Wednesday, November 2, 2011

சாத்தானின் இசை: 2 - உருமாற்றம்

டிசம்பர் 22, 1849. ருஷ்யாவின் செம்னோவ்ஸ்கி ப்ளாசா. -20 செல்சியஸ் உறைகுளிர். இருபத்தியொரு பேர் - ஒருசில உள்ளாடைகளுடன் அக்குளிரில், கண்கள் கட்டப்பட்ட நிலையில், மூம்மூன்று பேராக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.சுடத்தயாராக துப்பாக்கியை, அவர்களை நோக்கி உயர்த்தியவாரு ஜார் மன்னனின் வீரர்கள். இரண்டாவது வரிசையில் முதல் ஆளாக அந்த இருபத்தியெட்டு வயது இளைஞன் நின்றிருக்கிறான். இந்த வரிசைக்கு வந்து சேரும் முன் - அரசாங்கத்திற்கு எதிராக துரோகமிழைத்த குற்றத்திற்காக - எட்டு மாதம் தனிமைச் சிறையில் இருந்தவன். தனிமைச் சிறை – ஒலிகளில் இருந்து கூட தனிமை. ஆம். அவன் காதில் தங்களுது நடையின் ஓசைகூட விழுந்துவிடக் கூடாது என்பதற்காக கால்களில் வெல்வட் துணிகளை கட்டிக் கொண்டிருந்த வீரர்கள் நிறைந்த தனிமைச் சிறை. அதிலேயே எட்டு மாதம். மரணத்தை ஒருவிடுதலையாகக் கூடக் கருதி, அந்த வரிசையில் அவன் நின்றிருக்கலாம். எல்லாம் முடியப் போகிறது என்று நினைத்து பொழுது, இதுவொரு ஒத்திகை, அனைவரின் மரண தண்டை குறைக்கப்பட்டு சிறை தண்டனையாக மாற்றப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகிறது (ருஷ்யாவில் ஜார்களின் ஆட்சியில் இதுபோன்ற ஒத்திகை பழக்கம் நடைமுறையில் இருந்தது). ஆனாலும் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த இளைஞன் கடும்சூழ்நிலையில், சைபீரியாவின் சிறைச்சாலையில் நான்கு ஆண்டுகளை கழிக்க நேரிடுகிறது. பின்னாளில் இந்த அனுபவங்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வெகுவாக அந்த இளைஞனை பாதிக்கிறது. அந்த இளைஞனின் பெயர் – ஃபியோதர் தஸ்தாவெஸ்கி. உலகின் ஆகச்சிறந்த எக்ஸிஸ்டென்சியலிஸ்ட்களில் ஒருவர். 

அவரை பற்றி இங்கே குறிப்பிட காரணம்? ப்ளூஸ் இசையும் ஒருவகையில் எக்ஸிஸ்டென்சியலிஸம் தான். என்னைக் கேட்டால், உலகின் முதல் ப்ளூஸ் இலக்கியவாதி – தஸ்தாவெஸ்கி. அவரது Notes from the undergorund, சற்றே நீண்டதொரு ப்ளூஸ் இசை. இந்த கருத்தை இன்னும் வலுவாக நிறுவுவதற்காகவே அவரைப் பற்றிய நீண்ட முன்னோட்டம் தேவைப்பட்டது. ப்ளூஸின் இந்த குணாதிசயத்தை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டால், மிகச் சுலபமாக அதன் வீரியத்தை புரிந்து கொள்ள முடியும். எக்ஸிஸ்டென்சியலிஸம் + ப்ளூஸ், நேற்றுதான் எதேச்சையாக இந்த தொடர்பு தோன்றியது.இணையத்தில் இதுபோன்ற தொடர்புபடுத்துதல் இருக்கின்றனவா என்று தேடிய போது, Jean Paul Sartre was, without realizing it, the first to link together the blues and existentialism என்றிருந்ததை பார்த்த போது மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். கீழ்க்கண்ட விளக்கம், ப்ளூஸ் பற்றிய ஒரு மிகச் சிறந்த விளக்கமாக எனக்குப்படுகிறது. 

The blues is an impulse to keep the painful details and episodes of a brutal experience alive in one's aching consciousness, to finger its jagged grain, and to transcend it, not by the consolation of philosophy but by squeezing it from a near-tragic, near-comic lyricism

ஏற்கனவே குறிபிட்டிருந்தது போல, 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அமெரிக்காவிற்குள் ஆப்ரிக்க மக்கள் அடிமைகளாக வர ஆரம்பித்தனர்.அந்த காலகட்டத்தில் நாட்டுப்புற இசையின் வடிவமாகவே ப்ளூஸ் இருந்து வந்துள்ளது. ஆப்ரிக்கர்களின் அசரவைக்கும் தாளம் குறித்து நாம் அனைவரும் அறிவோம்.அவ்வகையான இசையினை ஓய்வு நேரங்களில் மனநெருக்கடிகளில் இருந்து விடுபடவும் தளர்ந்து விடாமல் இருக்கவும் இசைத்து வந்தனர். கையில் கிடைதவைகளை வைத்து கருவிகளை உண்டாக்கினர். மிகமுக்கியமாக விதவிதமான drumகள். அதோட ஏற்கனவே தங்கள் நாட்டில் உபயோகித்து வந்த ஒற்றை – இரட்டை நரம்பு கொண்ட - கிடார் போன்ற கருவிகளையும், சற்றே பெரிய புல்லாங்குழல் போன்ற கருவிகளையும் உபயோகிக்க ஆரம்பித்தனர். மெல்ல மெல்ல அந்த கூட்டத்தினருக்கென்றே ஒரு தனிவகையான இசை கருக்கொள்ள ஆரம்பித்தது. தங்களுக்கு தோன்றியவைகளை – பெரும்பாலும் வாழ்க்கை முறையினை பற்றியவைகளாகவே இருக்கும் - பாட ஆரம்பித்தனர். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்


சட்டென்று ஒரு பொறி தட்டுமே...கிட்டத்தட்ட நமது கிராமிய இசையினை போல இல்லை ? இவர்களின் உடைகளை மட்டும் மாத்தி போட்டு கற்பனை செய்து பாருங்கள்.நமது நாட்டுபற இசையின் பல கூறுகள் இதிலிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.நமது இசையுடன் ஒப்பிட்டால், ப்ளூஸ் மிக இளைமையானதுதான் தான். ஆனாலும் நிறைய ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது(யாராவது தெளிவுபடுத்தினால் நலம்). ப்ளூஸும் பெருமளவு வாய்மொழியாகவே வளர்ந்தது.தாளத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும். மிக முக்கியாமாக வாழ்வியல் சார்ந்த விஷயங்களே மிகப் பெரும்பான்மையான பாடல்களில் வெளிப்படும்.எசப்பாட்டு என்று நாம் சொல்கிறோம் அல்லவா.....ப்ளூஸ் கூட ஆரம்பகாலங்களில் இதுபோன்ற அமைப்பினைக் கொண்டிருந்தது. Call & Response – அதாவது, சுரங்கங்களிலோ வயல்வெளிகளிலோ வேறு கடும் வேலைகளிலோ ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு வரியைப் பாடினால், ஒரு கூட்டமே எதிர்ப்பாட்டு பாடும் (இதை எசப்பாட்டு என்றழைப்பது சரியா என்று தெரியவில்லை). இந்த அம்சத்தை நினைவில் கொள்ள வேண்டும்.ஏனென்றால் பின்னாளில் குரல்களுக்குப் பதில் இசைக் கருவிகள் "எசப்பாட்டு" பாட ஆரம்பித்தது.

   

இதுபோல மிகச் சீராகவும் பல புதிய கருவிகளின் துணையுடன் நாட்டுபுறத்தன்மையே மேலோங்கியிருந்த இந்த இசை வளர ஆரம்பித்தது. 

1861: சிவில் வார்: 
Civil War-அமெரிக்காவிற்கு மட்டுமின்றி உலகளவிலேயே மிக முக்கியமானதொரு நிகழ்வு. சிவில் வாரின் அடிநாதமே இந்த அடிமை முறைக்கு எதிரான போக்குதான். 1861 ஆம் ஆண்டு, கருப்பின மக்களிடையே ஒருவித எழுச்சி காணப்படுகிறது.இந்நிலையில் தான் தேர்தல் வேறு வருகின்றது. லிங்கன் ஜனாதிபதியாகிறார்.எல்லாம் சேர்ந்து – இன்னும் பல காரணிகளை வேறு கூறுகின்றனர் – 1861 முதல் 1865 வரை கடும் போர் நிகழக் காரணமாகின்றது. 10,30,000 பேரைக் காவு கொண்ட (மூன்றில் இரண்டு பங்கினர் நோயினாலேயே இறந்தனர். சிவில் போர் ஒரு மாபெரும் கொடுங்கதை. தனியாக பக்கம் பக்கமாகவே எழுதலாம்) இந்தப் போர் 1865 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது.அமெரிக்க கருப்பின மக்கள் இனி சுதந்திரமானவர்கள் என்று லிங்கன் அறிவித்தார். கிட்டத்தட்ட 4 மில்லியன் கருப்பின மக்கள் அந்த சமயத்தில் அடிமைகளாக அமெரிக்காவில் இருந்ததுக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.அதே ஆண்டு, லிங்கன் ஜான் வில்கீஸ் பூத் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டது, நாம் அனைவரும் அறிந்ததே. 



சரியாக சொல்ல வேண்டுமானால் 1867ல், உலகின் முதல் ஆப்ரிக்க – அமெரிக்க பாடல்களைக் கொண்ட தொகுப்பான Slave Songs of the United States என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இதுவொரு மிக முக்கியமானதொரு நிகழ்வு. கன்ட்ரி ப்ளூஸ்(Country Blues) இசை, முறையாக ஆவணப்படுத்தப்பட்டது அன்று முதல்தான் என்று சொல்லலாம். மற்றொரு முக்கிய விஷயம், அதுவரைக்கும் நாட்டுப்புற இசைக்கும் ப்ளூஸ் இசைக்கும் பெரிய அளவில் வேறுபாடில்லாமல் இருந்தது.சிவில் வார்க்கு பிந்தைய காலகட்டத்தில், குறிப்பாக முன்-1900களில் பல புதிய முறை இதில் புகுந்து கன்ட்ரி ப்ளூஸ் என்ற வடிவத்தை அடைந்தது(வகைகளைப் பற்றி பின்னர் தனிப் பதிவில் பார்க்கலாம்). முதல் முறையாக கறுப்பினத்தவர்களின் பாடல்களும் இசையும் பதிவு செய்யப்படலாயின. ஆனால் மறுபடியும் வேற வகையான தீண்டாமைமுறை உட்புகுத்தப்படுகிறது. ஜிம் க்ரோ லா’ஸ்(Jim Crow law’s). அதன் மூன்று முக்கிய சட்டங்கள்: 

1. பொது இடங்களில்,பள்ளிகளில் என்று அனைத்து பொது வெளிகளிலும் ஆப்ரிகர்களுக்கு, மெக்சிகர்களுக்கு இன்ன பிற “நிற”த்தவர்களுக்கு தனி இடம் 

2. ஆப்ரிகர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது 

3. கலப்பின, திருமணம் – உறவு ரெண்டும் நிச்சயமாகக் கூடாது. 















இந்த சட்டம் நமக்கு ஒன்று புதிதில்லை.தென்னாப்ரிக்காவில் கூட ஒருஆள் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டது ஒரு ஓரத்தில் ஞாபகம் வருகிறதல்லவா.ஆக, அமெரிக்கர்களும் தீண்டாமைதாசர்கள் தான். இந்த சட்டம் வெவ்வேறு வடிவில் 1960கள் வரை நடைமுறையில் இருந்தது. ரோசா பார்க்ஸ் – பேருந்து நிகழ்ச்சி, மார்டின் லூதர் கிங், மால்கம் X, குடியுரிமை இயக்கம் எல்லாம் அதன் நீட்சிகளே.

முதலாம் உலகப் போர் & The Great Migration: 


இதுபோன்ற சட்டங்கள் சமூகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.மேலும் பிற நாட்டினர் அதிகளவில் அமெரிக்காவிற்கு குடியேற ஆரம்பித்ததும் இந்த காலகட்டம் தான், 1900களில்.ஏற்கனவே உள்ள குழப்பம் போதாமல் புதிதாக வந்தவர்கள் வேறு. ஆப்ரிகர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை பெருக ஆரம்பித்தது.வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்க, மெதுவாக அமெரிக்காவின் தென் மாகாணங்களில் இருந்து மக்கள் புலம் பெயரத் தொடங்குகின்றனர். 

இதற்கிடையில் முதல் உலகப் போரும் வந்து சேர, கடும் வேலையில்லா திண்டாட்டமும் சேர்ந்து கொள்கின்றது.1910 – 1930 வரை ஆறு மில்லியன் மக்கள் - அதில் 99% சதவீதம் கறுப்பின மக்கள், புலம் பெயர்ந்தாக சொல்கின்றனர். தென் பகுதிகள் இதுபோன்ற சூழ்நிலையில் இருக்க, வடக்கே இருந்த சிகாகோ, நியு யார்க், டெட்ராய்ட் போன்ற நகரங்கள் பெரு நகரங்களாக உருவெடுத்திருந்தன. ஆனால் அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய அமெரிக்கர்களே - (கார்லியோனியும் ஐரோப்பியர் தானே...)  

இந்நிலையில் ஏற்கனவே கூறியதைப் போல புதிதாக பல்வேறு நாட்டினரும், உதாரணமாக ஐரிஷ், உள்ளே வர அதுவே பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கின்றது.தக்கன பிழைக்கும் – வலியதே வாழும். இந்த போராட்டம் தான். அதுகாறும் தங்கள் ஊரில் கிராமப்புறம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள், நகர சூழ்நிலைக்கு தக்கவாறு தொழிற்சாலைகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். இந்த நகரச் சூழல் பல வாழ்வியல் சார்ந்த தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. உணவு – உடை – இசை என்று அவர்கள் நகரங்களின், ஐரோப்பியர்களின் கூறுகளையும் உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தனர். ப்ளூஸ் இசையை பொறுத்த வரை – மிக முக்கிய மாற்றம் - அசரடிக்கும், சுண்டியிழுக்கும், நம்மை எல்லாம் கண்டபடி கிறங்கடிக்கும் எலெக்ட்ரிக் கிடாரின் வரவு.
Facebookers..

24 comments :

  1. Very Gud...

    இந்த தொடர் முடிஞ்சதும் முடிஞ்சா சிவில் வாரை பத்தியும் கவ் பாய்களை பத்தியும் எழுதுங்களேன்...

    Keep ur Gud Work..

    ReplyDelete
  2. நண்பா ரொம்ப நல்லா எழுதறீங்க. சில கட்டுரைகளுக்குத்தான் ஃபீல் கொண்டு வர திறன் இருக்கும். அது இந்த தொடர்ல ரொம்ப நல்லா தெரியுது. அந்த வீடியோலாம் கேட்டேன். நம்ம ஊர்ல வேலை செய்யறப்ப அலுப்பு தெரியாம இருக்க பாட்டு பாடுவாங்க. அதுபோல அவங்க கவலைகள் மறந்து அவங்க வாசிக்கிறது தெரியுது அவங்க முகத்தில் தெரியிற மகிழ்ச்சியே நிறைய சொல்லுது..

    ReplyDelete
  3. ப்ளூஸ் மற்றும் எக்சிஸ்டென்ஷியலிசம் பற்றின தொடர்பு, எனக்கு சத்தியமா தெரியாது. ஆனா, நீங்க எழுதினதும், அது புலப்படுது. ஆச்சரியம். ஆனா அதைப்பத்தி தீவிரமா யோசிக்கும்போது இது சட்டுன்னு, ஐன்ஸ்டீனுக்கு மண்டைல பல்பு எரிஞ்சமாதிரி, கட்டாயம் தோண வாய்ப்பு இருக்கு :-) . . .

    //to transcend it, not by the consolation of philosophy but by squeezing it from a near-tragic, near-comic lyricism //

    a very good line !

    படிப்படியா evolve ஆகி வந்திருக்கும் இதைப்போன்ற விஷயங்களின் தாக்கம், கட்டாயம் நிறைய பேரை பாதிக்கத்தகுந்ததாத்தான் இருக்கும்.

    Lookin forward for the next article !

    ReplyDelete
  4. @ Amizhthini a.k.a செல்வம் மாணிக்கம்....
    நன்றி ...... எல்லாம் உங்கள மாதிரி நண்பர்களின் ஊக்கம் தான்..



    @αηαη∂
    நன்றி பாஸ்.......பாப்போம்...... நா ரொம்ப wavering mind உள்ள ஆளு....அதுனால ஒரே வகையான டாபிக்ல பொறுமையா இருக்க முடியல.....இதுக்கே கொச முட்டுது.......ஏதோ ராஜேஷ்லாம் பொறுமையா - நிறுத்தி - அழகா LOTRலாம் 16 (!!!!, யப்பா...)தொடரா எழுதுனது தான் எனக்கெல்லாம் பாடம்....சும்மா..சொல்லல....ரெண்டு எழுதுறதுக்கே நாக்கு வெளிய தள்ளுது....but still, i m enjoying .......


    @எஸ்.கே
    சரியா பாய்ன்ட்ட புடிச்சீங்க ...... இன்னும் போகப்போக அடுத்த பதிவிலிருந்து பாடல்களையும் குடுக்குறேன்......செமத்தியா இருக்கும்

    @கருந்தேள்
    சில சமயம் எதுனா நமக்கு தோணும் போது, அட.....நம்ம கூட இவ்வளவு நல்லா யோசிச்சிருக்கோமேன்னு தோணும்ல........ப்ளூஸ் + எக்சிஸ்டென்ஷியலிசம் தொடர்ப யோசிச்ச போது, ரொம்ப நிறைவா இருந்துச்சு.....

    நெட்ல வேற தேடிய போது ழான் பால் சர்த்தாரே இதே கருத்து வர மாதிரியான பாயின்ட - but an unintentional one - சொல்லியிருக்காருன்னு படிச்ச போது....ஒரே சுய சொறிதல் தான் போங்க....

    http://www.sparknotes.com/lit/invisibleman/section1.html

    ReplyDelete
  5. பதிவை படிக்க தொடங்கியதுமே தளத்திற்கு மாறி வந்துடோமொனு ஒரு தடவை சரி பார்த்துக்கொண்டேன் , அவ்வளவு அருமையான எழுத்து நடை , கனவு பதிவுனா ஹங்கேரி , சேக்கொச்லேவியா ,தாஸ் தாபுஸ்கி, இப்படி எதையாவது எழுதி தொலைச்சு இருப்பீங்கன்னு நினைத்து தான் வந்தேன் ,யோவ் நீ பிறவி (இசை ) கலைங்கன்னு நிருபிச்சிடீர் ,

    ஒரே நாளில் மூவாயரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ,பத்துக்கும் மேற்பட்ட
    பகிர்பவர்கள் ,
    வாழ்த்துக்கள் பிரபல பதிவரில் இருந்து நட்சத்திர பதிவராக மாறிவிட்டீர்கள்

    ReplyDelete
  6. வெறித்தனமாக தங்கள் அடுத்த பதிவை எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  7. @ டெனிம்

    யோவ்..ஏன்யா...ஏன்....இந்த C - C - P வேல ?????? அதுக்கு கமென்ட்டே போடாம இருந்திருக்கலாம்

    ReplyDelete
  8. பதிவில இருக்கிற எல்லாமே எனக்கு புதுசுயா ? பதிவின் முதல் பேரா மட்டும் Notes from the undergorund மூலம் பரிச்சயம் ,

    ReplyDelete
  9. கலப்பின திருமணம் – உறவு நிச்சயமாக கூடாது...... இதற்கு அர்த்தம் புரியல

    ReplyDelete
  10. அதுக்காக இப்புடியா ??????????

    ReplyDelete
  11. // கலப்பின திருமணம் – உறவு நிச்சயமாக கூடாது...... இதற்கு அர்த்தம் புரியல //

    ஆப்ரிக்கன், மெக்சிகன், ஐரீஷ் X அமெரிக்கன், ஐரோப்பியர்கள் இந்த மாதிரி

    ReplyDelete
  12. கலப்பின திருமணம்(செய்துகொள்ளலாம் ) – உறவு நிச்சயமாக கூடாது

    ReplyDelete
  13. ஏன் இப்புடி பயங்கரமா யோசிக்கிறீங்க...

    கலப்பின, திருமணம் – உறவு ரெண்டும் நிச்சயமாக கூடாது......

    ReplyDelete
  14. முழுவதும் படிச்சாச்சு, தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய தொடர் !...... ஏகப்பட்ட தகவல்களை சுவாரியசமான முறையில் கொடுத்துள்ளீர்கள், ஒரு புத்தகமாகவே வெளியிடலாம்,அவ்வளவு அற்புதம்,இவ்வளவு குறிகிய நாட்களில் அடுத்த பதிவை எதிர் பார்க்கவில்லை ,உண்மையீலே உங்கள் அடுத்த பதிவை வெறித்தனமாக எதிர்ப் பார்க்கிறேன்

    ReplyDelete
  15. எனக்கு ஒரு சந்தேகம் தங்கோ வுக்கும் ப்ளுஸ் க்கும் எதாவது தொடர்பு உண்டா ? சிறுபுள்ள தனமான கேள்வியா இருந்தாலும் எனக்கு உண்மைளையே தெரியல ...

    ReplyDelete
  16. உங்கள் பதிவை எவ்வளவு வெறித்தனமாக படித்தேன் என்பதற்கு " Jean Paul Sartre was, without realizing it, the first to link together the blues and existentialism " இதில் J மட்டும் என்ன பாவம் செய்தது

    ReplyDelete
  17. @டெனிம்
    // வெறித்தனமாக தங்கள் அடுத்த பதிவை எதிர்பார்கிறேன் //
    நானும் தானுங்க..

    ReplyDelete
  18. செமையான எழுத்து நடை.. ரொம்ப சுவாரசியமா இருக்கு படிக்க... மோகன் சொன்னது போல இவ்வளவு சிறிய கேப் ல இவ்வளவு மேட்டர்ரோட எழுதுறிங்க.. கலக்கிட்டிங்க... coca - cola, white customers only.. கொடுமை இதெல்லாம்... இவ்வளவு ஆற்றாமையும் உள்ள வச்சுட்டு அதனோட மொத்த வெளிப்பாடா இசை இருக்கும்போது, அதனோட வீரியத்த உணர முடியுது.. உங்களோட அடுத்த பதிவுகள்ல முக்கிய ஆளுமைகள் மற்றும் இசை அறிமுகத்தை ரொம்ப ஆர்வமா எதிர்பாக்குறேன்...

    ReplyDelete
  19. இன்னொரு முக்கியமான விஷயம், civil war, great migration ன்னு இசையை தாண்டி நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன்.. நன்றி கொழந்த.. ஒரு அருமையான தொடரை குடுக்குறதுக்கு ...

    ReplyDelete
  20. @denim

    http://en.wikipedia.org/wiki/History_of_the_tango

    எனக்குப் போயி தெரியும்ன்னு நம்பி கேட்டீங்க பாருங்க.....அதுலயும் // சிறுபுள்ள தனமான கேள்வியா இருந்தாலும் //

    வேற ஒண்ணுமில்ல கிளிக்கு றெக்க முளச்சிடுத்து...........என்னைய ஓட்ட ஆரம்பிச்சிருச்சு....

    // உங்கள் பதிவை எவ்வளவு வெறித்தனமாக படித்தேன் என்பதற்கு " Jean Paul Sartre was, without realizing it, the first to link together the blues and existentialism " இதில் J மட்டும் என்ன பாவம் செய்தது //

    என்ன சொல்றதுன்னே தெரியல.....மிக்க நன்றி.............



    @சம்பத்
    நானும் தொடர்ந்து உங்க கமென்ட்களை எதிர்பார்க்கிறேன்


    @முரளி
    நன்றி........எல்லாம் நண்பர்களின் ஊக்கமும் உற்சாகமும் தான்

    ReplyDelete
  21. அருமையான பதிவு கொழந்த..

    உலகெங்கும் உள்ள மக்களின் பாடல்கள் முறைகள் கூட ஒன்றாக இருப்பது ஆச்சர்யம் தான் :)

    ReplyDelete
  22. @kanagu

    நன்றி நண்பரே......உலகெங்கிலும் இருக்கும் - ஒடுக்கபட்ட மக்களின் ன்னு சொன்னா இன்னமும் பொருத்தமாக இருக்கும்னு தோணுது

    ReplyDelete