The sun had come out
The temperature had dropped
a whirlwind kicked up
just as a cry shot forth from the heart

ரோஜா படம் வெளியானபொழுது எனக்கு ஆறு வயது. அதனால் அந்தப் படத்தின் இசை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஒளிப்பதிவு நினைவில் உள்ளது. பாடல்கள் கேட்க அருமையாக இருந்தது. அவ்வளவே தான் ஞாபகம் உள்ளது. அதேபோன்று தான், அதற்கடுத்த ஆண்டில் வெளிவந்த திருடா திருடா. ஒளிப்பதிவும் - அதிரடியான இசையும் ஞாபகம் உள்ளது. ஊன்றிக் கேட்கும் பழக்கம் எல்லாம் இல்லாத வயது (ஆறு ஏழு  வயதிலயே அவ்வாறு கேட்கும் அளவிற்கெல்லாம் - மணிரத்னம் படங்களில் வரும் "சிறுவர்கள்" தவிர்த்து - யாராவது சிறுவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே). 1998. ஏதோ ஒரு விடுமுறை தினம் என்று நினைக்கிறேன். இருங்கள், விக்கியைப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது......எஸ்....இந்தியாவின் சுதந்திரதினம். அதுவும் ஐம்பதாவது பொன்விழா கொண்டாட்டம். DDயில் சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சியில், ஒரு படம் குறித்து அதன் இயக்குனர், வசனகர்த்தா, நடிகர்( திக்கித்திணறிய தமிழில் ஒரு ஹிந்தி நடிகர்) என்று அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக சவ்ண்ட் இஞ்சினியர் ஒருவரும் பேசினார்.    H.ஸ்ரீதர். ஒரு பாடலைச் சொல்லி, கண்ணை மூடிக் கேட்டால் அப்படியே ரயிலில் பிரயாணம் செய்வதைப் போன்றதொரு உணர்வைத் தரும் என்று சிலாகித்துக்கொண்டிருந்தார். என்ன பாடல் என்று சொல்லத்தான் வேண்டுமா ?


படமும் வெளியானது. எனது இசை கேட்கும் வழக்கத்தையே முற்றிலுமாக மாற்றி அமைத்த படமாக அந்தப் படம் அமைந்தது. 13 வயது என்பதால் ஓரளவிற்கு(அட...அதைவிட இது நல்லாயிருக்கே....என்று யோசிக்கும்) அறிவுதான் அப்பொழுது இருந்தது என்றாலும், அன்று கேட்கத் தொடங்கிய வெவ்வேறு வகையான பாடல்கள் இன்றளவும் எனக்கு சலிப்பைத் தருவதில்லை. ரஹ்மான் இசையில் லேயர்ஸ், orchestration - என்பதெல்லாம் மிகமிக நுணுக்கமாக தனித்துவமாக கையாளப்படுகிறது. உயிரே படத்தில், என்னுயிரே பாடலில் இந்த இடத்தில வரும் இசை, என்ன கருவி என்று தெரியவில்லை.....அப்படியே தூண்டில் மாதிரி என்னை இழுத்துக்கொண்டே இருந்தது. மேலும், இந்தப் பாடலில் ஆரம்பத்திலிருந்து கிடார் மூன்றுவித ஸ்கேலில் - மூன்று வெவ்வேறு லேயர்களில் ஒலிப்பதைக் கேட்கலாம். சரியாக சொல்ல அளவிற்கு டெக்னிகல் அறிவு கிடையாது. நீங்கள் கேட்பதே நலம்.

தைய தையா, என்னுயிரே இந்து ரெண்டு பாடல்களையும் விட மிகமிக - ஏனென்றே தெரியாமல் - வெறித்தனமாக பிடித்த இன்னொரு பாடல் - சந்தோஷக்  கண்ணீரே.....  முதன்முறையாக அந்தப் பாடலைக் கேட்கும் போது இருந்த இனம்புரியாத சந்தோசத்திற்கு ஈடுயிணை எதுவும் இல்லை. ஒருசில ஆண்டுகள் முன்னர், அந்தப் படப்பாடல்களின் பின்னணி குறித்து - சுஃபி வகையான இசை என்ற அளவில் மட்டுமே தெரிந்திருந்து. ஹிந்தியில் பலமுறை கேட்டிருக்கிறேன். வார்த்தைகளில் ஒரு லாவகம் இருந்தது என்று மட்டும் உரைத்தது. சென்ற வருடம். NDTVயின் ரஹ்மானுடனான பேட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் தெரிந்துகொண்ட பல விஷயங்களில் தில் சே பாடல்களைப் பற்றிய விஷயங்களும் அடங்கும். அந்தப் பாடல்களுக்கு வேறொரு பரிமாணத்தை என்னுள் இந்த இன்டர்வியு உண்டாக்கியது.

NDTV: So you said you were there and Dil Se, how did it happen?

AR Rahman: So Dil Se would be probably me at that zone and very much in the UK. Going and coming back. So the brief was very funny. Just gave me the seven stages of love.

NDTV: Arey waah!

AR Rahman: It's attraction, its lust and finally it's death.

NDTV: Why is this?

AR Rahman: Forgot all of the stages. I mean I never told you a story...

NDTV: Which stage were you at that time?

AR Rahman: I was in the last stage.

NDTV: So, let us see how did it happen?

AR Rahman: I think that one song we did. Satrangi Re, probably the culmination of everything. That song has got seven-stage thing.

NDTV: But in actual Dil Se was a big hit!

AR Rahman: Yeah. I think Dil Se had great lyrics, you get to sing, we all sing.

NDTV: Now, you are being very modest. Let us hear this song. And they will decide which is beautiful...

NDTV: What do you think when you played now?

AR Rahman: I think it's a very meditative. It has got two outburst of anger. I would say anger but angst in it. And it has got opposite of that. If you can code this together, the mantra is like explosion of anger and the initial was very meditative. It takes you to the zone of, it's very typical Mani.

NDTV: Yeah, but how did you vibe everything so well, that you got thing?

AR Rahman: I am a big fan. I am still a fan...

NDTV: And vice versa of course. What he says about you. I mean I am no one to say, but you are a good human being, on top of being a good talent, all great people tend to be that, I think yeah. But tell me you have a fun side also, Chahiya Chahiya where did that come from?

AR Rahman: It's a long story.

NDTV: I would love to hear that because it's like the left half of you?

AR Rahman: Ah, I think, when you discover an artist like Sukhwinder, who is amazing, so in the process of discovering as an artist and a lyrics writer and all that stuff, when I was doing Vande Maatram, we jammed together once. I said, okay let's start with something of Babe Bulleh Shah, you know his poetry, because I am a big fan of Nusrat and his music. I said why don't you, you are from Punjab, let's take some poetry, so this is a poetry of Baba Bulleh Shah, so I put a grew and we started jamming and so, ah, it was called Thaiya Thaiya first and it didn't fit into the album of course of Vande Matram. So, I said let's not give it all away, it was there lying for an year and then money came and I said that's my song and I am doing an expo, so we had this great idea, so I wanted to do it on sort of a train, and I wanted Shah Rukh to dance on the train and of course Gulzar Sahib came with Chahiya Chahiya. It changed and because it changed it became more phonetic, interesting quality about it and has this beautiful thought in it and Sukhi sang it and he landed.

-------------------------------

இந்தப் பாடலைப் பற்றி மேலிருப்பதைப் போன்ற பதிவைத்தான் எழுதுவதாக சிலபல மாதங்கள் முன்புவரை முடிவில் இருந்தேன். "Jab tak hai jaan"  என்ற படத்தின் "Challa" என்ற பாடல் வெளியானது. ராபி ஷெர்கில் பாடிய - Bhulla ki jaana maen kaun - பாடலின் மிகப் பெரிய ரசிகன். அதபோன்றதொரு ஸ்டைலில் இந்தப்பாடல் இருந்ததனால், தத்துவரீதியிலான அர்த்தம் என்னவென்று தெரிந்துகொள்ள, பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை நெட்டில் தேடிக்கொண்டிருந்தேன். பொதுவாக, Ignorance is a bliss என்பதில் முழு நம்பிக்கை உடையவன். குழந்தைகள் ஏன் சிரிக்கிறார்கள் என்று அதன் காரணத்தைத் தேடத் தொடங்கினால், அதன் அழகை ரசிக்க முடியாததைப் போன்று.....பாடல் வரிகளுக்கு சரிவர அர்த்தம் தெரியாமல் கேட்பதிலும் ஒரு அலாதி சுகம் இருக்கவே செய்கிறது. இருந்தாலும், என்னதான் இந்தப் பாடலுக்கு அர்த்தம் என்று பார்த்துவிடுவது என்று வலைப் பக்கத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாடலுக்கு பக்கத்திலயே - Dil se re English translation என்று இருந்தது. ஒரு ஆர்வத்தில் என்னதான் அர்த்தம் என்று பார்ப்போமே என்று க்ளிக் செய்ய......

உண்மையாகச் சொல்கிறேன். Maglev ரயில்கள் ஓடும்பொழுது தண்டவாளத்தில்படாமல் அந்தரத்தில் மிதப்பதைப் போன்றதொரு தோற்றம் இருக்குமே, அப்படியான ஒரு நிலையிலயே சில நிமிடங்கள் இருந்தேன்.  அதுவரை ரசித்துவந்த அந்தப் பாடலின் தமிழ் வரிகள் ஒன்றுமேயில்லை என்று தோன்றியது. (முடிந்தால் அந்தப் பாடலை இங்கே கேட்டுக் கொண்டே கீழ்வரும் பத்திகளை படியுங்கள்)

The sun had come out
The temperature had dropped
a whirlwind kicked up
just as a cry shot forth from the heart

Two autumn leaves fell from the trees, from the tree branches they fell.
Then seasons passed,
and those two poor leaves,
in their desire to sprout, passed over the desert.

Those leaves were our hearts…they were our hearts…
If you have a heart, you’ll know pain in your lifetime,
and if pain is there, there has to be a heart too.
The seasons keep passing.....through my heart.

இதைப்பற்றி இந்த பதிவில் சொல்லியாக வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டு, இணையத்தில் "தில்சே ரே" என்று தமிழில் டைப் அடித்துப் பார்த்தேன். இதுகுறித்து வேறு தகவல்கள் இருக்கின்றனவா, வேறு யாரேனும் இந்தக் கோணத்தில் எழுதியிருகிறார்களா என்று தேட, கூகிள் என்னை கீழ்க்கண்ட பதிவுகளுக்கு ஈட்டுச் சென்றது. உளமாரக் கூறுகிறேன், இந்தப் பதிவுகள் தான் இப்பட பாடல்கள் குறித்தும் வேறு சில விஷயங்கள் குறித்தும் தெளிவாக எனக்குப் புரிய வைத்தது.
எதற்கெடுத்தாலும் 2000க்கு முன்பு தான் ரஹ்மானின் இசை அருமை, அற்புதம். அதற்குபிறகு ஒன்றுமேயில்லை (அப்படி ஏகடியம் பேசுபவர்களில் 99.99 % பேர் தமிழ் தவிர அவர் இசையமைத்த எதையும் கேட்டதில்லை என்பதை நானே பார்த்திருகிறேன்) இந்த பதிவுகளை படிக்க வேண்டுகிறேன். ஆனால், இந்தப் பதிவில் சொல்லியிருக்கும் சுஃபி தாக்கத்தோடு, நல்ல படங்கள், ஷ்யாம் பெனகல் மாதிரியான இயக்குனர்கள், எம்.எப்.ஹுசைன் மாதிரியான கலைஞர்கள் போன்றவர்களோடு எல்லாம் பணியாற்றும் சந்தர்ப்பம், பாடல் வரிகள், மார்கெட், புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்ப்பதற்கு உரிய களம் என்று காரணிகளும் சேர்ந்தே அவரை ஹிந்தியில் அதிகமாக இசையமைக்க வைத்ததாக எனக்குப்படுகிறது.

மேலே இருக்கும் பதிவின் வாயிலாக நான் தெரிந்துகொண்ட மிகமிக முக்கியமானதொரு விஷயம்.........

இந்தப் பாடல் இடம்பெற்ற ’தில் சே’ பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன ஒரு குறிப்பு முக்கியமானது. அதில் உள்ள பாடல்கள் அனைத்தும் திரைப்படத்திற்கு என்று உருவாக்கப்பட்டவை அல்ல. தனியான சூஃபி ஆல்பமாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை. எனவே அவற்றின் இசையில் சூஃபி மரபிசைக் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்தியிருந்தார். பின்னால் அவை திரைப்படத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேற்கத்திய வாத்திய இசைகளை அவற்றுடன் இணைக்க வேண்டி ஆயிற்று.


இந்த வார்த்தைகளையும் மேல ரஹ்மானின் NDTV இன்டர்வியுவையும் படித்துப் பாருங்கள். ச்சையா ச்சையா பாடலை எடுத்துக் கொள்வோம். எப்படியானதொரு ரகளையான இசை. ஆனால் அது ஒரு சுஃபி பாடல் என்றால் நம்ப முடிகிறதா ? வரிகளைப் பாருங்கள்....

எவரின் தலை மீது காதலின் நிழல் உள்ளதோ
அவரின் பாதத்தின் கீழ் சொர்க்கம் ஆகிவிடும்
எல்லோரும் இந்த நிழலில் செல்லுங்கள்
பாதங்கள் சொர்க்கத்திற்கு செல்லட்டும்


மிகமிக முக்கியமானதொரு பாடல், என்னுயிரே (அ) சத்ரங்கி ரே. பாடல் மட்டுமல்லாமல் படத்திற்குமான அடிப்படை அந்த ஏழு நிலைகள் தான்.
  1. Hub(attraction - ஈர்ப்பு) 
  2. Uns (infatuation - கவர்ச்சி) 
  3. Ishq (love - காதல்) 
  4. Aqidat (reverence - பக்தி) 
  5. Ibaadat(worship - வழிபாடு) 
  6. Junoon (passion - பித்து)
  7. Maut (death - மரணம்)
முடிவாக, DIL SE - a journey through these seven shades (Source). இதுபற்றி தான் மேலிருக்கும் பேட்டியில் ரஹ்மான் "I was in the last stage" என்று கூறியிருப்பதைக் கவனிக்க.

படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் இந்த நிலைகளையும் காட்சிகளையும் தொடர்புபடுத்துவதில் சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன். நுனிப்புல் மேய்ச்சல் போன்ற தெளிவில்லாத அரசியல் பார்வையை வலிய திணித்தற்கு  பதில், இந்த நிலைகளை வைத்தே அற்புதமானதொரு படத்தை மணிரத்னம் கொடுத்திருக்காலாம். விட்டுவிட்டார். இந்தப் பாடல் குறித்து மிக விரிவாக இந்தப் பதிவில்அலசப்பட்டுள்ளது. அதில் இவர் குறிபிட்டுள்ள ரூமி குறித்தும் நான் தெரிந்துகொள்ள ரஹ்மானின் இசை தான் காரணம்.  The meeting place - Rockstar. Again, ராக்ஸ்டார் படப்பாடல்களும் முழுக்க முழுக்க melancholyயான சுஃபி தன்மையுடைய பாடல்கள்.

 Do You Know
 Away From Here
Out beyond ideas of wrongdoing and rightdoing
there is a field.
I will meet you there

-  Mewlana Jalaluddin Rumi

இதைக் கேட்டதில் இருந்து ரூமியைப் பற்றி தெரிந்துகொள்ளும் முயற்சியில் இருக்கிறேன். என்ன மாதிரியான வார்த்தைகள்.......அதுவும் காதலைக் குறித்து ஏராளமான அற்புதங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார் (ரூமியைப் பற்றி மேலதிகமாக வேறொன்றும் தெரியாமல் ஜல்லியடிக்க விருப்பமில்லை. சில வாரங்களாகத்தான் படித்தக் கொண்டிருக்க்ரியேன்). ஜோதா அக்பரில் - க்வாஜா மேரே க்வாஜா பாடலில், வெள்ளை உடையில் அனைவரும் சுற்றுவார்களே(அதன் அர்த்தம் இதன் மூலமாகத்தான் தெரிந்தது).... அதுகுறித்தும் ரூமி குறித்தும் ஓஷோ கீழ்கண்டவாறு கூறுகிறார்.
You must have seen small children -- they like to whirl; and everybody stops them, because the fear of the parents is that the child may fall, may have a fracture, may get hurt. But in spite of all prohibitions, children love to whirl. And nobody has inquired why children love, all over the world, irrespective of race, nation, religion, why children love to whirl.

Jalaluddin Rumi, seeing children whirl, thought that there must be something that the children feel but they cannot express, and perhaps they are not fully aware what it is. So he tried whirling himself, and he was amazed that if you go on whirling there comes a moment when the center of your being remains static and your whole body, mind, brain, everything, whirls.

And that center which does not whirl, is you, the center of the cyclone. The whirling is almost like a cyclone, but exactly in the middle of the cyclone you will find a point which has not moved at all. Every wheel needs a center on which to turn, and the center has to remain unturning. You see in bicycles, in bullock carts, wherever there is a wheel, there is something in the center which is unmoving.


Once Jalaluddin became aware that you can find the unmoving center of your being, he tried for thirty-six hours non-stop, without eating, without drinking -- he was determined to whirl to his absolute capacity, not to hold back anything... unless he falls, he is not going to stop. Thirty-six hours he whirled, a great crowd watched. The crowd went on changing; people had to go to eat and then they came again. People had to do their work and then they came again; thirty-six hours is a long period. And after thirty-six hours he fell down. And people heard a great laughter.

Jalaluddin was laughing loudly, and he said, "You think you have seen me falling, I have also seen myself falling. These thirty-six hours I have not moved a single inch. Now I don't have to go to Mecca in search of God, I have found him. In the unmoving center of my own being, he is".

இந்த மூன்று பதிவுகளையும் - உருது தொடர்பையும் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது.......எனக்குப் பிடித்த ஹிந்திப் பாடல்கள் குறித்து நினைவுபடுத்திப் பார்த்தேன். ஒன்று எனக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. பெருமளவில் உருது கலந்த ஹிந்தி பாடல்கள் தான் எனக்கு மிகப் பிடித்தமானவைகளாக இருந்திருக்கின்றன. விஷால் பரத்வாஜின் படங்கள் முதல், மணிரத்னத்தின் ஹிந்தி படங்கள், இன்றைய ப்ரஸுன் ஜோஷி வரை பெரிய லிஸ்ட் ஒன்று உள்ளது. நிச்சயமாக இதற்கு உர்து மொழியின் லாவகமும் ஓசை நயமுமே காரணமாக இருக்க முடியும்.  மசூதிகள் இருந்த/இருக்கும் பகுதியில் நான் வளர்ந்ததினால் பாங்கு ஓதும் போது அந்த லாவகமும் நயமும் கேட்க பெரிய அனுபவமாக இருக்கும். நான் படித்த பள்ளியில் வேறு - திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார், புகழ்பெற்ற ஸ்கூல் அது -  ஒவ்வொரு திங்களன்றும் மும்மதப் பாடல்கள் என்று ப்ரேயரில் பாட வைப்பார்கள். ஆறு வருடமாக "ஹஸ்பிரப்பி ஜல்லல்லா" என்ற ஆரம்பிக்கும் நாகூர் ஹனிஃபா பாடிய பாடலைப் பாடவேண்டும். இன்றுவரை அர்த்தம் தெரியாது. ஆனால் அந்த பாட்டில் ஒரு உணர்ச்சி இருக்கும். போஸ் - ஷ்யாம் பெனகல் படத்தில் ரஹ்மானின் இசையில் அந்த வரிகளை மீண்டும் கேட்ட பொழுதுதான் அதன் முழு வீரியமும் புரிந்தது. முடிவை நோக்கி அந்தப் பாடல் நகர நகர ஒரு வசீகரிப்பை உணரலாம்.  காந்தி கூட ஹிந்தி + உர்து சேர்ந்த ஹிந்துஸ்தானி என்ற மொழியே, ஹிந்திக்கு பதில் இந்தியாவின் official languageஆக இருக்கும் வேண்டும் என்று உர்துவின் மேல்கொண்ட ஈர்ப்பினாலும், முக்கியமாக அரசியல் காரணங்களுக்காவும் கூறினார். திருவிளையாடல் விறகு வெட்டி போலத்தான் - உர்து குறித்து எனக்கு தெரிந்ததும். மிகமிக சொற்பமாக கேட்டதை படித்ததை வைத்தே என் கருத்துகளை கூறியிருக்கிறேன். உர்து, ஹிந்தி குறித்து - எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல ஒரு தொனி தெரிந்தால் நான் அதற்குப் பொறுப்பில்லை :)


இதுபோன்றதொரு உர்து மொழியில் - கவிஞர்களாக இருக்கும், குல்ஸார், ஜாவேத் அக்தர் போன்ற ஆட்கள் பாடல் வரிகளை எழுதும் பொழுது..........அதன் தரம் எங்கோ சென்றுவிடுகிறது. ஆனால், நமது தொன்மையான தமிழ் மொழியின் திரைப்படப் பாடல்களின் தரம் ? ஏன் பிரமீள் போன்றவர்களது நவீன கவிதைகளை யாரும் பாடலாக்க முன்வருவதில்லை என்று தெரியவில்லை. பெரும்பாலும் மிக அரதப்பழசான பாடல் வரிகளை வைத்தே ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறோம். (வைரமுத்து - இளையராஜா கூட்டணி உடைந்தது மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமே இல்லை). வைரமுத்துவின் மீது எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், போகிறபோக்கில் அவரது பாடல்களில் தெறிக்கும் வரிகளுக்கு ஈடாக இன்றிருக்கும் யாராலும் எழுத முடியவில்லை என்பதுதான் உண்மை. ராக்ஸ்டார் படம் பார்த்துவிட்டு - அதுவும் சப்டைட்டில்களின் மூலம் - பாடல்களின் அர்த்தங்களை தெரிந்துகொண்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில், கவிஞர்/நண்பர் விஷால் அவர்களும் இதே கருத்தைச் சொன்னார். அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் கலாப்ரியா போன்றோரது நவீன தமிழ்க் கவிதைகளை ஒத்திருக்கின்றது என்று வெகுவாக சிலாகித்துச் சொன்னார். குல்ஸாரே தில்சே படத்தின் சுஃபித் தன்மை குறித்து ஒரு நேர்காணலில் சொன்னது:

Recently I returned from Chennai after a music sitting with Mani Ratnam and A.R. Rahman. We are working together again after "Dil Se" for Mani's "Guru". Again we'll try to attempt a different sound.

"Guru" has a serious layer below the surface, which I'll tap as a poet. Mani Ratnam is the only director who asks for abstract images. It's lovely to share my poetry with him. His Hindi is getting better. But I'm lagging behind. My Tamil should improve soon.

As a lyricist, I'd say my first turning point as an abstract lyricist was "Humne dekhi hai un aankhon ki mehekti khushboo" in "Khamoshi". Another turning point was Mani Ratnam's "Dil Se" where with "Chaiyyan chaiyyan" my sufiyana phase started. Now let's see...perhaps with "Guru" there will be another turning point. It's wonderful to work with a director who expresses scenes musically.

அந்த தில்சே ரே பாடல் ஏன் எத்துனை முறை கேட்டாலும் சலிப்பதேயில்லை என்று புரியவில்லை. புரிந்துகொள்ளும் ஆராய்ச்சியிலும் நான் இறங்க விரும்பவில்லை. ரஹ்மான் நேர்காணலில் கூறியிருப்பதைப் போல, பாடல் முழுக்கு angst தான் இருக்கும். ஆனாலும் கொண்டாட்டமான இசை. என்னவொரு முரண்நகை. நான் கேட்ட வரையில் ஒரு ஏழு லேயர்கள் அந்தப் பாடலில் இருந்தது. ரஹ்மான் பாடலைப் பொருத்தவரை இரு இசைக் கருவி/பீட்  மட்டும் லூப்பில் போட்டதைப் போல, ஆரம்பம் -> முடிவு வரை, பின்னணயில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இதிலும் அந்த ஆரம்ப prelude இசை கடைசிவரை பின்னணியில் ஒலிப்பதைக் கேட்கலாம். அதே போன்ற interlude வரும் சமயத்தில், கிடார் வெவ்வேறுவிதமான ஸ்கேல்களில் ஒலிப்பதைக் கேட்கலாம். இந்தப் பாடலின் பேஸ் கிடாருக்கு - பிரத்தியேகமாக Pink Flyod குழுவில் பேஸ் கிடாரிஸ்டாக இருந்த கய் ப்ராட்டை(Guy Pratt) வரவழைத்து ஒலிப்பதிவு செய்துள்ளனர். இந்தப் பாடலை தற்போதைய Mtv Unplugged நிகழ்ச்சியில் ரஹ்மான் பாடிய பொழுது.......நேரடியாக அதனைக் கேட்டவர்கள் அனைவரும் கொடுத்துவைத்தவர்கள். ரஹ்மான் 4:37நிமிடத்தில்  verseசை ஆரம்பிக்கும்பொழுது அவர் முகத்தில் தெரியும் உற்சாகத்தையும் கூட இசைப்பவர்கள்,கோரஸ் குழுவினர் என்று அனைவரும் லயித்துப் போயிருப்பதையும்........அதேபோன்று தான் இதே நிகழ்ச்சியில் "ரெஹ்னா தூ" பாடலும். ஏறக்குறைய உர்து தான். வார்த்தைகளை கவனியுங்கள். ஹுர்துரா...........அர்த்தமே தெரியாது...ஆனால், மேஜிக்.