க்கலாம், இம்ப்ரூவ் பண்ணலாம்னு தோணுச்சுனா அப்பப்ப சொல்லுங்க. பல Fb நண்பர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

Facebookers..

No comments :