நான் யார்யாருடைய blogஐ புக்மார்க் வெச்சு விரும்பி படிக்கிறேனோ அவர்கள் எல்லாம் பின்னூட்டமிட்டது, என்ன சொல்றதுனே தெரியல...ரொம்ப நன்றி. அண்ணன் கருந்தேள் தன் blogஇல் முதல்ல லிங்க் கொடுத்தது நிறைய பேர் பார்க்க உதவியது. அவருக்கு தேங்க்ஸ்.
...............................
                              எனக்கு மிகப் பிடித்த FIlm Genreனு சொன்னா, நிச்சயமா Sci-Fi தான்.Sci-Fi புத்தகங்களோ படங்களோ அது எதுவாக இருப்பினும் என்னை மிகுந்த ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குகின்றன. Sci-Fi கதைகள் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாய் இருந்துள்ளன.  எனவே நான் படித்தவற்றிலிருந்தும் பார்த்தவற்றிலிருந்தும் நான் தெரிந்து கொண்டதை இங்கே கொட்டலாம் என்று நினைக்கிறேன். இது முழுக்க நான் புரிந்து கொண்டதை வைத்து எழுதுகிறேன். தெரிந்தவர்கள் திருத்தினால் மகிழ்ச்சி.


விஞ்ஞானக் கதைகளின் பிதாமகன்கள்:
"Father of Science-Fiction" என்று நான்கு பேரை சொல்கிறார்கள்.
  • Hugo Gernsback - இவர் பெயரில்தான் Sci-Fiக்கான Hugo விருது வழங்கப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் துறையின் முன்னோடி என்று கருதப்படுபவர்.
  • Jules Verne - எழுதியதில் சில Journey to the center of the earth, Around the world in 80 days, From earth to moon, 20000 leagues under the sea
  • H.G.Wells - எழுதியதில் சில The Invisible man, War of the Worlds, The Time machine 
  • Edgar Allan Poe - வெறும் கால இயந்திரம், ஏலியன்ஸ் என்று எழுதாமல் mystical புனைவுக் கதைகளை எழுதியவர்.
இதில் கடைசி மூவரைப்பற்றி அனைவரும் அறிவோம். அத்திரைப்படங்களையும் பார்த்திருப்போம்.இது போக கலிவேர்ஸ் டிராவல், ஆலிஸ் இன் வொன்டர்லேன்ட் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.


இரண்டாம் கட்டம்:
இக்கால கட்டத்தில் தான் அறிவியல் வளர்ச்சி அபாரமாக இருந்தது. இது Sci-Fi கதைகளின் பொற்காலம் என்ற கருதப்படுகிறது "Big 3 of Science-Fiction" என்று அழைக்கப்படும்
  • Issac Asimov - Robot series , Foundation series,3 law of Robotics போன்ற எண்ணற்ற படைப்புகளையும் கருத்துக்களையும் தந்தவர். (இவரது கதைகள்தான் எந்திரன் படம்னு நெனைக்கிறேன்)
  • Arthur.C.Clarke-Geostationary satellite orbitக்கு இவரது கருத்துக்கள் மிகப்பெரும் பங்காற்றியுள்ளன. (Clarke orbit என்றே ஒன்று உண்டு). 2001: A Space Odyssey, அதன் sequels இவர் எழுதியதுதான்.
  • Robert Heinlein - Starship Troopers .. நான் இவரது கதைகளை படித்ததில்லை.

Carl Sagan இக்காலத்தின் முக்கியமான Cosmologist விஞ்ஞானி. அவரது புகழ் பெற்ற புத்தகம்தான் "COSMOS". Extra Terrestrial Life(ET) பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளவர்.

மூன்றாம் கட்டம் & தற்கால கட்டம்:
இக்காலகட்டத்தில்தான் Sci-Fiக்கேன பல பிரிவுகள் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இதில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் Philip.K.Dick, Ray Bradbury, Anthony Burgese, William Gibson, Kurt Vonnegut போன்றோர். சமீபத்தில் பல பின்-நவீனத்துவ எழுத்தாளர்களை இதில் சேர்க்கிறார்கள். 

வகைகள்: (நான் புரிந்து கொண்ட வரையில், படித்ததை வைத்து)

Hard-Core Science Fiction:
  • கடினமான அறிவியல் கருத்துக்களை உள்ளடக்கியது
Arthur.C.Clarke நாவல்கள் --- 2001 A Space odyssey ---- Stanley Kubrick


Issac Asimovஇன் பல கதைகள் ----- I, Robot(Will Smith) அவரது கதையைத் தழுவியது. எந்திரன் கதை கிட்டத்தட்ட இதுதான்னு நினைக்கிறேன். கிராபிக்ஸ் சூப்பரா இருக்கும்.


Soft-Core Sci-Fi:
  • உளவியல், பொருளாதாரம், சமூகம், அரசியல் சார்ந்த-அறிவியல் கடினத்தன்மை சற்று குறைந்த பிரிவு
  •  Sci-Fi என்றால் கால இயந்திரம், ரோபாட், ஏலியன்ஸ் மட்டுமல்ல என்பதற்கு சிறந்த உதாரணம் இப்பிரிவு
Ray Bradbury ---- Fahrenheit 451 --- Traffaut (அவர் இயக்கிய ஒரே ஆங்கிலப்படம், Fah 451 என்பது புத்தகத்தாள்களின் எரியும் வெப்பநிலை)

George Orwell ---- 1984 ---- சிறந்த ஆனால் Anti-Communist novel (Animal farmம் கூட)
Anthony Burgese ----  A Clockwork Orange ---- Kubrick (நான் முழுதாக இன்னும் பார்க்கவில்லை )



Children of Men ---- Alfonso cuaron. (இதில் வரும் Tracking shot ரொம்ப பிரசித்தம்)
Solaris ----- Tarkovsky's Visual stunner. புரியறதுக்கே சிரமப்பட்டேன்

Alphaville ----- Jean luc godard (நான் முழுதாக இன்னும் பார்க்கவில்லை )


Cyberpunk:
  • எதிர்மறை எண்ணங்கள் கொண்ட, இயந்திரங்களால் ஆளப்படும், விரக்தியுற்ற, மனிதன்-இயந்திரம் சார்ந்த பகுதி
  • இதில் முக்கியமானவர் Philip.K.Dick. இவரது பல கதைகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. 
Blade Runner  based on Do Androids dream of electric sheep(Philip.K.Dick) ---- Ridley Scot. Ivangelis எலேக்ட்ரோனிக் மியூசிக்கல்ல கலக்கிய படம். அப்பவே தத்ருபமான கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சரியான த்ரில்லர் கதை. 

Minority Report based on short story Minority Report (Philip.K.Dick) ---- Steven Speilberg. இதுவும் ஸ்பியில்பெர்க்ன் அற்புதமான visionaryல ஒன்னு. இந்த படத்தின் கான்செப்டும் அது எடுக்கப்பட்ட விதமும் எனக்கு மிகப்பிடித்திருந்தது.


மற்ற குறிப்பிடத்தக்க படங்கள் The Terminator, The Matrix, Alien


Alien Invasion:
  • பேரே சொல்லும் எந்த மாதிரி கதை என்று.  H.G.Wellsதான் மூலகர்த்தா(War of the Worlds)
  • இதில் நான் ரசித்த சில திரைப்படங்கள்:
The Day earth stood still (1951). ரீமேக்(2009) இது அளவிற்கு என்னை ஈர்க்கவில்லை. அக்காலத்திலேயே சொந்த நாட்டின் (USA) அட்டுழியங்களை சுட்டிக்காட்டிய படம்.

Speilbergன் (E.T, Close Encounter of the third kind). ஸ்பியில்பெர்க்ன் அனைத்து படங்களிலும் (வார் ஆப் தே வேர்ல்ட்ஸ் நீங்கலாக) அனைத்து sci-fi படங்களிலும் ஏலியனை நல்ல மாதிரியே காட்டுவார்.

Signs (ஷயாமளன் உருப்படியா எடுத்த ரெண்டு படத்தில் ஒண்ணு. கடைசி வரை ஏலியனைக் காட்டாமல் சுவாரஸ்யமாக எடுத்திருப்பார்கள்)

Apocalyptic/Post Apocalyptic:
  • நியூக்லியர் வார், வைரஸ் தாக்குதல் அதற்குப் பிறகு நடப்பது. (எப்பவுமே யு ஸ் தான் காமிப்பாங்க)
I am legend, 28 Days-Weeks later, The Road (புலிட்சர் பரிசு பெற்ற நாவலை தழுவியது)


Parallel-Multiverse-Universe Concepts:
  • மிகக்கடினமான பிரிவு. ஒரு அண்டம்(Universe) போல் பல அண்டங்கள் (Multiverse) இருக்கலாம்-அங்கு நம்மைப்போலவே ஒருவர் இருக்கலாம்; Transportation, Hyperspace போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன.
  • Jetli -- The One, Frank Capra --- It's a wonderful life போன்ற படங்கள் உதாரணம்.
  • இதில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக, இலக்கியப் பத்திரிகைகளில் அடிக்கடி சொல்லப்படும் ஜோர்ஜ் லூயி போர்ஹேவை (The Garden of forking paths) சொல்கிறார்கள்.
(நான் பிசிக்ஸ் மேஜர். அதனால Interstellar, Cosmology, Singularity போன்றவற்றில் ஆர்வம் அதிகம்) 

இதில் குறிப்பிடப்பட்டுள்ள படங்களில் ஒருசிலவற்றைத் தவிர அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். இதில் கடினமானது என்று நான் நினைப்பது


2001 A Space odyssey -- Stanley Kubrick                                                   Solaris --Andrei Tarkovsky   

இந்த இரு படங்களையும் இருமுறை பார்த்துள்ளேன். திரும்ப ஒரு ரெண்டு தடவை பார்த்தாதான் தெளிவாக புரியும்னு நினைக்கிறேன். மற்ற அனைத்துப் படங்களையும் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அதைப் பற்றியும் வேறு சில Sci-Fi படங்களைப் பற்றி பகிர்ந்து
கொண்டால் மகிழ்ச்சி.

தமிழில் அறிவியல் புனைவுக் கதைகள் என்றால் அவரைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் எல்லோர் ஞாபகதிற்கும் வரும் பெயர் - சுஜாதா. அவரின் பல அறிவியல் கதைகள் எனக்கு பிடிக்காவிட்டாலும் படிப்பவர்களுக்கு சுவாரசியம் அளிக்கும் எழுத்து என்பது உண்மை. மேலும் Sci-Fi வகைக்கதைகளை தமிழில் பெருமளவு புகுத்தியவர். ஜெயமோகன் கூட"விசும்பு" என்ற அறிவியல் புனைவுக் கதைகளை 4-5 ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார்(போன மாசம் லைப்ரரில பார்த்தது).  தமிழில் Sci-Fi படங்கள் எனக்கு தெரிஞ்சு வந்ததில்லை, ஒன்றைத் தவிர....

யூகிக்க முடிகிறதா.... 1963ல் எம் ஜி ஆர் நடித்த "கலையரசி". எங்க அப்பாகிட்ட ஏதோ பேசிக்கொண்டிருக்கைல எதேச்சியா இந்த படத்தப் பத்தி சொன்னார். ஆச்சரியமாக அடுத்த நாளே ராஜ் டிஜிட்டல்ல போட்டாங்க (கோடு விழுந்த பிரிண்ட்). அப்பவே பறக்கும் தட்டு, வேற்று கிரகம்னு சூப்பரா எடுத்திருந்தாங்க. முடிஞ்சா இதையும் பாருங்க...

4 வயசில என் அப்பா First Bloodக்கு வீட்டுக்கு பக்கத்தில புதுசா ஆரம்பிச்ச அன்னை அபிராமி தியேட்டருக்கு கூட்டிட்டு போனார். stallone ட்ரக் மேல குதிப்பது இன்னும் ஞாபகமிருக்கு. ரெண்டு பேரும் தமிழ் படத்த விட இங்கிலீஷ் படம் பார்த்ததுதான் அதிகம். மதுரைக்கு ஏதாவது வேலைக்கு போனா மாப்பிளை விநாயகர் தியேட்டருக்கு போவோம். அங்க வாசல்ல ஸ்லேட்ல எழுதிப் போட்டிருக்கும் கதைச்சுருக்கத்த எக்கி எக்கி பார்த்துகிட்டிருப்பேன். ரோஜா படம் வந்தப்ப ஒபெனிங் சீன்ல வரும் cinematographyய பார்த்து அப்பா "ஆ ஊ" ரசிப்பார். நடிகர்களை வெச்சு படம் பார்க்கேல இது பாலு மகேந்திரா படம்னு பார்ப்பார். அவர் வளர்த்துவிட்ட இந்த கிறுக்கு இப்ப முத்தி போய் நிக்குது.

                 நா ப்ளாக்னு வாசிக்க ஆரம்பிச்சு 2 மாசமிருக்கும். அதுல பல பேர் படங்களைப் பத்தி எழுதுறத படிக்கும் போது நானெல்லாம் எந்த மூளைக்குனு தோணும். இருந்தாலும் நான் ரசித்த திரைப்படங்களைப் பற்றி எனக்கு நானே recall பண்ணிக்கிற மாதிரி இதை எழுத ஆரம்பிக்கிறேன். யாராவது தப்பித்தவறி வாசிச்சிங்கனா, இந்த படங்கள பார்த்திருந்தா உங்க கருத்துக்கள சொல்லுங்க; இல்லையா இந்த படங்கள பார்க்கணும்னு நெனச்சு அத என் பதிவும் உறுதிபடுத்தினா மிக்க மகிழ்ச்சி. இதோட முடிச்சுக்கிறேன்.
.............................
                                                            
                                                                       என்ன சொல்ல? சில படங்களின் தாக்கம் சில நாட்கள் வரை இருக்கும்; சிலது மாதங்கள்; சிலது வருசங்கள். இது அப்படி ஒரு படம். ஒருமுறை சாரு நிவேதிதா உயிம்மைல (தசாவதாரம் விமர்சனம்னு நினைக்கிறேன் ) கிளாஸ் கின்ஸ்கி பற்றி எழுதியிருந்தார். எனக்கு இந்த கின்ஸ்கி, போலன்ஸ்கி, கீஸ்லொவ்ஸ்கி -அப்படிப்பட்ட பெயர்களின் மேல ஒரு ஈர்ப்பு. அப்பறம் கின்ஸ்கி பத்தி தேட ஆரம்பிச்சது வெர்னர் ஹெர்ஸாக்குல போய் முடிச்சது. இந்த படத்த பத்தி படிச்சு கஷ்டப்பட்டு ரெண்டு மாசமா டவுன்லோட் பண்ணிப் பார்த்தேன்.
                                     கதை 1560ஆம் வருஷம் ஸ்பானிய படை, சிறைப்படுத்தப்பட்ட பழங்குடியின இந்தியர்களோடு பெரு நாட்டின் அடர்ந்த காட்டிற்குள் (அடர்ந்த காடுனா மிக அடர்ந்த காடு பிசாரோ என்பவனது தலைமையின் கீழ் செல்கிறார்கள். அவர்கள் எதைத்தேடிச் செல்கிறார்கள். தங்கப்புதையல் உண்டு என்று நம்பப்படும் எல்டோரடோவை நோக்கி. இந்த கூட்டத்துல கார்வால்ன்கிற பாதிரியாரும் உண்டு. அவரது பார்வைலதான் கதை சொல்லப்படுகிறது. அவரது பயணக்குறிப்புகள்தான் இக்கதையின் மூலம் என்று சொல்கிறார்கள். இதில் பிசாரோ - முதல் நிலைத் தளபதி; அகுர்-இரண்டாம் நிலைத் தளபதி.கடும் போராட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளறாங்க. வழியில் சிலர் இறக்க நேர பிசாரோ - முதல் நிலைத் தளபதி பயணத்தை முடித்துக்கொள்ள நினைக்கிறான். ஆனால் அகுர் அதை எதிர்த்து இன்னொரு ஆளை எல்டோரடோவின் அரசராக முடிசூட்டுகிறான் (அது செம ரகளையான காட்சி). பிசாரோவை கொடூரமாக கொல்கிறான். பின் அவர்கள் காட்டிற்குள் செல்வதும் நரமாமிசம் தின்னும் ஆதிவாசிகளிடம் மாட்டிக் கொள்ளத்தெரிவதும் (ஒரு கறுப்பு நிற அடிமையை நிர்வாணமாக ஓட விட்டு ஆதிவாசிகளை பயப்படுத்துவார்கள்). ஒரு சீன்ல இரு வீரர்கள் இந்தாளுட்ட இருந்து எப்படி தப்பிச்சுப் போறதுன்னு பேசிக்கிட்டு இருப்பாங்க. அதைக் கேட்ட அகுர் சொல்லும் டயலாக்.

அகுர்: That man is a head taller than me. That may change

                                     பல தடைகளைத் தாண்டி ஒரு ஆதிவாசியிடம் தங்கத்தை பார்க்கிறார்கள்.அப்பொழுது அந்த பாதிரியாரும்கூட ஆசைப்படுகிறார். அதன் பின் அக்குழுவிற்கு என்ன ஆனது? அகுர் என்ன ஆனான்? தங்கம் கிடைத்த இதற்கெல்லாம் விடைகான படத்தைக் காண்பது உத்தமம்.

                                  
படத்தின் ஆரம்ப 5 நிமிட காட்சிகளும்+இசையும் மிக முக்கியம் (அந்த mystical இசையைக் கடைசிக்கட்டத்திலும் உபயோகப்படுத்திருப்பார்கள்.இது 1972ல் எடுக்கப்பட்டது. அக்காலத்திலேயே எப்படி இது சாத்தியமாயிற்று என்று நான் திறந்த வாய் மூடாமல் அந்த stunning visualsஐ பார்த்து மிரண்டிருக்கிறேன். அந்த காட்டாற்று வெள்ளத்தின் சாரல் முகத்தில் தெறிப்பதை உணர்வீர்கள்.

                                            
கின்ஸ்கி நடிப்பைப் பற்றி நான் சொல்வதை விட பார்த்தால் தான் அந்த வீரியம் புரியும். படம் முழுக்க வெறிபிடித்த ஆளாகத் தன்னை வெளிப்படுத்தியிருப்பார். அகுரின் தங்கத்தின், அதிகாரத்தின் மீதுள்ள வெறிதான் படத்தின் அடிநாதம். படத்தில் உண்மையான இந்தியர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்று வலைத்தளம் கூறுகிறது. மேலும் இப்படத்திற்காக அவர்கள் பட்ட கஷ்டங்களை Wikipedia, IMDB போன்ற வலைத்தளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம். படத்தில் வரும் வெள்ளம் உட்பட அனைத்தும் உண்மை. இசையில் பறவைகளின் ஒலியைக் கூட அப்படியே கொடுத்திருப்பார்கள். அற்புதமான இசை. இந்த படம் நிச்சியமாக பார்பவர்களுக்கு ஒரு பூரண அனுபவத்தைத் தரும். இந்த படம் பல விஷயங்களை உணர்த்தும். அது பார்வையாளர்களை பொருத்து மாறுபடும். (எல்லா நல்ல படமும் அப்படித்தான்). Passion for cinema - ஈடுபடுகின்ற செயலின் மீது(இது எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டியதுன்னு நினைக்கிறேன் அது எந்தத் துறையா இருந்தாலும் - சினிமா, எழுத்து, விளையாட்டு, படிப்பு, ஏன் ப்ளாக் கூட) அர்ப்பணிப்பு,ஆர்வம்,நேசிப்பு உள்ள - ஒரு டைரக்டர் எப்படி படம் எடுப்பார் என்பதற்கு இப்படம் ஒரு சிறந்த சான்று.


பி.கு: இத எழுதி முடிச்ச உடன், "வெர்னர் ஹெர்ஸாக், க்ளாஸ் கின்ஸ்கி" கூகிள்ல தேடினபோது படித்தது.
s.ramakrisnan
s.ramakrisnan
கருந்தேள் கண்ணாயிரம் (இதை அவர் எழுதிய போதே படித்திருக்கிறேன்)
கனவுகளின் காதலன் (இதையும் அவர் எழுதிய போதே படித்திருக்கிறேன்)
கதிர்வீச்சு

நான் பெங்களூர்ல வேலை பார்த்துகொண்டிருந்தப்போ, என் அப்பா நாகர்கோயிலில் வேலை பார்த்துகொண்டிருந்தார். மாசத்துக்கு 2 முறையாவது ஏதாவது புத்தகத்த வாங்கி – அவரு படிக்கிறாரோ இல்லையோ- முதல்ல எனக்கு அனுப்புவார். அப்புடி அனுப்பியதுதான் வாடிவாசல் – கிழவனும் கடலும். ரெண்டுமே ஒரே themeனு சொல்லலாம்னு நெனைக்கிறேன். . ரெண்டுமே காலச்சுவடு வெளியீடு. மொழிப்பெயர்ப்பும் சுவாரசியமாக உள்ளது. கிழவனும் கடலும் சின்னப்பசங்களுக்கு பரிசளிக்க அருமையான புத்தகம்..

வாடிவாசல்:


சி.சு.செல்லப்பா அவர்கள் எழுதியது. ஜல்லிக்கட்டு பற்றி அற்புதமாகவும் தத்ரூபமாகவும் எழுதப்பட்டுள்ளது. தன் தந்தையைக் குத்திய காரிக்காளையை, பிச்சி என்பவன் எப்படி அடக்குகிறான் என்பதே கதை. இறுதியாக அடக்கப்பட்ட காரிக்காளையை, அதை வைத்திருந்த ஜமீன்தாரே சுட்டுக் கொல்கிறார். பல இடங்களில் விலங்குகளுக்கே உரிய வெறியும், மனிதர்களுக்கே உரிய சாதி வெறியும் வெளிபடுவதைக் காணலாம். ஜமீன்தார் காளையை கொல்வதைக் கூட இதன் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளலாம். உண்மையிலேயே படிப்பவர்களுக்கு ஜல்லிக்கட்டு களத்தில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும் நாவல் இது.எளிமையான அதே சமயம் வட்டார மொழியுடன் எழுதப்பட்டுள்ளது. இதைப் படித்து 3 ஆண்டுகள் ஆனாலும் பசுமையாக நினைவிலிருக்கின்றது.

இதை எழுதிய சி.சு.செல்லப்பா அவர்கள் பற்றி ஒருமுறை உயிர்ம்மையில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியபின்பு அதிகமாக தெரிந்து கொண்டேன். ஆனால் அவருக்கு இந்நாவலை எழுத தூண்டியது எர்னெஸ்ட் ஹெமிங்வேன் The Sun also Rises-என்று கிழவனும் கடலும் படிக்கும் போது தெரியாது.

கிழவனும் கடலும்:

ஒரு கிழவனுக்கும் மீனுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிய நாவல். நாவல் முழுவதுமே நாமும் கடலில் சந்தியாகு கிழவருடன் பயணிப்பதை போன்ற உணர்வைத் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கிழவர்-தனிமையில் புலம்புவதும், இருநாட்கள் தனி ஆளாய் மிகப் பெரிய மீனுடன் போராடிக் கொல்வதும்(பின்பு வருந்துவதும்), கைகள் மரத்துப்போனலும் தைரியத்துடன் இருப்பதும், அவ்வப்போது பேஸ்பால் பற்றி நினைப்பதும்- நமக்கு மிகவும் நெருக்கமானவராக மாறிவிடுகிறார்.

எர்னெஸ்ட் ஹெமிங்வே–புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர். இவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாவிட்டாலும் படித்ததிலிருந்து தெரிந்துகொண்டது- பல சமயங்களில் சொந்த அனுபவங்களையே (முதல் உலகப்போரில் இத்தாலியப் படைகள் சார்பில் ஆம்புலன்ஸ் டிரைவர் – A Farewell to Arms, பத்திரிகையாளர் - The Sun Also Rises ) நாவலாகவோ, சிறுகதையாகவோ (பெரும்பாலான எழுத்தாளர்கள் அப்படித்தான்) எழுதியுள்ளார். இன்னும் பல எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதியதுலிருந்தும் தெரிந்து கொண்டேன்.

மேலும் அவரைப்பற்றி வாசிக்க:
1. About Ernest Hemingway
2. Ernest Hemingway

என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இயற்கையை நேசித்தவர்; அனுபவித்து அதை எழுத்தில் கொண்டு வந்தவர்,

“The world is a fine place and worth fighting for,

A man can be destroyed but not defeated,

Every man's life ends the same way. It is only the details of how he lived and how he died that distinguish one man from another”

போன்ற வார்த்தைகளை உதிர்த்தவர் – 2 முறை தற்கொலைக்கு முயன்றதுதான். (2ம் முயற்சியில் இறந்தார் அதுவும் shotgunஐ பயன்படுத்தி).

எஸ்.ராமகிருஷ்ணன் சி.சு.செல்லப்பா பற்றி எழுதியது இணையத்தில் கிடைக்குமா என்று தேடியபோது இந்தப் பதிவு கிடைத்தது. இதை மறுபடியும் ஒருமுறை வாசிக்கும்போதுதான் செல்லப்பாவிற்கு ஹெமிங்வேவை மிகப்பிடிக்கும் என்று தெரிந்தது..

கிழவனும் கடலும் (The old man and the sea) மூன்றுமுறை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது..

1.

The old man and the sea, 1958(கவனிக்க நாவல் எழுதப்பட்டது 1951) - இருமுறை அகாடெமி அவார்ட் வாங்கிய அக்கால நடிகர் Spencer Tracy நடித்தது. (என்னிடம் உள்ளது.அருமையான படம்+நடிப்பு)

2.

The old man and the sea, 1990 – Anthony Quinn நடித்தது

3. The Old man and the Sea (1999) – Russian Animated short film

நம்மூரில் வாடிவாசல் போன்று திரைப்படமாக்க அனைத்து அம்சங்களும் உள்ள நாவலை படமாக்க ஏன் யாரும் முன்வருவதில்லை?

வணக்கம்...

நான் வலைப்பூக்களை வாசிக்க ஆரம்பிச்சு ஒரு 2 மாசம்தான் இருக்கும். அந்த ரெண்டு மாசமாவே இந்தக் கொடைச்சல் - நம்பளும் எழுதுனா என்ன? (வேல வேற இல்லாம - சும்மா தான் இருக்கேன்). இப்படியாச்சு ஏதாவது கம்ப்யூட்டருல தட்டிக்கிட்டு இருந்தா எங்க அம்மா புள்ள என்னத்தயோ படிக்கிறான்னு நெனபாங்கள.