Friday, February 15, 2013

Revisiting Rahman


Unconventional in every sense. சரணம் பல்லவி இத்யாதிகள் என்று வரையறுக்கவே முடியாத ஒரு பாடல். அதுவும் ஓபனிங்.....படீரென்று பெருமழை மாதிரி ஆரம்பிக்கும். ஒரு அறிகுறியும் இருக்காது. சரி......பாடல் செல்லச் செல்ல டெம்போ மாறும்.....வழக்கமான, நமக்கு பரிச்சயமான ஒரு வடிவுக்குள் வரும் என்று எதிர்பார்த்தல்.......திடீரென்று சில நொடிகளுக்கு ஒலிக்கும்  ஸின்த், நடுநடுவே உலவும் மெல்லிய கீபோர்ட் நோட். திரும்ப பழைய முறைக்கு தி....ரு....ம்....பு....ம் என்று நினைக்கும் இடத்தில், குரலின் பிட்ச் மாறும்....அதனைத் தொடர்ந்து தான் ப்யூர் மேஜிக் -  மிகச் சரியாக  3:40 - 3:45 வரை கேக்கும் அந்த ட்ரம் பீட் போன்றதொரு ஸின்த் இசை. இப்படியாக போய் கொண்டிருக்கையில், 5:24ல் ஒலிக்கும் கடம்.....பாடல் முடியப் போகும்போது முற்றிலும் வேறு ஸ்கேலில் முடியும். இதற்கு மேல் இதைப் பற்றிப் பேசவே சங்கோஜமாக உள்ளது. அதைக் கேட்பதே மிகச் சிறந்த வழி.

ரங்கீலா - 1995. ரஹ்மானின் முதல் ஹிந்தி பிரவேசம் என்று நினைத்திருப்போம். ஆனால் அதற்கு முன்னரே, 94களின் போதே, புகழ் பெற்ற இயக்குனர் கோவிந்த் நிஹ்லாணி த்ரோகால்(Drokal) என்ற படத்திற்காக ரஹ்மானை ஒப்பந்தம் செய்துவிட்டார். ரஹ்மானும் படத்திற்கான பாடல்களையும் சிலபல பின்னணி இசை வேலைகளும் முடித்திருந்தார். ஆனால், அவரது சிஸ்டம் க்ராஷ் ஆனபடியால் அனைத்தும் அழிந்து போய்விட்டது. கடைசியில் அந்தப் படமே ட்ராப் ஆனது. பின்னாளில் அதே தலைப்பில் மற்றொரு படத்தை அவர் இயக்கினர். அதுதான் தமிழில் - குருதிப்புனல். சுபாஷ் கய்ம் ரஹ்மானுடன் 93லிலேயே பணியாற்ற வேண்டியது. ஆனால் அந்தப் படமும் ட்ராப் ஆனது. ஆக, ரங்கீலாவே ரஹ்மானின் முதல் ஹிந்திப் பிரவேசமாக அமைந்தது.


ஜம்ப் கட்: 2012. ராக்ஸ்டார். Phir se ud chala. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் அவர் செய்ததன் நீட்சி என்று இதனைச் சொல்லலாம். பாடல் ஆரம்பிக்கும் விதமாகட்டும்....டெம்போவாகட்டும்.....பின்னாடி சற்றே மாறும் வடிவம் என்று, இன்னவகைதான் என்று கூறவே முடியாத ஒரு ஸ்ட்ரக்சர். நான் பாடலை முதலில் கேக்கும் போது, சரி இந்த இடத்தில் வழமையான வடிவத்திற்கு வரும் என்று யோசித்து யோசித்து.....பாடல் முடிந்தே விட்டது. இந்த மேஜிக் பிடிபட கொஞ்ச நேரம் ஆனது.
Source: rahmaniac.wordpress.com

ரஹ்மானின் பல பாடல்கள் இதுபோல சரணம் பல்லவி அதுஇது என்று கட்டுப்பாடுகள் அற்றது. ராகம் போன்ற ஒரு கட்டமைப்புகள் பலவித புதுமைகள் செய்வது ஒருபுறம் என்றால் புதிதாக ஒரு வடிவத்தையே நடைமுறைபடுத்துவது இன்னொரு வகை. பழைய காலத்து ஆசாமிகளில் சிலபேருக்கு இது புரியவே புரியாது. ஒரு ராணுவ ஒழுங்குடன் கூடிய, பல்லவி சரணம் ராகங்களின் அடிப்படையில் பாடல்களை அமைப்பது அல்லது வெஸ்டர்ன் க்ளாசிகல், இதுபோன்ற அடிப்படைகளின் வழியே உருவாவதயே "திரைப்பட இசை' என்று நம்பும் ஆட்கள். அவர்கள் ரஹ்மானின் இதுபோன்ற பாடல்களை குப்பை என்று சொல்லாவிட்டால் தான் ஆச்சரியமே.


ரஹ்மானைப் பற்றி சீரியசாக பேசும் அல்லது விவாதிக்கும் பலரும் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை, Layering. டக்கென்று தோன்றும் ஒரு உதாரணம் - இந்தப் பாடல். இதில் ஆரம்பித்தில் வயலின் ஒரு ஸ்கேலில் ஒலிக்கும், ஸின்த் இசை ஒரு லேயராக ஆரம்பிக்கும், டெக்னோ இரண்டு ஸ்பீக்கர்களுக்கும் மாறிமாறி சென்று வர ஆரம்பிக்கும், "ஹே ஹே " என்ற ஓசை வேறு - ரஹ்மான் குரல்களையே லேயர்களாக பயன்படுத்துவதில் மாஸ்டர் - அவ்வப்போது கேக்கும்..... திரும்ப வயலின், ஆனால் இந்தமுறை முற்றிலும் வேறு ஸ்கேலில் ஆரம்பிக்கும்.....இதுவொரு மிகச்சிறிய உதாரணம். முதல் தடவை ரஹ்மானின் இசை பிடிபடாது....போகப்போகத் தான் பிடிக்கும் என்று பலரும் சொல்லக் காரணம், இதுதான். போனமுறை கேக்கும் போது இதை கவனிக்கவில்லையே என்று நாம் பல லேயர்களை தவறவிட்டு பின்னாட்களில் ரசித்திருப்போம். இதுவொன்றும் சாதாரண வேலை அல்ல. ஆரம்பகாலங்களில் ஒற்றை ஆளாக ரஹ்மான் இந்த வேலையைச் செய்திருக்கிறார்( ஒலிப்பதிவாளர் - ஹெச்.ஸ்ரீதரின் பங்கு இதில் மிக முக்கியமானது). இப்படித்தான் வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் திருப்தியாக வரும்வரை விடாமல் லேயர் ஸ்ட்ரக்சர்களை மாற்றிக் கொண்டிருப்பாராம். அப்படியும், கேசட் தயாராகப் போகும் வரை சின்னச்சின்ன விஷயங்களை விடாமல் செய்துகொண்டே இருப்பாராம்.
With Rahman. I learnt something new. Before I worked with him, I recorded with 100-125 musicians. When I sat down with Rahman, I looked for the musicians but there seemed to be none around. He just switched on his keyboard and started playing notes, adding the rhythm as he went along. Rahman has a new way of thinking. He is a singer, a lyricist, a composer, an orchestra conductor, an arranger, and a sound engineer. Except for the lyrics he does everything else in a song.

- Subash Ghai

இதுபோன்றே பிடித்த இன்னொரு இசைக் கோர்ப்பு, புதிய மனிதா - எந்திரனில் இருந்து. இந்தப் பாடலை இசை இல்லாமல் வெறும் எஸ்பிபியின் குரலை மட்டும் வைத்துக் கேட்டாலும் ஒரு உற்சாகத்தை ஆர்வத்தை உணரலாம். சிட்டி - மே மே என்று கத்தும் ஆட்டின் இசை இதில் வருவதை எத்தனை பேர் கவனித்தீர்கள்...பின்னணியில் வயலின்களின் சங்கமம் வேறு அட்டகாசம் போங்கள்.


Jhootha hai sahiயில் வரும், இதுவும் அதேபோன்ற வயலின் + டெக்னோ உள்ள பாடல். ஒருமாதிரியான புதிர்த்தன்மை நிறைந்த பாடலாக எனக்குத் தோன்றும். ஏன் பிடிக்கும் என்றெல்லாம் தெரியாது. சைக்கிள் பெல், வளையல் வரிசையில் - செல்போன் போடும் கீபேட் சத்தம் உட்பட அனைத்தையும் இசையாக மாற்றியிருப்பார்.


குரல்களையே லேயர்களாக மாற்றுவார் என்று டைப்படித்துக் கொண்டிருக்கும் போது, இந்தப் பாடலை எப்படி சொல்லாமல் விடுவதா என்று ஞாபகம் வந்தது. மிகச் சரியாக 0.06 நொடியில் கேட்கும் "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்பதாகட்டும், பாடலின் ஆரம்பத்தில் வரும் "ஜும்ஜூகுஜும்ஜூகு" - அதென்ன வார்த்தை என்று இன்றுவரை என்னால் கண்டறிய முடியவில்லை - என்பதாகட்டும்,  ஹரிஹரனின் 'பபபபப்பப்ப ....சகமகப்" போன்ற வார்த்தை தெளிப்புகள், அந்த "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்' பல்வேறு வடிவங்களில் பாடல் முழுவதும் விளையாடுவதாகட்டும், கடைசி கட்டத்தில் ரஹ்மானே பாடம் அந்தப் பகுதி, கர்னாடக ஜதி சொல்லும் லேயேர், உதித் நாராயணனின் குரல் என்று குரல்களில் மட்டும் ஒரு ஏழு லேயர்களை சொல்லலாம். தவிர, பாடல் முழுவதும் ஹரிஹரனின் குரல் இரண்டு ஸ்கேலில் தான் கேட்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் மிகுந்த உற்சாகத்தை (எனக்குத்) தரத் தவறுவதில்லை.

90களில், இதுபோன்ற வெவ்வேறு இசைக் கருவிகளின் சங்கமமாக இருந்த அவரின் இசைக் கோர்ப்பு 2000த்திற்கு பிறகு மாறுதலடைந்து வெவ்வேறு இசை வடிவங்களின் amalgamation என்று மாறியது. ஏலே கீச்சான் - சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம்: கன்ட்ரி இசை + ரெகே + ஆப்ரிக்க + நமது நாட்டுபுற இசையினுடைய குரல் வடிவம். பலபேர் 90களின் ரஹ்மான் என்ற பதத்தை பயன்படுத்துவது இதனால்தான் என்று தோன்றுகிறது.
Facebookers..

4 comments :

  1. திருடா திருடா படத்தில் வரும் ராசாத்தி பாடல் குறித்தும் விமர்சிக்கவும்

    ReplyDelete
  2. Mayya Mayya Song from Guru. Its layers are superb,
    Puthu vellai mazhai song - the glass broken sound. So many songs there. I love rahman's musiq ever and ever

    ReplyDelete
  3. கொழந்தMarch 16, 2013 at 1:26 AM

    நிச்சயமா.....ஒருநாள் செய்வோம்

    ReplyDelete
  4. கொழந்தMarch 16, 2013 at 1:27 AM

    எஸ்.....ரெண்டும் அருமையான பாடல்கள்

    ReplyDelete